16 டிசம்பர் 2010

திரை அரங்கில் ஒரு நாள்.....

திரை அரங்கில் ஒரு நாள்.....
ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதுறேன். கடந்த ரெண்டு மாசமா நல்லா அதிகமான வேலை. என் மச்சுனனோட கல்யாணம்... என்னோட அத்தைக்கு இருதய அறுவை சிகிச்சை (ஆப்பரேசன்)..... என்னோட அம்மாக்கு கால் வலி... கல்லூரியில் வேலை... அப்படி இப்படின்னு இந்த பக்கமே வர முடியல...
சரி இப்போ வந்துட்டோம்ல... கடவுள் புண்ணியத்துல ஏதாவது எழுத முடியுமான்னு பாப்போம் (இதுக்கெல்லாம் எதுக்குப்பா கடவுள் புண்ணியம்னு.... நாத்திகமா கேக்காதிங்க. இதுக்கு மட்டும் இல்ல... எல்லாத்துக்கும் கடவுளோட புண்ணியம் வேணும்).
ஒன்னு தெரியுமா, இந்த பக்கம் வர முடியாத அந்த ரெண்டு மாசமும் அப்போ அப்போ ஏதாவது மனசுல எழுதனும்னு தோணிகிட்டே இருக்கும். வார்த்தை உச்சரிப்புகளின் மகிமை பத்தி தோணுச்சு, உறவுகள் பத்தி தோணுச்சு, வீடு பத்தி தோணுச்சு... இன்னும் ஏராளமா... திரும்பவும் தோணும். அப்ப தெளிவா எழுதுறேன்.
இப்ப விஷயம் என்னானா.... என்னோட கடைசி பதிவுல எந்திரன் படம் பத்தி எழுதி இருந்தேன்ல... அத பாதியிலயே விட்டுட்டு போயிட்டேன். இப்போ அத பத்தி எழுதுறது சுத்தமா நல்லா இருக்காது. ஏன்னா அதப் பத்திதான் அளவுக்கு அதிகமா எலாரும் எழுதிட்டாங்களே... (சன் டிவி ல இந்த படத்தப் பத்தி போதுமான அளவுக்கு எல்லாத்தையும் காட்டிட்டாங்க. இன்னமும், "ரஜினியும் ஐஸ்வர்யாவும் படப்பிடிப்புக்கு வந்த காட்சிகள்" அப்படின்னு ஒரு எபிசொட் மட்டும் தான் போடல.). அந்த பதிவுல திரை அரங்குகள் பத்தியும் ரசிகர்கள் பத்தியும் அப்புறமா எழுதுறேன்னு சொல்லி இருந்தேன்ல. அதப்பத்திதான் இந்த பதிவு. (இப்பதாங்க தலைப்புக்குள்ளயே வர்றோம்...)
எங்க ஊர்ல இருக்குற எந்த திரை அரங்கும் வாங்குற காச கொஞ்சம் கூட செலவழிச்சு சுத்தமா பராமரிக்குறது இல்ல. அவ்வளவு சுகாதார குறைவு. இந்திரன் படத்துக்கு நாங்க ஆறு பேறு போயிருந்தோம். மொத்தமா 900 ரூபா அனுமதி சீட்டுக்கு மட்டும் செலவானது. ஒரு ஆளுக்கு, 150 ரூபா. நாங்க அவ்வளவு பணம் குடுத்து, ரொம்ப சொகுசா பஞ்சு மெத்தை இருக்கைல உக்காந்து படம் பாத்தோம்னு நெனைக்காதிங்க. மரக்கட்டை இருக்கைல உக்காந்து தான் படம் முழுசையும் பாத்தோம். ஒரு பயத்தோடவே... வீட்டுக்கு மூட்டை பூச்சி வந்துறுமோ... பக்கத்துல உக்காந்து படம் பாக்குற ரசிக சிங்கங்கள்ல யாரவது நம்ம இருக்காய் மேல கால தூக்கிபோட்டுருவான்களோ... அப்படின்னு ஏகப்பட்ட பயத்தோடவே படம் பாக்க வேண்டியிருக்குது. சரி, இருக்கைகள் தான் இப்படி இருக்குது, அரங்காவது சுத்தமா இருக்குதான்னு பாத்தா... பாசி படர்ந்த ரொம்ப கவனமா நடப்போமே... அந்த மாதிரி தான் நடக்க வேண்டியதா இருந்துச்சு. ஏன்னா தரை எல்லாம் சளியோட சேந்த எச்சி, வெத்திலை எச்சி, பாக்கு எச்சி, இன்னும் பிற... அவுங்க அவுங்களுக்கு வாயில வந்ததெல்லாம் தரைல தெளிச்சிருந்தாங்க. இது போக, படம் போடுறதுக்கு முன்னாடி, படம் ஓடிகிட்டு இருக்கும் பொது, இடைவேளை சமயத்துல, மற்றும் எல்லா நேரத்துலயும், ஒரே புகை மண்டலம். முன்னாடி பின்னாடி பக்கத்துல இருந்து எல்லா பக்கத்துல இருந்தும் புகையின் வீச்சு.... (உண்மையிலயே நான் இத அதிகப்படுத்தி சொல்லலைங்க... உண்மையிலயே இப்படிதான் இருந்ததது.) படம் போடுறதுக்கு முன்னாடியும் இடைவேளை நேரத்துலயும், "புகை பிடிக்கக் கூடாது", "எதிர் சீட்டு மேல கால் வைக்க கூடாது" அப்படின்லாம் அறிவிப்பு செய்திகள திரைல காட்டுறாங்க. எல்லாமே சம்பிரதாயம் தான். இப்படி அறிவிப்பு செய்யிற திரை அரங்க நிர்வாகிகள், அத கடைப்பிடிக்க தேவையான முயர்ச்சிகள செய்யலாம்ல.... அத செய்யல.
அங்க இருந்த கழிப்பறை...... சுகாதாரக் கேட்டின் உச்சகட்டம். அந்த கழிப்பறை, தண்ணிய பாத்து பல வருசமா ஆகிருக்கும் போல. உள்ள தண்ணி இல்ல. மூத்திரக் கோப்பை (யுரினால் பேசின்) இல்ல. மல கோப்பை, மலத்தால அபிசேகம் ஆகிருக்கு. அவ்வளவு அசிங்கம்.
இவுங்க வாங்குற, பணத்துல ஒரு 5% ஆவது இந்த மாதிரியான விசயங்கள சரி பண்ணுறதுக்கு செலவு பண்ணலாம்ல. பண்ண மாட்டுறாங்க...
இதையெல்லாம் பாக்கும் போதுதான், பேசாம, 30 ரூபாக்கு டிவிடி வாங்குனோமா, வீட்ல உக்காந்து, குடும்பத்தோட பார்த்தோமான்னு இருக்கலாம்னு தோணுது. டிவிடி க்கு எதிரா போராட்டம் நடத்துற போராளிகல்லாம் இதையும் கொஞ்சம் கவனத்துல எடுத்துக்கலாம். இது என்னோட தாழ்மையான கருத்து.
செருப்பால அடிக்கனுங்க.... என்னத்தான். என்ன யாருங்க திரை அரங்கத்துக்கு போயி படம் பாக்க சொன்னது....? எனக்கு திமிருதானங்க... பணத் திமிருங்க... பேசாம, பிள்ள குட்டிகளுக்கு துணிமணி எடுத்து குடுத்துட்டு வீட்ல உக்காந்து, பொண்டாட்டி ஆக்கி குடுக்குற கறிசோற சாப்ப்டுட்டு, நிம்மதியா ஒரு தூக்கம் போட்டுருக்கலாம்.
திரை அரங்கத்துக்குப் போயி படம் பாக்குரதுங்க்றது திமிரு தனத்தின் உச்சகட்டம்ங்க.... நல்லா யோசிங்க.

07 அக்டோபர் 2010

எந்திரன்... சந்திரன்... அமாவாசையா... பௌர்ணமியா !?
எந்திரன். ஏறக்குறைய ஒரு மந்திர வார்த்தை. இது ஒரு முழு நீளத் திரைப்படமா ஒரு வழியா வெளியாகிருச்சு. முதல் நாள் இரவு காட்சிக்கு போயிட்டோம். மொத நாளே அதிகமான காசு குடுத்து படத்துக்கு போனது வெக்கமாத்தான் இருந்துச்சு... சந்தர்ப்ப சூழ்நிலைகள் அப்படி அமைஞ்சதுனால போக வேண்டியதா போச்சு (உண்மையிலயே எனக்கு ஆர்வம் இல்லையான்னு கேக்காதிங்க... நான் கமலஹாசன் படத்துக்கே முதல் நாள் போக மாட்டேன்). நான், என் மனைவி, அண்ணி, சகலை, முகி, வினஷ்யா... ஆறு பேரும் போனோம். (டிக்கெட் காசு, டிக்கெட் எடுக்குறதுக்கு செஞ்ச முயற்சி, தியேட்டரோட சுத்தம், ரசிகர்களின் சத்தம்... இதையெல்லாம் பத்தி அடுத்த பதிவுல எழுதுறேன்)

04 அக்டோபர் 2010

நேர்மையா... திமிரா...?

நேர்மையா... திமிரா...?
கோவில்பட்டில லக்ஷ்மி சங்கர் னு ஒரு உணவு விடுதி இருக்குது. கோவில்பட்டில இருக்குற ஒரு சில சைவ உணவகங்கள்ள இது ஒரு நல்ல உணவகம். சுவையாவும் சுத்தமாவும் எல்லா உணவும் இருக்கும். அந்த உணவகத்துக்கு ஒரு நாள் நானும் என் மனைவியும் சாப்பிட போனோம். தேவையானது எல்லாம் சாப்பிட்டு முடிச்சுட்டு பில் (பில்லுக்கு தமிழாக்கம் என்னாங்க...?) வாங்கி பாத்தேன். 42 ரூபாய் பில் வந்திருந்தது. எங்களுக்கு பரிமார்னவர்க்கிட்ட 50 ரூபாய் குடுத்தேன். பில் Justify Fullதொகைய்ய கல்லால்ல கட்டிட்டு, மிச்சம் 8 ரூபாவ... ஒரு 5 ரூபா காசாவும், ஒரு 2 ரூபா காசாவும் ஓரு 1 ரூபா காசாவும் கொண்டு வந்தாரு. நான், அவருக்கு 5 ரூபா டிப்ஸ் (டிப்சுக்கு தமிழ்ல என்னாங்க...?) கொடுத்தேன். ஓரு ஆச்சரியமான விஷயம் நடந்தது. என்னான்னா... நான் கொடுத்த அஞ்சு ரூபாவ திரும்பவும் என்கிட்டயே குடுத்துட்டு, என் கைல இருந்த 2 ரூபாவ மட்டும் டிப்ஸா எடுத்துகிட்டாரு. எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் அதிர்ச்சியாவும் இருந்துச்சு. இப்படியும் ஓரு ஆளா...? இவரு எப்பவுமே இப்படித்தான் இருப்பாரா.... இல்ல அன்னைக்குத்தான், ஏதோ ஓரு நெனப்புல அப்படி நடந்துக்கிட்டாரா... ஒன்னும் வெளங்கல.
பொதுவாவே... இந்த மாதிரி டிப்ஸ் குடுக்குறது, அவுங்க அவுங்களோட கஞ்சத் தனத்தையும், பெருந்தன்மையையும், திமிரையும் காமிக்கும், அப்படிங்கறது என்னோட தாழ்மையானக் கருத்து (இது, குடுக்குற ஆளையும், வாங்குற ஆளையும், குடுக்கப்பட்ற இடத்தையும் பொறுத்தது).
இந்த சம்பவத்துல, இவரு என்னோட கஞ்சத்தனத்த நக்கல் பண்ணுனாரா...? என்னோட பெருன்தன்மைய அவமதிச்சாரா...? என்னோட பணத்திமிர ஓங்கி ஓரு அறை அறஞ்சாரா....? ஒன்னும் புரியல.
எனக்கு அவரு மேல ஓரு மரியாதை வந்தது. இப்படியும் ஓரு ஆளான்னு...

28 செப்டம்பர் 2010

கோ - மூ - கொ - விலே - கோ - 2

கோ - மூ - கொ - விலே - கோ - 2

இது, எங்களோட வீகா லேன்ட் ட்ரிப் பத்தின என்னோட பதிவு.
எங்களோட ஓட்டுனர் முதல் நாள் இரவே எங்க எல்லாத்தையும் காலையில கொஞ்சம் சீக்கிரமாவே (ஒரு 6... 6.30 மணிக்கு) கெளம்பி இருக்க சொல்லிட்டாரு. ஏன்னா, கொச்சின்ல இருந்து காலைல லேட்டா கெளம்புனா, அதிகமான போக்குவரத்து நெரிசல்ல மாட்டிக்கிட்டு, நகரத்த (city) வெளியேர்றதுக்கே ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகிரும். அதுனால நாங்களும் அடுத்த நாள் காலையில 6.30 மணிக்கெலாம் கிளம்பிட்டோம். ஏற்கனவே எங்க பிளான்ல, சோட்டனிக்கரை அம்மன் கோயில் போகணும்னு இருந்ததுனால, அன்னைக்கு காலைல கொச்சின்ல இருந்து கெளம்பி சோட்டனிக்கரை போயிட்டோம். சோட்டானிக்கரை, கொச்சின்ல இருந்து ஒரு 20 கிலோமீட்டர் குள்ள தான் இருக்கும். இது புகழ் பெற்ற அம்மன் கோயில்கள்ல ஒன்னு. நாங்க போன அன்னைக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிளமைங்குரதுனால கோயில்ல நல்லக் கூட்டம். பசங்க பொண்ணுங்கல்லாம் கோயிலுக்குள்ள போனாங்க. மேடமும் போனாங்க. அந்த கோயிலுக்குள்ள போகணும்னா ஆம்பளை ஆளுங்க எல்லாரும், மேல் சட்டைய கழட்டிட்டுதான் போகணும். இந்த கட்டுப்பாடு, இந்த கோயில்ல மட்டும் இல்ல; கேரளால இருக்குற எல்லா கோயில்கள்லயும் இப்படி ஒரு காட்டுப்பாடு இருக்கு. இந்த முறையில எனக்கு உடன்பாடு இல்லைங்குறதுனால, நான் உள்ள (சந்நிதானத்துக்குள்ள) போகல. (இப்படி ஒரு காட்டுப்பாடு எதுக்குனா... 1. நாம என்ன ஜாதின்னு தெரிஞ்சுக்கிறதுக்காக (அந்த காலத்துல, தாழ்த்தப்பட்டவங்கள கோயிலுக்குள்ள விட மாட்டாங்க) 2. சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்னு உணர்த்துரதுக்காக; பள்ளிக்கூடத்துல யூனிபார்ம் போடுறது மாதிரின்னு வச்சுக்கோங்களேன். அங்க ஒரே மாதிரி கலர்ல சட்டத் துணி போட்டுருப்போம், இங்க... சாமிக்கு முன்னாடி எல்லாரும் எவ்வளவு விலை வுயர்ந்த துணிமணி போட்டுருந்தாலும் அத கழட்டிட்டு வெத்து உடம்போட இருக்கணும். (பொம்பள பிள்ளைகளுக்கெல்லாம் சாமிக்கு முன்னாடி எல்லாரும் சமம்ங்குற மாதிரியான கட்டுப்பாடெல்லாம் இல்லையானு குதர்க்கமாலாம் கேக்கக்கூடாது.) நான், முதல் காரணத்துக்காக இந்த கட்டுப்பாடுங்குரதுனால, உள்ள போகல.) ஆனா, நான் ஸ்டுடன்ட்டா இருந்தப்ப போன டூர்ல, குருவாயூர் கோயிலுக்கெல்லாம் உள்ள போயிருக்கிறேன்.
எல்லாரும் சாமி கும்பிட்டு வந்த பின்னாடி, அங்கையே காலை சாப்பாட முடிச்சிட்டோம். முடிச்சிட்டு, நேரா வீகா லேன்ட் க்கு கெளம்பிட்டோம். ஒரு 10 மணி சுமாருக்கு, வீகா லேன்ட் வந்துட்டோம். எங்களுக்கு முன்னாடியே, அங்க நல்ல கூட்டம் இருந்துச்சு. அது ஒரு சனிக் கிளமைங்க்ரதுனால நல்ல கூட்டம். பத்தரை மணிக்குதான் டிக்கட் கவுண்டர் திறந்தாங்க. எல்லாருக்கும் டிக்கட் வாங்கிட்டு, உள்ள போனோம். நாங்க உள்ள போகுறதுக்கு முன்னாடியே, பஸ்ல வச்சு, எல்லா பசங்க பிள்ளைங்ககிட்டையும் நாங்க ரெண்டு பேருமே உள்ள எப்படி நடந்துக்கிரனும், எப்படி இருக்கணும் அப்படிங்கறதெல்லாம் சொல்லிட்டோம். அது படியே எல்லாரும் நடந்துகிட்டாங்க (ஒரு சில விசயத்தைத் தவிர) ங்கறது ஆச்சரியமான விசயம்தான். எல்லாரும் ஒன்னாவே போயிட்டு வரணும்ங்க்றது மனசுல இருந்தாலும்... உள்ள அது படி இருக்க முடியல. அப்படி இருக்க முடியாதுங்க்ரதுதான் நடைமுறை உண்மை. எல்லாரும் அங்க அங்க பிரிஞ்சு போயி விளையாட ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல எல்லாரும் தண்ணி இல்லாத விளையாட்டுக்குத்தான் போனாங்க. அதுதான் சரியும் கூட.
"ட்வின் பிலிப் மான்ஸ்டர்" ன்னு ஒரு விளையாட்டு... சான்சே இல்ல.... செம த்ரில்லிங். அந்த விளையாட்டுக்கு போகாம வெளிய இருந்து பாத்துக்கிட்டு இருந்த எனக்கே அவ்வளவு த்ரில்லிங்கா இருந்துச்சுனா... அதுல சுத்துனவுங்களுக்கு எப்படி இருந்திருக்கும். அப்படியே தலைகீழா ரெண்டு நொடி நிக்கிது. நாம சேர்ல உக்காந்த நெலமைல ஒரு ரெண்டு நொடி தலைகீழா அப்படியே இருப்போம். அது மட்டும் இல்லாம நாம உக்காந்து இருக்குற சேர் எல்லாப் பக்கமும் ரொம்ப வேகமா சுத்துது. அதுல உக்காந்து சுத்துனவுங்க எல்லாம் ஒரே கூக்குரல்... அது சந்தோசக் குரலா இல்ல பயத்துல கத்துராங்கலான்னு தெரியல. பயத்த வெளிய காட்டக் கூடாதுங்குரதுக்காகவும் கத்தி இருக்கலாம்... தெரியல. ஒரு பைய்யன்லாம் அதுல சுத்திட்டு வந்ததுக்கு அப்புறம் கீழ வந்து வாந்தி பண்ணிட்டான். தல சுத்தும்ல. எப்படி இருந்தாலும், அந்த விளையாட்டு பசங்களுக்கெல்லாம் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். அத மாதிரி இன்னும் நெறைய விளையாட்டுக இருந்துச்சு. அநேகமா பசங்க பொண்ணுங்க எல்லாரும் எல்லா விளயாட்டுளையும் விளையாண்டு இருப்பாங்க. எல்லா விளயாட்டுகள்ளையும், நோயாளிகளுக்கான எச்சரிக்கை வச்சு இருக்காங்க. ரொம்ப நல்ல விஷயம். அது போக, அந்த விளையாட்டுக்கல்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்துச்சுனா, அத சரி பன்னுரதுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் தயாரா வச்சு இருக்காங்க. அந்த ஏரியாவையே ரொம்ப சுத்தமா வச்சு இருக்காங்க. இதுக்குத் தனி கவனம் செலுத்துறாங்க.
இந்த மாதிரி, தீம் பார்க்ல இருக்குற ட்ரை கேம்ஸ்ல பாதுகாப்பு முக்கியம்னா... தண்ணீர் (வாட்டர் கேம்ஸ்)பாதுகாப்போட உடை கவனமும் ரொம்ப முக்கியம். இதுலதான், அதிகமான பொண்ணுங்க கவனக் குறைவா இருந்துர்றாங்க. அது அவுங்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சனையக் குடுத்துருது. அதுலயும், இங்க ஒரு நல்ல விஷயம் செஞ்சுருந்தாங்க... என்னான்னா... வாட்டர் கேம்ஸ் எதுலயும் யாரும் போட்டோ எடுக்கக்கூடாதுன்னு அறிவிப்பு செஞ்சுருந்தாங்க. இது ஒரு நல்ல விஷயம். இந்த மாதிரி எடத்துல போட்டோ எடுக்குறது தான பொண்ணுங்களுக்கு ரொம்ப அதிகமானத் தொந்தரவக் குடுக்குது.
இந்த விசயத்துல நெறைய பொண்ணுங்க ரொம்ப ஜாக்கிரதையா இருந்தாங்க. அவுங்க உடை உடுத்தி இருக்குற விதத்துல எந்த குறையும் இல்லாம, ரொம்ப சரியா பண்ணி இருந்தாங்க. நன்று.
இவ்வாராகத்தானே... எல்லா கேம்சுலையும் விளையாண்டுட்டு, எல்லாரையும் நாலு மணிக்கெல்லாம் வரச் சொல்லி இருந்தோம். ஆனா, எல்லாருமே "பங்க்சுவாலிட்டி புலி" ங்கறதுனால யாருமே நாலு மணிக்கு வரல. பசங்கன்னா அப்படிதான் இருப்பாங்கன்னாலும், கொஞ்சமாவது நேரத்தைக் கடைப்பிடிக்கலாம். இவங்க எல்லாரும் சரியான நேரத்துக்கு வரலைன்னதும், நானும் மேடமும் உள்ள விளையாண்டுகிட்டு இருந்தவங்க எல்லாத்தையும் போயி வர சொல்லிட்டு வந்தோம். அந்தா இந்தான்னு எல்லாரும் ஒரு வழியா வர ஆரம்பிச்சாங்க. கடைசியா எத்தனை மணிக்கு வந்திருப்பாங்கன்னு நெனைக்கிறிங்க.... ஆறு மணிக்கு வந்தாங்க. அப்பாவும் கொஞ்ச பேரு வரல. அந்த குரூப் எதுனா... ஏற்க்கனவே வந்து ரெடி ஆகி, அப்பாவும் வராதவன்கலப் போயி கூப்பிட போனது. இந்த நேரத்துல, மொதல்லயே வந்து காத்துகிட்டு இருந்த க்ரூப்ல கொஞ்ச பொண்ணுங்களுக்கு பசிக்க ஆரம்பிச்ச உடனே அவுங்க சாப்பிட போயிட்டாங்க. நியாயமான ஒண்ணுதான். கடைசியா ஒரு ஆறரை மணிக்கு வீகா லேண்ட விட்டு கிளம்பினோம். நைட் சாப்பாட போற வழியில எங்கயாவது முடிச்சுக்கிரலாம்னு நினைச்சுகிட்டு கிளம்பினோம். எல்லாரும் நல்லா பசில இருந்தோம். அதுனால, உடனடியா வர்ற ஒரு நல்லா ஹோட்டல்ல சாப்புடலாம்னு நெனச்சா... சோதனைக்குன்னு ஒரு நல்லா ஹோட்டல் கூட இல்லைங்க. நாங்க கூட நெனைச்சோம்... பார்டர்லதான் (செங்கோட்டைல தமிழ்நாடு கேரளா பார்டர்ல இருக்குற ஒரு பிரியாணி புரோட்டா கடை) போயி சாப்பிடுவோம்னு. நல்லா வேலையா அதுக்கு முன்னாடியே ஒரு ஊர்ல ஒரு நல்லா ஹோட்டல்ல சாப்பிட்டோம். அப்படியே கிளம்பி ஒரு வழியா 19 ஆம் தேதி அதி காலைல 4.30 மணிக்கு காலேஜ் வந்து சேந்தோம்.
ஒரு நல்ல டூர். சந்தோசமான பயணம். நல்ல படியா முடிஞ்சது.
அப்புறம்... கடைசியா... இந்த இடுகையோட முதல் பாகத்துல முதல் பத்தியில இந்த கட்டுரையோட தலைப்ப பத்தி எழுதியிருன்தேன்ல...? அத கண்டுபிடிச்சீங்களா....?
அது வேற ஒன்னும் இல்லங்க ... கோவில்பட்டி - மூனாறு - கொச்சின் - வீகா லேன்ட் - கோவில்பட்டி. அவ்வளவுதான்.

19 செப்டம்பர் 2010

கோ - மூ - கொ - வீ லே - கோ. - 1

கோ - மூ - கொ - வீ லே - கோ. -1

தலைப்பு வித்தியாசமா இருக்கனுமேன்னு நெனச்சேன். (இல்லைனா படிக்க மாட்டேங்குரிங்கள்ள... எல்லாத்துலயும் வித்தியாசத்த எதிர் பாக்குறிங்க.) அதான், இந்த மாதிரி முதல் எழுத்துகள தலைப்பா வச்சுட்டேன்.

இந்த இடுகை, ஒரு பயணக் கட்டுரை. ஜாலியான பயணக் கட்டுரை. தலைப்ப கடைசில விரிச்சு எழுதுறேன். (நீங்க முடிஞ்சா கண்டுபிடிங்க...)

எங்க டிபார்ட்மென்ட் மூணாவது வருஷ மாணவர்களோட இந்த வருஷம் நான் ஐ வி (தொழிற்சாலை சந்திப்பு (சுத்தமா தமிழ்படுத்தினா... இப்படிதான் வருது - அதாங்க... Industrial Visit) போயிருந்தேன். மொத்தம் நாங்க 55 பேரு (53 பசங்களும் நாங்க 2 வாத்தியாருங்களும்) போயிருந்தோம். மொத்தம் 3 நாளு. முறைப்படி பாத்தோம்னா... ஒவ்வொரு நாளும் ஒரு இண்டஸ்ட்ரி பாக்கணும். ஆனா, நாங்க மொத ரெண்டு நாள் தான் இண்டஸ்ட்ரி பாத்தோம். மொத நாளு மூனார்ல ஒரு டீ இண்டஸ்ட்ரி (கண்ணன் தேவன் டீ இண்டஸ்ட்ரி) ரெண்டாவது நாளு கொச்சின்ல ஒரு இண்டஸ்ட்ரி (கேரளா எலெக்ட்ரிகல்ஸ் அன்டு அலைடு சர்விசஸ் லிமிடட் - KEL) மூணாவது நாளு பாக்கவேண்டிய இண்டஸ்ட்ரி என்னான்னு தெரியுமா....? அதுதான் வீகா லேன்ட் (காமெடியா இல்ல....?).

செப்டம்பர் 15 ஆம் தேதி நைட்டு ஒரு பத்தரை மணி வாக்குல காலேஜ்ல இருந்து கெளம்பினோம். பஸ் காலேஜா விட்டு வெளிய வந்ததுதான் தாமதம்.... பசங்க ஒரே ஆட்டம் தான் (பசங்கிகளும்தான்). அது என்னானே தெரியலங்க... டூர் அப்படினாலே பஸ்ல ஆட்டம் போடணும்... கத்தணும் ங்கறது ஒரு சம்பிரதாயமா ஆகிருச்சு போல. (இப்போலாம் பஸ்சுக்கு உள்ளதான் பசங்க ஆடுறாங்க.... நாங்க டூர் போகும்போதுல்லாம் பஸ்சுக்கு வெளியவும் ஆடுவோம். - இது ஒரு தொட்டு தொடரும் ஆட்டம் அமர்க்களம் போல...). ஆனா இவ்வளவு ஆட்டத்துலயும், ஒரு க்ரூப் ஒரு ரியாக்சனும் காட்டா சும்மா ஒக்காந்து இருப்பாங்க. அவுங்களுக்கு எல்லாம் ஆடத் தெரியாதா.... இல்லைனா ஆடத் தெரியுமா... இந்த எடத்துல ஆடக்கூடாதுன்னு நெனைக்கிராங்களா.... ஆடுறது தப்புன்னு நெனைக்கிராங்களா...? ஒன்னும் புரியாது. அது அவுங்க அவுங்க சொந்த விருப்பத்த பொறுத்தது. நாம ஒன்னும் சொல்லக் கூடாது.

அன்னைக்கு நைட்டு முழுசும் தூங்க முடியல. காலைல ஒரு 6.30 மணி வாக்குல மூனாறு போயி சேந்தோம். நாங்க போயிதான் லாட்ஜ் காரங்களையே எழுப்பினோம். இந்த பசங்க தங்குறதுக்கு எல்லாம் நல்லா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. ஒரு ரூமுக்கு நாளு பேரு ங்கற கணக்குல 14 ரூம் புக் பண்ணிருந்தாங்க. என்னோட ரூம்ல என்கூட ஒரு மூணு பசங்க தங்கி இருந்தாங்க. (இந்த பிளான் எல்லாம் நல்லாத்தான் பண்ணுறாங்க. ஆனா, குடுக்குற காசுக்கு சரியான வசதி கெடைக்குதான்னு பாக்க மாட்டேங்குராங்கலோன்னு தோணுது. - பொதுவா இந்த மாதிரி லாட்ஜ் ல எல்லாம் துண்டு, சோப்பு, எண்ணெய் லாம் தருவாங்க. ஆனா, இந்த லாட்ஜ்ல அந்த மாதிரி எதுவும் தரள. - லாட்ஜ் காரங்க தர மறந்துட்டாங்களா.... மறந்துட்ட மாதிரி இருந்துட்டாங்களா... பசங்க கேக்கலையா... கேட்டு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்களா.... பசங்க இந்த விசயத்துல இன்னும் கொஞ்சம் கவனமா இருந்தா நல்லதுன்னு தோணுது - ஒரு வேள அவுங்க சம்பளம் வாங்கும் போது அதிக கவனமா இருப்பாங்களோ...?). அந்த லாட்ஜ்லயே ரேச்ட்டாரன்ட்டும் இருந்துச்சு. அன்னைக்கு ( 16.09.2010) காலைல அங்கையே சாப்டுட்டோம். நல்லாதான் இருந்துச்சு. கொஞ்சம் அதிக விலையோன்னு தோணுச்சு. அப்புறம் பேசிகிட்டு இருக்கும் போது, கீதா மேடம் சொன்னப்பதான் புரிஞ்சது - கோவில்பட்டிலயே ஒரு தோசை 20 ரூபா க்கு விக்கும்போது... ஒரு டூரிஸ்ட் இடத்துல 25 ரூபாங்குறது ஒன்னும் அதிகம் இல்ல னு.

அப்புறம் அன்னைக்கு காலைல டீ இண்டஸ்ட்ரி பாத்துட்டு, அதுக்கு அப்புறம் சாயந்தரம் நாலு மணி வரைக்கும் மூனாருல இருக்குற இடத்த எல்லாம் சுத்திப் பார்த்தோம். அப்படியுமே, எல்லா இடத்தையும் பார்க்க முடியல. பொதுவா என்னைய பொறுத்த வரைக்கும், மூனாருங்குறது, கேரளா ல இருக்குற ஒரு குட்டி தமிழ்நாடு. அந்த அளவுக்கு அங்க தமிழ் ஆளுங்க இருக்குறாங்க. தமிழ் பேசுறவுங்க இருக்குறாங்க. அப்புறம், மூனாருல அங்க இருக்குற டீ எஸ்டேட்டும், கிளைமேட்டையும் தவுர ஒன்னும் இல்ல. அந்த கிளைமேட்டுதான் அவ்வளவு பேர அங்க இழுக்குது. உண்மைலேயே மூனாறு கிளைமேட் அவ்வளவு சூப்பர். அன்னைக்கு நைட்டு வேற எங்கயாவது போயி சாப்பிடலாம்னு நெனச்சு வெளிய கெளம்புனா... ஒரே மழை. வேற வழி இல்லாம அங்கையே சாப்ப்டுட்டோம். அன்னைக்கு நைட்டு "முகாம் தீ" ( அதாங்க... camp fire) ஏற்பாடு பண்ணிருந்தாங்க. மழை வேற பேஞ்சுகிட்டு இருந்துச்சு. ஆனாலும் விடல... முகாம் தீ ய பத்த வச்சு... ஆட ஆரம்பிச்சுட்டாங்க.

இந்த மாதிரியான முகாம் தீ நிகழ்ச்சி, மழை வாசச்தலங்கள் மட்டும் தான் நடக்குது. இதுக்கு ஒரு காரணம் இருக்குதுன்னு நினைக்கிறேன். என்னான்னா... நைட்டு தூங்கும் போது, குளிர் அதிகமா நம்மக்கிட்ட பிரச்சன பன்னக்கூடாதுங்குரதுக்காக, தீய்ய சுத்தி நின்னு ஆடி உடம்புல உஸ்ணத்த ஏத்திக்கிறது. அந்த தீ ஒரு வெப்பத்தைக் கொடுக்கும். ஆடுரதுனால, நம்ம உடம்புல இருந்து வெளியேர்ற சக்தி ஒரு விதமான உச்னத்தக் கொடுக்கும். இது, குளிர் பிரதேசங்கள்ள, நல்லா ராத்திரி உறக்கத்தைக் கொடுக்கும்.
பசங்க நல்லா என்ஜாய் பண்ணுனாங்க. பொண்ணுங்களும் ஒரு லிமிட்டோட நல்லா என்ஜாய் பண்ணுனாங்க. ஒரு சில பசங்க... அவுங்க சந்தோசத்தைத் தாண்டி, சுத்தி இருக்குரவுங்கள இம்ப்ரஸ் பன்னனுங்குரதுக்காக மட்டுமே ஆடுனாங்க. முக்கியமா, பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்ணுறதுக்காக. விழுந்து விழுந்தெல்லாம் ஆடுனாங்க. இவ்வளவு வெறித்தனமா அவுங்க ஆடுனாலும், சுத்தி நின்னு பாத்துக்கிட்டு இருந்தவுங்களுக்கு அது ஒரு காமெடியாத்தான் இருந்துச்சு.

புதையல் வேட்டை மாதிரி ஒரு கேமும் வச்சிருந்தாங்க (அந்த கேம்... ஊத்திக்கிச்சு...). அப்புறம் என்ன... ஒரு பத்தரை மணி வாக்குல தூங்க போயிட்டோம். அடுத்த நாளு காலைல சீக்கிரமா எந்திரிச்சு கொச்சின் கிளம்பனும்னுட்டு.
அடுத்த நாளு (17.09.2010) காலைல சீக்கிரமா எந்திருச்சு, ஒரு 6.15 மணிக்கெல்லாம் மூணார விட்டுக் கெளம்பிட்டோம். இடைல, கொஞ்ச நேரம் நிப்பாட்டி டீ குடிச்சிட்டு கெளம்பினோம். காலை சாப்பாடுக்கு, இடமலி னு ஒரு ஊருல வண்டிய நிப்பாட்டி சாப்ப்டுட்டு கெளம்பிட்டோம். எங்கள 1.30 மணிக்கு KEL க்கு வர சொல்லி இருந்தாங்க. நாங்க கொசின்குள்ள போகுறதுக்கே 11.45 க்கு மேல ஆகிருச்சு. அதுனால நேர லாட்ஜுக்கு போகாம, பக்கத்துல மலை அரண்மனை க்குப் (Hill Palace) போயிட்டு அப்புறமா இன்டஸ்ட்ரிக்கு போனோம். அந்த மலை அரண்மனை, கொச்சின் ராஜ குடும்பத்துக்கு சொந்தமா இருந்ததாம். இப்போ அத அரசாங்கம் எடுத்துக்கிட்டு, அருங்காட்சியகமா மாத்தி இருக்காங்க. நல்ல வேலைப்பாடுள்ள நெறையா பொருள்கள் வச்சு இருந்ந்தாங்க. ஒன்னே முக்கால் கிலோல ஒரு தங்க கிரீடம் வச்சு இருந்தாங்க. அந்த தங்க காட்சியகத்துக்கு மட்டும் தனியான போலீஸ் பாதுகாப்பு குடுத்து இருந்தாங்க.

அப்புறம், இண்டஸ்ட்ரி (மின் மாற்றி தயாரிப்பு கம்பெனி) பாத்துட்டு, லாட்ஜுக்கு போக அந்த இந்தான்னு, ஒரு ஆறு மணி ஆகிருச்சு. லாட்ஜுக்கு வர்ற வழியிலயே மதிய சாப்பாட ஒரு சுமாரான ஹோட்டல்ல முடிச்சுட்டோம். லாட்ஜுக்கு வந்து ரெப்ரெஷ் ஆகிட்டு, கடைத்தெருவுக்கு கெளம்புனோம். எல்லாரும் அவுங்க அவுங்களுக்கு தேவையான, விருப்பமான பொருள்கள வாங்குனாங்க. கொச்சின்ல, காலணிகள் (சூ, செருப்பு), பைகள் விலை குறைவா கிடைக்கும் போல. இங்க காலேஜ்ல... கான்பரன்ஸ், செமினார், வொர்க்ஷாப் நடத்துரப்ப பார்டிசிபன்ட்சக்கு தர்றதுக்காக வாங்குற பேக் 200 ரூபாக்கு மேல ஆகுது. ஆனா, இதே பேக் கொச்சின்ல 130 ரூபாக்கு கெடைக்குது.

நான், முகிக்கு ஒரு சூ வாங்கினேன். செந்திக்கு ஒரு டிரஸ் வாங்கினேன். நைட்டு சாப்பாட ஆர்ய பவன் ல முடிச்சுட்டு வந்துட்டோம். கடை தெருவுல எங்க க்ரூப்ல ஒரு பொண்ணு, அவளோட மொபைல ஒரு கடைல வச்சுத் தொலைச்சுட்டா. நல்ல வேலையா அந்த மொபைல் அதே கடைலயே இருந்துச்சு. அடுத்த நாள் வீகா லேன்ட் போகணும்ன்னு பிளானோட எல்லாரும் தூங்க போயிட்டோம்.
வீகா லேன்ட் அனுபவத்த, அடுத்த இடுகைல எழுதுறேன்.

13 செப்டம்பர் 2010

கீழ முடி மன்னார் கோட்டை

கீழ முடி மன்னார் கோட்டை

கீழ முடி மன்னார் கோட்டை தான் எங்க சொந்த ஊரு. எங்க அப்பா அம்மா பிறந்த ஊரு. இந்த ஊரு, ராமநாதபுரம் மாவட்டத்துல கமுதி தாலுகால இருக்குற ஒரு கிராமம். ரொம்ப நாளுக்கு அப்புறம் அந்த ஊருக்கு போயிருந்தோம். ரொம்ப நாளுன்னா, ஒரு ஆறு வருசத்துக்கு மேல ஆயிருச்சு. கடைசியா, எங்க அப்பா தாத்தா இறந்ததுக்கு போனது. அப்போ எங்க மகனுக்கு (முகிலன்) ஒன்னே முக்கால் வயசு இருக்கும். அப்ப போனது.
இப்போ, ஊரு ரொம்ப மாறி போயிருச்சு. மண் தெருவெல்லாம் சிமென்ட் தெருவாகிருச்சு. கணிசமான எண்ணிக்கையில மாடி வீடுகள் வந்திருச்சு. எல்லாரும் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. முக்கியமா.... எல்லாருமே டீச்சர் ட்ரைனிங் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க ஊருல பெரும்பாலும் டீச்சர் வேலை பாக்குரவுங்கதான் ரொம்ப அதிகம்.
ரொம்ப வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு போனது சந்தோசமா இருந்துச்சு. நாங்க எல்லாரும், நான், சங்கீதா, முகி, செந்தி, அம்மா, இங்க கோவில்பட்டில இருந்து போனோம். அப்பா மதுரைல இருந்து வந்துட்டாரு. சேசு சித்தப்பா திருச்சில இருந்து வந்திருந்தாரு. செலிமா சித்திதான் வர்ரேன்னு சொல்லிட்டு வரல.
இந்த தடவ போனதுக்கான நோக்கம் என்னானா... ஊருல எங்களுக்கு கொஞ்சம் வீடு நெலம்லாம் இருக்கு. எங்களுக்கு ரெண்டு வீடு இருந்துச்சு. ஒன்னு பெரிய கார வீடு. இன்னொன்னு ஒட்டு வீடு. அந்த கார வீடு உண்மைலயே பெரிய வீடுதான். அநேகமா, அது எங்க பாட்டி இறக்குறதுக்கு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா இடிய ஆரம்பிச்சிருச்சு. எங்க பாட்டி இறக்கும் போதெல்லாம் அந்த வீட்ல பிரேதத்த வைக் முடியல. ஒட்டு வீட்லதான் வச்சு இருந்தோம். எங்க தாத்தா இறந்த போது அவரு பிரேதத்த வைக்க அந்த ஒட்டு வீடு கூட இல்ல. அதுவும் இடிஞ்சு போயிருச்சு. கார வீடு இருந்த இடத்துல, மரத்தடியில தான் வச்சு இருந்தோம்.
இப்போ, அந்த வீட்டு இடம் அது போக இன்னும் கொஞ்சம் இடமெல்லாம் என்ன நிலைமைல இருக்குதுன்னு பாத்துட்டு அத யாராருக்கு எந்த எந்த இடம்னு பிருசுக்கிரலாம்னு போயிருந்தோம். எல்லா இடத்தையும் அளந்து பாத்துட்டு குறிச்சுகிட்டு வந்துருக்கிறோம். ஓரளவுக்கு யாராருக்கு எந்த எந்த இடம்னு முடிவு பண்ணியாச்சு. அந்த இடத்துகெல்லாம் பட்டாவோ, பத்திரமோ எனக்கு தெரிஞ்சு ஒன்னும் இல்ல. இனிமேதான் அதெல்லாம் ரெடி பண்ணனும். இனிகோ அக்கா மாப்பிள்ளைகிட்ட (கருப்பசாமி மாமா) அத பத்தி விசாரிச்சுட்டு வந்தோம். அவரு வீ ஏ ஓ வா இருக்காரு.
இந்த தடவை போனப்ப சாரதா அக்கா ஊருல இல்ல. பெரியம்மா மட்டும் தான் இருந்தாங்க. அங்க போயிதான், நாங்க கொண்டு போன சாப்பாட்ட சாப்பிட்டுட்டு அங்க கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு வந்தோம். பெரியம்மா வீட்ல பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா விளையாண்டாங்க. கெளம்பும் போது, ரெண்டும் நல்லா குளிச்சுட்டு குதியாட்டம் போட்டுட்டு வந்தாங்க. சங்கீதாவும் நல்லா பிரீயாதான் இருந்தா. அவளுக்கு அந்த வீடு புது வீடுதான. எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எங்க தாத்தா இறந்ததுக்கு போனப்போ பெரியம்மா வீட்டுக்கு போனது. அதுக்கப்புறம் இப்பதான். எங்க பெரியப்பா (சாரதா அக்கா அப்பா) இறந்ததுக்கு கூட போகல.
இந்த பயணத்துல யாருக்குமே நோ ஹார்ட் பீலிங்க்ஸ் னு நான் நினைக்கிறேன்.
இனிகோ அக்கா வீடு வந்து ஒரு தொட்ட வீடு. சுத்திலும் தோட்டம் இருக்கும் நடுவுல வீடு இருக்கும். ஒரு நல்ல இடம். கொஞ்ச நேரம் அங்கயும் இருந்தோம். முகிக்கும் செந்திக்கும் அது நிச்சயமா ஒரு வித்தியாசமான அனுபவம்தான். முகி, அங்க ஒரு சின்ன நாய் குட்டி இருந்துச்சு. அதை தூக்கிகிட்டே திரிஞ்சான். நல்லா என்ஜாய் பண்ணுநாங்க.
கொஞ்சம் போட்டோலாம் எடுத்தோம். முக்கியமா நாங்க திரும்பி வரும்போது அருப்புகோட்டைக்கு அப்புறம் நல்ல மழை. அந்த மழையில ரோட்டையும் அதுல வர்ற வண்டிகளையும், கார் கண்ணாடில பட்ட மழை துளிகளையும் அந்த மழை துளிகளை காரோட வைப்பர் துடைக்கிரதையும் போட்டோ எடுத்தோம். அத நீங்களும் பாருங்களேன்.

07 செப்டம்பர் 2010

தமிழ்நாடு அரசு குளிர் சாதனவசதிப் பேருந்து... கடைசி வரிசை இருக்கைகள்...

தமிழ்நாடு அரசு குளிர் சாதனவசதிப் பேருந்து...

கடைசி வரிசை இருக்கைகள்...

நானும் என்னோட நண்பர்கள் 2 பேரும், திருநெல்வேலியில இருந்து கோவில்பட்டி வர்றதுக்காக திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட்ல நின்னுக்கிட்டு இருந்தோம். இங்க எப்படினா, வாரக் கடைசி நாட்கள்ல கோவில்பட்டிய கடந்து போற பஸ்ல கோவில்பட்டி டிக்கெட் ஏத்தமாட்டாங்க. மத்த நாட்கள்ல, கூவி கூவி டிக்கெட் ஏத்துவாங்க. நாங்க நின்னுக் கிட்டு இருந்ததும் ஒரு வாரக் கடைசி நாள்தான். அந்த நேரத்துல, ஒரு தமிழ்நாடு அரசு குளிர் சாதனவசதிப் பேருந்து சென்னைக்கு கிளம்பிகிட்டு இருந்தது. எங்களுக்கும், அதுல பயணம் செய்யலாம்னு ஆசை வந்து, அந்த கண்டக்டர்கிட்ட கேட்டோம். அவரும் ஏரிக்க சொல்லிட்டாரு. ஆனா, பயண சீட்டு கேட்ட உடனே, கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சிட்டோம். திருநெல்வேலியில இருந்து கோவில்பட்டிக்கு அந்த பஸ்ல பயண சீட்டு விலை 60 ரூபா. சாதாரண பஸ்ல 21 ரூபா தான். நாங்க யோசிச்சுகிட்டு இருக்கும் போதே, பஸ் நகர்ந்துகிட்டு இருந்துச்சு. ஒரு வழியா மனச தீத்திகிட்டு, அந்த பஸ்லயே ஏறிட்டோம். அந்த பஸ்குள்ள, நாங்க மூணு பேரு மட்டும் தான் மாணவர்களா இல்லாத பயணிகள். மொத்தமே, 36 இருக்கைகள் உள்ள அந்த பஸ்ல, ஒரு இருபதுல இருந்து இருபத்தஞ்சு பேரு இருந்திருப்போம். எங்க மூணு பெற தவிர மத்த எல்லாரும் அநேகமா கல்லூரி மாணவர்கள்தான்.

சரி.... இப்போ நமக்கு அதுவா முக்கியம்... விசயத்துக்கு வருவோம்... அதுதான் முக்கியம்....

நாங்க மூணு பெரும், கடைசி வரிசை இருக்கைக்கு (2 இருக்கைகள் + ஒரு பெட்டி + 2 இருக்கைகள்) முன்னாடி இருந்த 2 வது இருக்கைல வலப்பக்கம் ரெண்டு பெரும், இடப்பக்கம் நானும் உக்காந்தோம். கடைசி வரிசை இருக்கைலதான் ரெண்டு பேரு உக்காந்து இருந்தாங்க. (உக்காந்து இருந்துச்சுங்க....?) அந்த ரெண்டு பெரும் மாணவர்கள்.... ஆணும் பெண்ணும்.....

பஸ்ல, ஏ சி எபெக்ட் உண்மைலயே சூப்பரா இருந்தச்சு. எங்களுக்கு பின்னாடி உக்காந்து இருந்த அந்த ரெண்டு பெரும் பண்ணுன அசிங்கத்த என்னான்னு சொல்ல...

(இப்போ டைம் ஆச்சு........ மிச்சத்த அப்புறம் எழுதுறேன்....)

இங்க திரும்பவும் தொடர்றேன்.....

என்ன என்னமோ பண்ணுறானுங்க... (இத எல்லாம் நீ என்ன ......க்கு பாக்குற... ஒன்னோட வேலை ..... ர பாத்துகிட்டு போக வேண்டியதுதான... அப்படின்னு நீங்க கேப்பிங்க..?) முடியலங்க. ஏன்னா... நாங்க மூணு பேரும், இந்த பஸ்ல இப்படிலாம் நடக்கும். நாம போயி ஓசில படம் பாத்துட்டு வரலாம்னு, அந்த பஸ்ல ஏறல. அன்னைக்கு அந்த பஸ்ல ஏறுனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது... இந்த மாதிரி பஸ்ல இப்படியும் ஒரு படம் பாக்கலாம்னு.

எனக்கு என்ன பன்னுரதுன்னும் தெரியல... என்கிட்டே "ஜூனியர் விகடன்" புக் இருக்குல... அதோட நம்பர் இருந்துச்சு. அந்த நம்பருக்கு முயற்சி பண்ணிப் பார்த்தேன். அந்த நம்பருக்கு லைன் கெடைக்கல. என்னோட நண்பர்களும் வேண்டாம் வேண்டாம் னுட்டாங்க. எந்திருச்சு போயி அவிங்க பக்கத்துல உக்காந்துரலாமான்னு கூட தோணுச்சு. (அநாகரிகத்துக்கு எதிரான இன்னொரு அநாகரிகமா இருக்குமேன்னு... அப்படி பண்ணல) இப்போ யோசிச்சா... அப்படிக்கூட பன்னிருக்கலாமோன்னு தோணுது. பெறகு எப்படிதாங்க இதுக்கெல்லாம் நம்மோட எதிர்ப்ப காட்டுறது?

அப்படியே..... நாங்க இறங்க வேண்டிய இடமும் வந்துருச்சு. அதாங்க... கோவில்பட்டிக்கு பஸ் வந்துருச்சு. அவிங்கள ஏதாவது செய்யணுமேன்னு தோணிகிட்டே இருந்துச்சு. நாங்க மூணு பேரும் பஸ்ஸ விட்டு கோவில்பட்டில இறங்கும் போது, அந்த ரெண்டு பேருக்கிட்டயும் போயி, "கோவில்பட்டில இருந்து ஒரு பத்தாவது நிமிசத்துல "நள்ளி" னு ஒரு ஊரு வரும். அங்க ஒரு போலிஸ் செக் போஸ்ட் இருக்கு. அங்க போலிஸ் வந்து இந்த பஸ்ஸ ரைடு பண்ணுவாங்க... ஜாக்கிரதையா இருங்க" ன்னு சீரியசா சொல்லிட்டு வந்துட்டேன். அந்தப் பையன் என்னைய ஒருமாதிரி பாத்தான். சொல்லிட்டு நாங்க இறங்கி வந்துட்டோம்.

இதுல என்னனா... அந்த பொண்ணு அவ்வளவு ஒன்னும் ரொம்ப அழகா இல்லங்க. (ரொம்ப அழகா என்ன... சுமாராக் கூட இல்ல....). இந்த அழகுங்குற visayaத்தப் பத்திப் பேசும் போது, ரெண்டு விசயத்த ரொம்ப ஆழமா சிந்திக்க வேண்டி இருக்குது.

1. காதலுக்குத்தான் அழகு முக்கியமோ...?

2. காமத்துக்கு அழகு முக்கியமே இல்லையோ...?

ஏதாவது சொல்லுங்க....

05 செப்டம்பர் 2010

ஏர் டெல்லா... ஏமாத்து டெல்லா...?

ஏர் டெல்லா... ஏமாத்து டெல்லா...?
நானும் என் மனைவியும் ஏறக்குறைய ஒரு 5 வருசமா ஏர் டெல் சிம் கார்டு பயன்படுத்திக்கிட்டு வர்றோம். போன வாரத்துல ஒரு நாள், என் மனைவியோட சிம் கார்டோட சேவை திடீர்னு நிறுத்தப்பட்டது. சிக்னல் இல்ல, கால் பண்ண முடியல, கால் ரிசீவ் பண்ண முடியல. மொத்ததுல, மொபைல் போன் வேலை செய்யுது...ஆனா சிம் கார்டு வேலை செய்யல. ஏர் டெல் கஸ்டமர் கேர் நம்பருக்கு (121,198) போன் பண்ணி கேட்டப்போ, நீங்க உங்களோட அட்ரஸ் பரூப் மற்றும் போட்டோ குடுத்து இருக்க மாட்டிங்க இல்லேன்னா நீங்க குடுத்த டாகுமென்ட்ஸ் எங்கையாவது மிஸ் ஆகியிருக்கும், அதுனால நீங்க அருகில் இருக்கும் ஏர் டெல் டீலர்கிட்ட போயி தேவையான டாகுமென்ட்ஸ் குடுத்திங்கனா இந்த பிரச்சினை சரி ஆகியிரும்னு சொன்னங்க. (சிம் கார்டு வாங்கும் போதே இந்த எல்லா டாகுமெண்ட்சும் கொடுத்தாதான் சர்விஸ் ஆக்டிவேட் பண்ணுவாங்க...இது நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும்னு நெனைக்கிறேன்). நானும், கோவில்பட்டியில இருக்கிற டீலர்கிட்ட போயி இந்த பிரச்சினைய சொன்னேன். அவுங்க என்னோட நம்பர அடிச்சு பாத்துட்டு இந்த நம்பரே இல்லைன்னு சொன்னாங்க. உங்களோட சிம் கார்டு ரிஜக்ட் ஆகிருச்சுன்னு சொன்னங்க. எப்படிங்கன்னு கேட்டேன். அது எங்களுக்கு தெரியாது, நீங்க வேணா ஏர் டெல்லுக்கே போன் பண்ணி கேளுங்கன்னு சொல்லிட்டாங்க. இதே நம்பர்ல வேற ஒரு டூப்ளிகட் சிம் கார்டு வாங்கிகிரலாமான்னு கேட்டேன். நம்பரே இல்லாதப்ப, அந்த நம்பர்ல எப்படிங்க இன்னொரு சிம் கார்டு தரமுடியும்ன்னுட்டாங்க. அப்ப என்னங்க பண்ணுறதுன்னு கேட்டப்போ, நீங்க கேஸ் போடுங்கன்னாங்க. கொஞ்சம் பொறுமையா விசாரிச்சப்பத்தான் தெரியுது... ஏமாந்த சோணகிரி நான் மட்டும் இல்ல... என்னைய மாதிரி இன்னும் நெறைய பேர் இருக்காங்கன்னு.
திரும்பவும், கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் பண்ணி, இந்த விசயத்த சொன்னேன். அவுங்களும் இந்த தடவை செக் பண்ணிட்டு, ஆமா ஆமா உங்க சிம் கார்டு ரிஜக்ட் ஆகிருச்சுன்னு சொன்னாங்க. ஏன்னு கேட்டா அவுங்கள்ட்டையும் பதில் இல்ல. உண்மைய சொன்னா, என்னோட அந்த கால் ல அட்டென் பண்ணுனவுங்களுக்கு (அது ஆணா... பொண்ணானு குரலை வச்சு கண்டுபிடிக்க முடியல) பதில் தெரியல. அப்போ அவுங்க என்ன சொன்னங்கன்னா, உங்களுக்கு ஒரு எஸ் எம் எஸ் இப்போ வரும் அதுல சொல்லியிருக்கிற படி நீங்க செய்யுங்க அப்படின்னு சொன்னாங்க. அந்த எஸ் எம் எஸ்ல *121# காண்டக்ட் பண்ண சொல்லியிருந்தாங்க. (இது ஒன்னும் நம்ம யாருக்கும் தெரியாத புது விஷயம் இல்ல). இந்த பதிலும் என்னோட பிரச்சினைக்கு சரியான தீர்வ சொல்லல. திரும்பவும், எங்க ஏரியா டீலர்கிட்ட போயி இந்த பிரச்சினைய சொன்னேன். அவுங்களும், சார் இந்த பிரச்சினைக்கு நாங்க ஒன்னும் செய்ய முடியாது. நீங்க வேணா மதுரை ஏர் டெல் ஆபிஸ்ல இத பத்தி கம்ப்ளைன்ட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. இல்லைனா, திரும்பவும் கஸ்டமர் கேர் நம்பர்லயே பேசுங்கன்னு சொன்னாங்க.
நானும் சளைக்காம, திரும்பவும் கஸ்டமர் கேர் நம்பருக்கு பேசுனேன். இந்த தடவ அவுங்க என்னோட அட்ரஸ் டீடைல், எந்த வருஷம் சிம் கார்டு வாங்குனேன், எவ்வளவு நாள் பயன்படுத்தாம வச்சு இருந்தேன்னு எல்லா விபரங்களும் கேட்டாங்க. நானும் எல்லாம் சொன்னேன். இந்த சிம் கார்ட ரொம்ப நாளா பயன் படுத்தாம வச்சு இருந்திங்களான்னு கேட்டாங்க. நான் இந்த சிம் கார்ட ஏறக்குறைய 5 வருசமா தொடர்ந்து பயன் படுத்திகிட்டு வர்ரேன். சர்விஸ் கட் ஆன நாளைக்கு மொத நாள் ராத்திரி வரைக்கும் இந்த சிம் கார்ட பயன் படுத்திக்கிட்டு வந்து இருக்கேன்னு சொன்னேன். அப்புறம், என்னோட அட்ரஸ் டாகுமெண்ட செக் பண்ணிட்டு... நீங்க சொன்ன அட்ரஸ் தப்பா இருக்குன்னாங்க. உணமையில, இந்த சிம் கார்ட நான், பாளையங்கோட்டைல இருக்கும் பொது வாங்குனேன். இப்போ கோவில்பட்டில இருக்கோம். இடையில ஒரு 3... 4... மாசத்துக்கு முன்னாடி, என் மனைவியோட மொபைல் போன் தொலஞ்சு போனப்ப... டூப்ளிகட் சிம் கார்டு பழைய நம்பர்லயே வாங்குனோம். அப்போ கொடுத்த அட்ரஸ் ப்ரூப் டாகுமேன்ட்ல இப்ப இருக்குற கோவில்பட்டி அட்ரஸ் இருக்குது. இதுதான் பிரச்சினையே. மொத தடவ சிம் கார்டு வாங்குனப்பவும், டூப்ளிகட் சிம் கார்டு வாங்குனப்போ கொடுத்த அட்ரஸ் பரூப் டாகுமேன்ட்ல வேற வேற அட்ரஸ் இருந்ததுனால எங்க சிம் கார்ட ரிஜக்ட் பண்ணிட்டாங்களாம். இதையும் ஏர் டெல் பண்ணலாம். டிராய் (TRAI) தான் செஞ்சாங்களாம். இதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
நான் அவுங்ககிட்ட திரும்ப கேட்டேன், என்னாங்க இது.... வீடு மாறுனா மாறுன அட்ரசதான கொடுக்க முடியும். இதுக்காக, நாங்க பொய்யான அட்ரசயா கொடுக்க முடியும்... அப்படின்னு கேட்டேன். உண்மையிலே ரொம்ப கஷ்டமா இருக்குதுங்கன்னு சொன்னேன். இந்த மாதிரி ஒரு பதிலா ஏர் டெல்ல்கிட்ட இருந்து நான் எதிர் பாக்கல்ல்ன்னு சொன்னேன். அதுக்கு அந்த பக்கம் இருந்து பேசுனவரு (இந்த தடவ பேசுனது ஆம்பள ஆள் தான்), சார் இதுக்கும் ஏர் டெல்லுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த சர்விஸ் புரவைடரும், அவுங்ககிட்ட இருக்கிற கஸ்டமர லூஸ் பண்ணனும்னு நெனைக்க மாட்டாங்க சார்ன்னு சொன்னாரு.
எனக்கு இன்ன ஒரு சந்தேகம் வந்து, அப்படினா இப்போ நான் வச்சு இருக்கிற இன்னொரு ஏர் டெல் நம்பரும் இதே மாதிரி ஒரு நாள் ரிஜக்ட் ஆகிருமான்னு கேட்டேன். அவரும் அதுக்கு நேரடியா பதில் சொல்லாம, டிராய் அமைப்பு பழைய நம்பர்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா இத வெரிபை பண்ணிக்கிட்டு இருக்காங்க சார்... உங்களோட இன்னொரு நம்பருக்கும் அட்ரஸ் பரூப் கேப்பாங்க... அப்போ நீங்க உங்கள் அருகில் உள்ள டீலர்கிட்ட இத பத்தி பேசுனிங்கனா உங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செயுவாங்கன்னு சொன்னாரு. உடனே நான் கேட்டேன், என்னைய கூடிய சீக்கிரம் வேற ஒரு நல்லா சர்விஸ் புரவைடர்க்கு மாற சொல்லி நீங்க இப்பவே வார்னிங் பண்ணுரிங்களா ன்னு கேட்டேன். அவரு அவசர அவசரமா.... அத நான் சொல்ல முடியாது சார்னு சொல்லிட்டாரு.
இந்த தடவ அந்த கஸ்டமர் சர்விஸ் ஆளு ரொம்ப பொறுமையா சரியான தகவலை சொன்னாரு. நான் அவர்கிட்ட என்னோட வருத்தத்தையும் சங்கடத்தையும் அவுங்களோட மேல் அதிகாரிகள்ட்ட சொல்ல சொன்னேன். அவுங்களோட மெயில் டி யும் கேட்டு வாங்கிகிட்டேன். அவர்கிட்டயே.... நான் இத பத்தி, என்னோட எல்லா நண்பர்கள்கிட்டையும் முடிஞ்ச வரைக்கும் சொல்லுவேன்... அதோட என்னோட ப்ளாக் ளையும் எழுதுவேன்னு சொன்னேன்.
அவர்கிட்ட இருந்து ஒரு 'சோகமான சரி' பதிலா வந்தது.
எனக்கு என்ன புரியலைனா நண்பர்களே...
* சொந்த வீடு வச்சு இருக்குறவங்க மட்டும் தான் மொபைல் போன் சர்விஸ் பயன் படுத்த முடியுமோ...?
* சொந்த வீடோ... வாடகை வீடோ.... வீட்ட மாத்திட்டோம்னா வச்சு இருந்த சிம் கார்ட தூக்கி போட்டுற வேண்டியது தானா...? அதுல எவ்வளவு பேலன்ஸ் வச்சுருந்தாலும்.... (கடைசியா, எங்க சிம் கார்ட்ல 120 ரூபா பேலன்ஸ் இருந்தது)
* எல்லா சர்விஸ் புரைவைடருக்கும் இந்த மாதிரி பிரச்சனை டிராய் அமைப்புக்கிட்ட இருந்து வரும் தானே. அப்படினா, இன்னமும் எல்லாரும் சேர்ந்து ஏன் இதுக்கு ஒரு நல்லா முடிவ எடுக்க மாட்டேங்குறாங்க....?
* ஒரு வேளை, இது ஏர் டெல்லே தவறுதலா செஞ்சுட்ட ஒரு காரியமோ...? அந்த தவற மறைக்கிறதுக்கு, டிராய் மேல பழிய போடுறாங்களோ...?
எது என்னமோங்க... கடைசியா பாதிக்கபடுறது நம்மள மாதிரி (உங்களையும் சேத்துகிரலாம்ல...) சாதரனமானவங்கதான... என்ன பண்ணுறதுன்னு தெரியல...
ஏதாவது செய்யணும்ங்க...
நான் ஏதாவது செஞ்சேன்னா உங்களுக்கு சொல்லுறேன். நீங்க ஏதாவது செஞ்சிங்கனா என்கிட்டே சொல்லுங்க. நாம எல்லாரும் சேந்து செய்யுவோம்.
எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும். அதுக்கு யாரு என்ன செஞ்சாலும் அவுங்களோட சேந்துக்கிற வேண்டியதுதானே...
செய்வோங்க.... வாங்க...

12 ஆகஸ்ட் 2010

இது தப்பா...அது தப்பா... (குடும்பக் குத்து விளக்குகள்)

இது தப்பா...அது தப்பா... (குடும்பக் குத்து விளக்குகள்)
நம்ம ஊர்ல, குடும்பக் குத்து விளக்குனா... அது பொண்ணுங்கதானே... அதப் பத்தி, ரெண்டு நாளைக்கு முன்னாடி, எனக்கு ஒரு பார்வர்டட் மெயில் வந்துச்சு. அத அனுப்பினது என்னோட ஒரு நண்பன். அந்த மெயில்ல ஒரு... ஏழு பொண்ணுங்க சேந்து தண்ணி அடிக்கிற மாதிரி போட்டோ இருந்தது. மொத்தம் மூணு போட்டோ இருந்தது. எல்லா போட்டோலயும் எல்லா பொண்ணுங்களும் நல்லா ஜாலி மூட்ல இருந்தது பதிவாகி இருக்குது. முதல் போட்டோல எல்லா பொண்ணுங்களும், ஒரு குவார்டர் பாட்டில கைல பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. (எல்லாத்துக்கும் சேத்தே ஒரு குவார்ட்டர் பாட்டில் தான்). அடுத்த படத்துல குவார்ட்டர் பாட்டிலோட சேந்து சைடு டிஷ்-ஊறுகாயும், மிக்சிங்க்க்கு fanta வும் இருக்குது. கடைசி படத்துல காலியான குவார்ட்டர் பாட்டிலும் ஒரு ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்க.
இந்த மெயில் எங்க குருப் மைலுக்கு பார்வர்ட் ஆகி இருந்தது. அந்த மெயில் வந்த அன்னைக்கே, எங்களோட இன்னொரு நண்பன் அந்த மெயில் க்கு கண்டனம் தெரிவிச்சு ஒரு மெயில் அனுப்பி இருந்தான். அதுல அவன், இந்த மாதிரி மெயில் எல்லாம் இனிமே அனுப்பாதிங்க... ஏன்னா, இந்த மாதிரி விஷயம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி, ஒரு சந்தோசத்துக்காக பொண்ணுங்க பண்ணுறது ; இதெல்லாம் அவுங்க பண்ணலாம். அப்படின்னு எழுதி இருந்தான். அதோட, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இப்படி வந்த ஒரு மெயில் ல கொஞ்சம் காலேஜ் பொண்ணுங்க பார்ட்டில டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்த மாதிரி ஒரு படம் வந்திருந்தது; அரை நிர்வானமாத்தான்; இந்த மெயில் பார்வர்ட் ஆக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல அந்த படத்துல இருந்த ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டான்னு எழுதி இருந்தான். அதுனால இந்த மாதிரி மெயில் எல்லாம் பார்வர்ட் பண்ணாதிங்க. இது பொண்ணுங்க வாழ்க்கைய பாதிக்கும்னு சொல்லி இருந்தான். இன்னைக்கு அது சம்பந்தமா வந்த இன்னொரு மெயில் ல, இத ஆதரிச்சு இன்னொரு நண்பன் எழுதி இருந்தான். அதோட கூட, முதல்ல பார்வர்ட் செய்யப்பட்ட அந்த மெயில், ஒரு பொண்ணோட ஐடி ல இருந்து வந்திருக்குன்னு கூடுதல் தகவல் தந்திருந்தான்.
இந்த விசயத்த எப்படி பாக்குறது....? பொண்ணுங்க இப்படிலாம் பண்ணலாம்; அது சும்மா ஒரு சந்தோசத்துக்காக, அப்படின்னு கேசுவலா விட்டுறலாமா...? இல்லேன்னா, பொண்ணுங்களோட இந்த மாதிரி நடவடிக்கைலாம், ரொம்ப தப்பானது...இது கலாச்சார சீர் கேடுக்கு ரொம்ப பெரிய வழி வகுக்கும்... அப்படின்னு போர்க்கொடி தூக்கலாமா...?
ஒருவேள, நம்ம போர்க்கொடித் தூக்குரோம்னு வைங்க.... நம்மக்கிட்ட இருக்குற பெண்ணியவாதிகள், இப்ப கலாச்சாரம் இதுனால மட்டும் தான் கேட்டு போகுதா.... நீங்க ஏன் சார் எல்லாத்தையும் தப்பாவே பாக்குறிங்க... ஒங்க வீட்டு பொண்ணுங்கல்லாம் சரியாத்தான் இருக்காங்களா.... அப்படி சரியாத்தான் இருக்காங்கன்னு நீங்க சொன்னிங்கன்னா, உங்க கண்காணிப்பு நடவடிக்கைள ஏதோ தப்பு இருக்கு. அவுங்க அவுங்க... அவுங்க வீட்டு விசயத்த மட்டும் பாருங்க... அடுத்த வீட்டு பொண்ணு என்ன செய்யுதுன்னு, ஓட்டை வழியா பாக்காதிங்க ன்னு எதிர் குரல் எழுப்புவாங்க.
என்ன செய்யறதுன்னு தெரியல.
இன்ன ஒரு மாதிரி யோசிச்சோம்னா, ஆம்பள பசங்க இத விட மோசமாவே பண்ணுறாங்க. அதெல்லாம், இந்த மாதிரி "போஸ்டர்" ஆக மாட்டேங்குது. அப்படியே ஆனாலும், அது அவிங்களோட திறமையின் வெளிப்பாடாத்தான் காட்டப்படுது. என்ன சார் நியாயம்..... அவிங்க பண்ணுனா சரி... அதே இத இவிங்க பண்ணுனா தப்பு. என்ன கொடும சார் இது...? ஒருவேள, இது..இது இவிங்க பண்ணுனா சரி... அதே இத அவிங்க பண்ணுனா தப்பு... அப்படின்னு எதுவும் பாராளு மன்றத்துல புதுசா சட்டம் இயற்றிட்டான்களோ...? இருந்தாலும் இருக்கும். யாரு கண்டது.
லஞ்சம் தேசிய மயமாக்கப்பட்ட நாடுகள்ள நம்ம நாடும் ஒண்ணுதானே...?
மொத்ததுல, என்னதான் சொல்ல வர்ரிங்க...? பொண்ணுங்க தண்ணி அடிக்கிறது தப்பா....இல்லைனா, பொண்ணுங்க தண்ணி அடிக்கிற மாதிரி இருக்குற போட்டோவ பார்வர்ட் செய்யறது தப்பா.....?
எது தப்பு.... எது சரி..... ஏதாவது எங்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்களேன்....

09 ஆகஸ்ட் 2010

எங்களுக்கு சரி....அடுத்தவுங்களுக்கு தப்பு....

எங்களுக்கு சரி....அடுத்தவுங்களுக்கு தப்பு....
நாங்க எல்லாரும் எங்க குடும்பத்தோட, மதுரை போத்திஸ்ல துணி எடுக்கிறதுக்காக போய் இருந்தோம். நான், என் பொண்டாட்டி, என் சகலை, என் மதினி, எங்க பிள்ளைகள், என் மச்சினன் எல்லாரும் போயிருந்தோம். அங்க சுடிதார் செக்சன்ல பர்ச்சேஸ் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, எங்க பக்கத்துல ஒரு கொஞ்ச வயசு லேடியும் அதுக்கு தேவையான துணிகள எடுத்துக்கிட்டு இருந்துச்சு. அப்ப எங்க குரூப்ல ஒருத்தரு, அந்த லேடி செலெக்ட் பண்ணி வச்சிருந்த டிரஸ்கள பாத்து... இது பெரிய ஆளுங்களுக்கா இல்ல சின்ன பிள்ளைங்களுக்கான்னு எங்ககிட்ட கேட்டாரு. அதுக்கு நாங்க எங்களுக்குள்ள பேசிச் சிரிச்சிக்கிட்டு, அந்த ஆளுகிட்டே அங்க இருந்த இன்னொரு டிரெஸ்ஸ காமிச்சு "உன்னோட மனைவிக்கு அந்த மாதிரி டிரஸ் வாங்கி குடுன்னு" சொல்லி கமன்ட் அடிச்சிக்கிட்டு இருந்தோம். சிரிச்சுக்கிட்டு இருந்தோம். இத அந்த லேடி தப்பா புரிஞ்சுகிருச்சு போல... பக்கத்துல அந்த லேடியோட அம்மாவும் இருந்தாங்க. அவுங்க கைல ஒரு சின்ன பாப்பாவும் இருந்துச்சு. அந்த பாப்பா, அந்த லேடியோட குழந்தையா இருக்கும்னு நினைக்கிறேன். இந்த கான்வர்சேசன் நடந்து கொஞ்சம் நேரம் கழிச்சு அந்த லேடியோட அம்மா... எங்க ஆளு ஒருத்தரு கொஞ்சம் தள்ளி தனியா வேற ஒரு துணிய பாத்துக்கிட்டு இருக்கும் போது, "என்ன இது... ஆம்பள பசங்க தனியா வந்தாத்தான் இப்படி கேலி பண்ணி விளையாடுவாங்கன்னு பாத்தா... நீங்க குடும்பத்தோட வந்து இப்படி மோசமா பேசுறிங்க..." அப்படின்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. எங்க ஆளுக்கு கொஞ்ச நேரம் ஒன்னும் புரியல. அதுக்கு அப்புறம், கொஞ்சம் நிதானத்துக்கு வந்து, அந்த அம்மா பேசுறது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்களுக்குள்ள நடந்த கான்வேர்சேசனப் பத்தின்னு புரிஞ்சுக்கிட்டாங்க. இவுங்களும், அந்த கான்வேர்சேசன் அந்த லேடிய பத்தி இல்லன்னு புரிய வைக்க ட்ரை பண்ணுனாங்க. அதுக்குள்ள அந்த அம்மா, வருத்தத்தோட கோபமாவும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அந்த லேடியும் சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. எங்க ஆளுக்கும், கோபம் வந்துருச்சு. இவுங்களும் கோபத்துல விரல எல்லாம் சொடுக்கி, நீட்டி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க ஒன்னும் கமன்ட் அடிக்கிற அளவுக்கு இல்லையேன்னு... அந்த லேடியோட அழகைப் பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அவுங்களும் பதிலுக்கு எங்க குடும்பத்த ரவுடி குடும்பம்னும், எங்க சைடு சத்தம் போட்டவர ரவுடின்னும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. நடுவுல வேற ஒருத்தரு வேற வந்து, பொம்பளை ஆளுங்க எடுக்குற டிரெஸ்ஸ பத்தி ஆம்பளை ஆளுங்க எதுக்கு பேசனும்... அப்படின்னு நியாயம் சொல்லிட்டுப் போனாரு. அதுக்குள்ள அந்த லேடி, யாருக்கோ அதோட செல் போன்ல இருந்து கால் பண்ணி, அவர வர சொல்லிருச்சு. அவரும் வந்தாரு. அவருமே, கொஞ்ச வயசு ஆளுதான். அவரு, அவரு பங்குக்கு நியாயத்தக் கோபத்தோடக் கேட்டாரு. அவருகிட்டயும், கொஞ்சம் நிதானமா (பட படப்போடதான்...) விசயத்த விளக்கவும்.... சரி சரின்னுட்டு கொஞ்சமும் திருப்தி இல்லாம, அவுங்க எல்லாத்தையும் அந்த பக்கமா கூட்டிக்கிட்டு போனாரு. நாங்களும் கிளம்பி வந்துட்டோம்.
இதுல பாத்திங்கனா, நாங்க பேசுனது எங்களுக்கு தப்பா படல. ஆனா பக்கத்துல இருந்தவுங்களுக்கு, அவுங்களைப் பத்திதான் பேசுறோம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்கள்ள... ஒருவேளை, இந்த நிகழ்ச்சில, அந்த லேடி இடத்துல நாம இருந்திருந்தோம்னா... நமக்கும் அப்படித்தான இருக்கும். சங்கடமாத்தான இருந்திருக்கும். அதோட... அவுங்க கோபப் பட்டு பேசுனாலும், நாம எதுக்கு கோபப் படனும்...? எதுக்கு விரல நீட்டி, சொடக்கு போட்டு, சத்தமாப் பேசனும்...? அமைதியா, ஒரு சாரி சொல்லிட்டு, அந்த எடத்த விட்டு வந்திருக்கலாமே...? அதுக்கு ஏனோ, நம்ம உடன் பட விருப்பப் படாம இருக்கோம்.
சண்டை போடாம... சண்டைய விட்டு விலகி வர்றதுதானே புத்திசாலித்தனம்...
என்ன சொல்றிங்க...?

23 ஜூலை 2010

தண்ணீர்.......தண்ணீர்..........

தண்ணீர்.......தண்ணீர்..........
இந்த முறை, தேர்வு விடைத்தாள் திருத்துவதற்காக திருநெல்வேலி சென்றிருந்தேன். அங்கு, அரசு பொறியியல் கல்லூரியில் பணி நடைபெற்றது. நாங்கள் அங்கு சென்ற நாள் முதல் ஒரு விஷயத்தை கவனித்துக் கொண்டு வந்தேன்; நாங்கள் திருத்திகொண்டிருந்த துறை கட்டிடத்தின் ஒரு கழிப்பறையில் உள்ள ஒரு தண்ணீர் குழாயில் தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருந்தது. அதை யாருமே சரி செய்ய முன்வரவில்லை; அதனை அத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் யாருமே முன்வரவில்லை; இது அத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்ததா எனவும் தெரியவில்லை. நான் உட்பட அதனை யாருக்கும் தெரியபடுத்தவில்லை.
ஒழுகிக்கொண்டிருந்த தண்ணீரை நான் அளந்து பார்த்தேன். ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 1.33 லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு 1915 லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. எல்லா நேரமும் இதே அளவில் தண்ணீர் வீணாகாது என்று எடுத்துக் கொண்டாலும், தோராயமாக 1500 லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. இதனை, ஒரு குடும்பத்திற்கான ஒரு நாள் தண்ணீர் தேவை தோராயமாக 10 லிட்டர் என கொண்டால் 15 குடும்பத்திற்கான தண்ணீர் விரயமாகிக் கொண்டிருந்தது.
என்னால் முடிந்த அளவிற்கு, இதனை எனது நண்பர்களிடம் மட்டும் தெரியபடுத்தினேன். அவர்களும் வருத்தப்பட்டார்கள். இது சம்பந்தமாக வேறு ஏதாவது செய்திருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது. தண்ணீரின் அவசியம் இன்னும் எனக்கு (நமக்கு) சரியாக புரியவில்லையோ என தோன்றுகிறது. அதனால்தான் இந்த அலட்சியம்.
ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு முதலில் தைரியம் வேண்டும்!

06 ஜூலை 2010

நியுமராலஜி

ஒருவரைக் குறிப்பிட்டு அழைக்கப் பயன்படும் பெயரில் என்ன இருக்கிறது? பெயரின் பொருள் பலனளிக்குமா அல்லது பெயரை உருவாக்கும் எழுத்துகள் பலனளிக்குமா?
இன்று, மிகப்பிரமாண்டமான தொலை தொடர்பு சாதனமான தொலைகாட்சியில் கூட பெயருக்கான பலனை ஆராய்ந்து, ஏற்கனவே இருக்கும் பெயரை மாற்றி அமைத்து நமது வாழ்வை வளமாக்க, ஏகப்பட்ட வல்லுனர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால் அங்கு, அவர்கள் வாழ்க்கை மட்டுமே வளமாகிறது. நமது நேரம் வீணாகிறது. அனைத்துப் புத்தகக் கடைகளிலும் நியுமராலஜி சம்பத்தப்பட்ட புத்தகங்கள் ஒன்றாயினும் கிடைக்கும் நிலை இன்று உள்ளது.
நியுமராலஜி. இந்த வார்த்தையில் இருப்பது என்ன? என்னைப் பொறுத்த வரை இதற்கு ஏமாற்று வேலை என்றே பொருள் கொள்ளலாம்.
காரணங்கள்:
(1) ஒருவரின் நடத்தையாலும் நற்செயல்களாலும் அவரின் பெயருக்கு பெருமையா அல்லது அவரின் பெயரால் அவருக்குப் பெருமையா?
(2) பிறந்தவுடன் ஒருவருக்கு பெயர் பலன், ராசி பலன் பார்த்து அவரைக் கேட்ட சவகாசங்களுடன் வளர்த்தோமானால், அவரை, அவருக்கு இட்டப் பெயர் உயர்த்துமா?
(3) மேலும், நியுமராலஜி என்பது ஆங்கில எழுத்துகள் 26க்கு மட்டுமே, 1,2... என்று எண் மதிப்புகளை இட்டு அவற்றை கூட்டி பலன் சொல்லும்.
இதில், நமது அழகிய தமிழ் பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கு பலன் காண வேண்டும். என் இந்த நிலை? ஆங்கிலத்தில் 26 எழுத்துகளுக்கு எண் மதிப்புகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது சுலபம். அதே சமயத்தில், தமிழின் 247 எழுத்துகளுக்கும் எண் மதிப்புகளை ஞாபகத்தில் வைப்பது என்பது சற்றே கடினமான செயல். எனாவேதான், தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதற்காக நியுமராலஜிச்டுகள் அடுத்தவரின் பெயரில் விளையாடுகின்றனர்.
எனவே, நமது பெயர், நமக்கு அழகு சேர்க்கும், பெருமை சேர்க்கும் என்பதை மறந்து நமது நடத்தையால் நமது நற்செயல்களால் நமது அழகுப் பெயருக்குப் பெருமை சேர்க்கலாம் என்பதை நினைவில் கொள்வோம்.

28 ஜூன் 2010

அதிகாரியும்... அரசியல்வாதியும்.

நேத்து சாயங்காலம் வீட்ல இருந்து கோவில்பட்டி போகும் போது (முகிலன பாட்டு கிளாஸ்ல விட போனேன்) பை பாஸ் பால எறக்கத்துல, போலிஸ்காரங்க கொஞ்ச பேரு நின்னு போற வர்ற வண்டிகள நிப்பாட்டி லைசன்ஸ், மத்த டாகுமென்ட்ஸ் எல்லாம் இருக்குதான்னு செக் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு வண்டிய நிப்பாட்டி வழக்கமான விசாரணைகள் நடத்த ஆரம்பிச்சாங்க. அந்த வண்டிக்கு சொந்தகாரர், அந்த ஏரியா கிராம பஞ்சாயத்து தலைவர். போலீஸ்காரங்கல எகிற ஆரம்பிச்சார் பாருங்க... நான் யாருன்னு தெரியுமா...ஆள் தெரியாம வண்டிய நிப்பாட்டிடிங்க...என்கிட்டயே லைசன்ஸ் கேக்குறிங்களா...நான் ஒரு கட்சிக்காரன் (ஆளுங்கட்சி) என்னையே நிப்பாட்டுறிங்கலான்னு ஒரே சத்தம் போட்டார். அங்க டூட்டில இருந்தது, அந்த வண்டிய நிப்பாட்டினது ஒரு லேடி போலிஸ். அவுங்களும் விடல... நீங்க யாரு என்னனு பாத்து வண்டிய நிப்பாட்டல. எல்லா வண்டிய நிப்பாட்டுன மாதிரிதான் உங்க வண்டியையும் நிப்பாட்டினேன். ஒரு டாக்குமெண்டும் இல்லாம என்னென்னமோ பேசுறிங்க...அப்படி இப்படின்னு இவுங்களும் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க.
உண்மையிலயே, அந்த லேடி போலிஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டாதான் இருந்தாங்க. ஆனா அந்த பஞ்சாயத்து தலைவர் (கட்சிகாரர்)தான் அவரோட பவர ரொம்பவே மிஸ் யூஸ் பண்ண ஆரம்பிச்சாரு.
ஒரு விசயத்த நல்லா கவனிச்சு பாத்தோம்னா ஒரு நெடு நாளைய உண்மை இங்க புரியும். என்னானா, வேல செய்யற அதிகரிங்கள வேல செய்ய விடாம தடுக்குறது... இந்த மாதிரி அரசியல் வாதிகள்தான். என்ன செஞ்சு இதையெல்லாம் சரி பண்ணுறதுன்னு தெரியல.
ஒரு பக்கம் பயமா இருக்கு. இன்னொரு பக்கம் அவுங்கள அடிக்கனும்னு ஆத்திரமாவும் இருக்கு. இந்த மாதிரியான விசயங்களுக்கு ஒரு நல்லா தீர்ப்பு கெடச்சா எல்லாருக்கும் சந்தோசம்தான். பாப்போம், என்னைக்காவது ஒரு நாள் விடியாமலா போயிரும்...?

22 ஜூன் 2010

உனக்கு...?

முன் சென்ற உன்னை
பின் வளைத்து நான் தந்த
முத்தத் தருணங்கள்...
அதில்
நீ காட்டிய
கோபச் சிரிப்புகள்...
என் கவனம் ஈர்க்க
எனக்காக மட்டும்
வெளியே தலை காட்டிய
உன் உள்ளாடைகள்...
என்னைத் திரும்பிப் பார்க்கச்
செய்ய
இசையாக நடந்த
உன் கொலுசுக் கால்கள்...
வெட்கமாய்
நீ உதிர்த்த
ச்சீ ... போடா... க்கள் ...
காதலை காதலுடன்
பேசிய
உன் கண்கள்...
அத்துனையும்
ஈரம் காயாமல்
இன்னும் என்னுள்.
நீ...
உனக்கு...?

என் காதல்!

இதமாய் வருடி
சுகம் தரும்
நாணல்
என் காதல்.
நீ தென்றலா
சூறாவளியா...?

நான் கடவுள்!

மையத்தில் அமர்ந்திருந்தேன்.

மதிஎங்கும் அலைகழிப்புகள்.

இரு புறமும் என்னை அமர்த்திப் பார்த்தேன்.

இருபுறமும் மாறி மாறி

தங்களை நிரூபித்தன.

அகமும் புறமும்

கருப்பும் வெள்ளையுமாகவே இயங்கின.

வளத்தின் மீதான அலட்சியம்

சில நிகழ்வுகளால்

அதன் மேல் பயத்தைத் தந்தது.

சிந்தை சிதறி

எதுவும் சிறை படவில்லை.

ஆனாலும்

என் மனம் அரற்றிக் கொண்டேஇருந்தது...

நான் கடவுள்!

17 ஜூன் 2010

நானும் ஆடும்

உன்னையும்
நீ இருக்கும் கொட்டிலையும்
நான் பார்க்கத் தவறுவதில்லை...
ஒவ்வொரு முறையும்
அந்த வீட்டை நான்
கடக்கும்பொழுதும்
நீயும்
என் மீதான
உன் பார்வையை
முடிந்த வரை தவிர்ப்பதில்லை.
சில சமயங்களில்
நான் பார்த்திருக்கிறேன்...
உன்னை ஆட்கொண்டிருக்கும்
பசி
அடங்குமலவுக்கு மட்டும்
சிறு புல் கட்டோ
இல்லை தழைகளோ
உன் முன் பரப்பப்பட்டிருக்கும்.
மிக மகிழ்ச்சியோடு
நீ உண்ணத் தொடங்கியிருப்பாய் .
பல வேலைகளில்
உன் முன்
உன் பசி தேவைக்கும்
அதிகமான
மாமிசப் படையல்
படைக்கப்பட்டிருக்கும்.
நீ
அதனை வெறுத்து
மறு நாள் உனக்கு
அளிக்கப்படவிருக்கும்
புல் கட்டுக்காய்
காத்துக்கொண்டிருப்பாய்.
நான் வெட்கி சிறுத்து
தலை குனிந்து
உன்னைக்
கடந்துவிடுவேன்.
என்னை
சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.
நானும் பசித்திருந்திருக்கின்றேன்
எனக்கும் உன்னைப் போலவே
உணவு வழங்கப்பட்டிருக்கிறது
சில சமயம்
என் உடலுக்கு
உகந்த உணவு.
பல வேளைகளில்
எனக்கு சிறிதும் ஒவ்வாத
மலமும் சிறுநீரும்.
உன்னைப் போல
எதுவும் உண்ணாமல்
பசியை வெல்ல
என்னால் இயலாது.
மலத்தை வழித்து
தின்றுவிடுவேன்.
சிறுநீரை மண்டியிட்டு
நக்கி குடித்துவிடுவேன்.
பசியை தனித்துக் கொள்வேன்
இப்போதெல்லாம்
முன்னைப் போலில்லை.
மலம் மணக்கத் தொடங்கிவிட்டது
சிறுநீர்
சர்க்கரைப் பாகாகிவிட்டது.
இச் சில நாட்களாகதான்
நான் உன்னைக் கண்டு
வெட்கிச் சிறுத்து விடுகிறேன்.
உன் மேல் பொறாமையும் கூட.
நானும் ஆடாகப் பிறந்திருக்க வேண்டும்.
பரவயில்லை.
இப்பிறவியை
மணக்கும் மலத்துடனும்
இனிக்கும் சிறுநீருடனும்
மனிதனாகவே
கழித்துவிடுகின்றேன்.
என்
அடுத்த பிறவி
ஆடாக
அமைய
நீயும் வேண்டிக்கொள்.



16 ஜூன் 2010

மலரும் மோகப் பூக்கள்

மலரும் மோகப் பூக்கள்
உன்னைக் கண்டு
என் கண்களில் மோகப்
பூக்கள் பூக்கும்.
உன் உதடுகளில்
மோகனப் புன்னகை மலரும்.
உச்சி முதல் பாதம் வரை
உள்ளபடியே உன்னை
உள்வாங்கிக் கொள்வேன்.
என் கண்களின்
பயணத்தில்
உன் உடல் சிலிர்க்கும்.
உன் உதட்டுப் புன்னகை
உதிரத் தொடங்கும்.
அதை நான்
என் இதழ்களில் ஏந்துவேன்.
வேறெந்த தித்திப்பும்
என் புத்திக்கு எட்டாது.
உனக்கும்.
இரு சோடி கால்கள்
தரையில் அலையும்
இரு சோடி கைகள்
சுவரில் அலையும்.
விரல்கள் விரைந்து அலைந்து
விளக்கை விலக்கும்.
இருளில்
உன் முகம் மூடியிருக்கும்
கரங்கள் பிரிக்கின்றேன்.
என் கண்கள் கூசுகின்றன.
நீ இதழ் பிரித்து சிரிக்கின்றாய்.
நான் என் கண்கள் மூடி
உன் இதழ்கள் மறைக்கின்றேன்.
இரண்டே நொடியில்
இரு சோடி இதழ்கள் வழியே
இதயம் இடம் மாறுகிறது.
அனைத்துக்கும் நடுவே
அணைப்பும் அரங்கேறுகிறது.
உடைகள் கசங்கி
உடல் பிதுங்கி
உதறி பிரியும்போது
ஏதோவொரு உன்னதம்.
இரு உடல்களும்
உடைகள் துறக்கின்றன.
கதவுகள் திறக்கின்றன.
உடல் பிசைந்து
இறுகத் தழுவி
இதயம் நொறுங்க இயங்கி
இவ்வுலகைக் கடந்து....
இரண்டாம் முறை
உடல் பிரிந்து
போர்வைக்குள் உடல் மறைத்து
உள்ளங்களை உடைத்து
வார்த்தைகளை உதிர்க்கின்றோம்.
உனக்குப் பேச்சும்
எனக்கு செயல்களும் நிறைய
போர்வைக்குள் சில நேரம்
என் கரங்கள்
மலைகள் மூடுகின்றன
பள்ளம் மறைக்கின்றன.
உன் வெட்கப் புன்னகை...
காதல் பார்வை...
என்னை கிறங்கச் செய்கிறது.
இருவரும் மல்லார்ந்து பார்த்தால்
காற்றாடி சுழன்று கொண்டிருக்கிறது.
சுழற்சி தொடங்கிய
இடத்திலேயே முடிகிறது
முடிந்த இடத்திலேயே தொடங்குகிறது.
மீண்டும் மீண்டும்....


15 ஜூன் 2010

முயன்றுதான் பார்ப்போமே...

முயன்றுதான் பார்ப்போமே...

  • ஆள் இல்லாத இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார உபகரணங்களை (பேன், லைட்) அணைத்துவிடுவோம்.
  • பயன்பாடு இல்லாமல் தண்ணீர் வீணாவதை முழுவதுமாகத் தவிர்ப்போம்.
  • குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மரக்கன்று ஒவ்வொரு வருடமும் நட்டு வளர்ப்போம்.
  • நடந்து செல்ல முடிகின்ற இடங்களுக்கு நடந்தே செல்வோம் - பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற எரிபொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.
  • சமையல் எரிபொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.
  • பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் காகிதங்கள், பிளாஸ்டிக் தம்ளர்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்போம்.
  • பொது இடங்களில் எச்சில் துப்புவதை, குப்பைகள் போடுவதை நிறுத்துவோம்.
  • சுத்தமாக இல்லாத பொது கழிப்பிடங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்போம் - அதிகாரிகளிடம் தெரிவிப்போம்.
  • வயதில் மூத்தவர்களை எல்லா சமயங்களிலும் மரியாதையாக பேசுவோம், மரியாதையாக நடத்துவோம்.
  • வயதில் சிறியவர்களுக்கு நல்லா விசயங்களை மட்டும் சொல்லிக் கொடுப்போம். அவர்களிடம் அன்பாக அணுகுவோம்.
  • பெரியோரை மதிப்போம், சிறியோரை அன்பாய் அணைப்போம், இயற்கையை பாதுகாப்போம், மனித நேயம் வளர்ப்போம். நல்லா சமுதாயம் படைப்போம். வலிமையான நாட்டை உருவாக்குவோம்.

ஒரு மரத்துப் பழம்

ஒரு மரத்துப்
பழங்களிலேயே சுவை மாறுமோ?
உன் வீட்டில்
நீ மட்டும் தனி அழகு...?

வார்த்தைகள்

வார்த்தைகள்
ஏதேதோ எழுத நினைத்து
வார்த்தைகளை மனதில்
சேர்த்து
பேனா தேடி பேப்பர் எடுத்து
வார்த்தைகளுக்காய்
வாசல் திறந்து
வருகைக்காய் நோக்கினால்...
வக்கனையாய் அமர்ந்துகொண்டு
வர மறுக்கின்றன!

எட்டாக் கனி

எட்டாக் கனி!
விண்தாண்டி
விண்மீன் பிடிக்க
கை நீட்டி கால்கள் எக்கி... எக்கி....
முடியவில்லை.
நீ எனக்கு
என்றும் எட்டாக் கனிதான்.

05 ஜூன் 2010

என் திருமண அழைப்பிதழ்

"அன்பே மனிதம்"
காதலொருவனை(ளை)க் கைப்பிடித்தே அவன்(ள்) காரியம் யாவினும் கைகொடுத்து.
-பாரதியார்.
திருமண அழைப்பிதழ்
உள்ளன்புடையீர்,
வணக்கம்.
வள்ளுவராண்டின் (2032)
இவ்வினிய நாளில் (04-11-2001)
வாழ்க்கைப் புத்தகத்தின்
ஓர் புதிய அத்தியாயத்திற்கு
நாங்கள்
அகரம் இடுகிறோம்.
இதில்
sangeetha(a) ஸ்வரங்கள்
sanka(r) மம் ஆகின்றன.
எங்கள் இலட்சியங்கள்
வெற்றிக்காக
சீர் செய்யப்படுகின்றன.
இவ்வினிய நாளில்
உங்கள் வருகையை
மறுப்பின்றி
எங்கள் புத்தகத்தின் பக்கங்களில்
பதிவாக்குங்கள்.
அத்தியாயம் பிழையின்றி
வெளிவர வாழ்த்துங்கள்.
என்றும் அன்புடன்
கி.சங்கர்
கோ. சங்கீதா
காலை 10.45 - 11.45
மலேசியா மஹால் திருமண மண்டபம்,
இந்திரா நகர், கோ.புதூர், மதுரை - 7

"மறுப்புகள் மறுக்கப்படுகின்றன"

அழகான தவறுகள்.

அழகான தவறுகள்.
அழுகைச் சத்தம்!
உணர்ந்து கொண்டேன்.
நான் பிறந்து விட்டேன்.
உடல் சொல்லுமாமே...?
நான் இவனென்று.
இனிப்புகள் சுவைக்கப்பட்டன.
குழந்தையில்
கலந்தே கிடைக்கப்பெற்றன.
இவனதும் இவளதும்
வளர் பருவத்தில்
பல்லாங்குழியும் தாயமும்
மனதுக்குப் பிடித்தன.
கிட்டயும் பம்பரமும்
கரங்களில் திணிக்கப்பட்டன.
பின்புறம் இடுப்பு வரை
பாவாடையை தூக்கி
முன்புறம் முட்டியைப்
பாவாடையால் மூடி
சிறுநீர் கழிக்க ஆசை.
அரைக்கால் டவுசருக்குள்
அம்மணம் அமுக்கப்பட்டது.
மனம் மஞ்சளை நாடியது
உடல் சவரக்கடைக்குள் தள்ளப்பட்டது.
பூ தாகத்தால்
தலை முடி வறண்டு போனது.
கைகள் கல் சாமிகளுக்குப்
பூக்களை மாலையாக்கியது.
உடல்
நான் இவன் என்றது
மனம்
நான் இவள் என்றது.
அவர்கள் புறம் பார்த்தார்கள்
நான் அகம் பார்த்தேன்.
என் வெளி அழகானது.
இறைவனின்
அழகான தவறுகளில்
நானும் ஒன்று.

உன்னைப் பிடிக்கும்

உன்னைப் பிடிக்கும்
என்
முறுக்கு மீசை
முள் தாடி
முழங்கை வரை மடிக்கப்பட்ட
முழுக்கைச் சட்டை
தும்பை வண்ண வேட்டி
எதுவும் ஒவ்வாது உனக்கு.
எனக்கு
உன்னைப் பிடிக்கும்.

நானும் தமிழும்.

நானும் தமிழும்.

நானும் அவளும்

முப்பது வருட

நண்பர்கள்!

நான் அவ்வப்போது

அவளைக் கொல்வேன்.

அவள் எப்பொழுதும்

சிரித்திருப்பாள்.

அவள் சாகாவரம்

பெற்றவள்.

நான் அவளைக்

கொல்லும் வரம் பெற்றவன்.

கொலைகள் தொடரும்.

04 ஜூன் 2010

வாங்கடா வாங்க 2010

Å¡í¸¼¡ Å¡í¸ 2010

þó¾ ÅÕºõ “Å¡í¸¼¡ Å¡í¸” ¿¢¸ú º¢ÈôÀ¡¸ ¿¼óÐ ÓÊó¾Ð. þó¾ ÅÕ¼ò¾¢ü¸¡É “Å¡í¸¼¡ Å¡í¸” ¿¢¸ú¨Â ¿¼òОüìÌ «Õû ¦ºó¾¢Ä¢ý ÀíÌ þýȢ¨Á¡¾Ð. «Åý¾¡ý ӾĢø þ¾¨Éô ÀüȢ §À¨É ¬ÃõÀ¢ò¾Ð. À¢ýÉ÷ «Ð ¦ÁÐÅ¡¸ ÝÎ À¢ÊòÐ, ¦Àí¸ÖÕÅ¢ø ¿¼òÐÅÐ ±É ÓÊ× ¦ºöÂôÀð¼Ð. ¦ƒÀ¢, ¸¡÷ ÁüÚõ ƒí¸¢ø «¾ü¸¡É ²üÀ¡Î¸¨Ç ¦ºö §¸ðÎ즸¡ûûôÀð¼¡÷¸û. ²üÀ¡Î¸û ¿¼óЦ¸¡ñÊÕìÌõ §À¡§¾, þ¨¼Â¢ø ¸¡÷ ¸ÆñΦ¸¡ñ¼¡Öõ (¸¡÷ ¦ºý¨ÉìÌ Á¡üÈÄ¡¸¢ ¦ºýÚÅ¢ð¼¡ý) ¦ƒÀ¢ ÁüÚõ ƒí¸¢ø þÕÅÕõ «¨ÉòÐ ²üÀ¡Î¸¨ÇÔõ º¢ÈôÀ¡¸ ¦ºö¾¢Õó¾É÷. ¦Ãº¡÷ð ²üÀ¡Î ¦ºöž¢Ä¢ÕóÐ §À¡ìÌÅÃòÐ ²üÀ¡Î¸û Ũà «¨ÉòÐ ²üÀ¡Î¸¨ÇÔõ º¢ÈôÀ¡¸ ¦ºö¾¢Õó¾É÷. Åó¾¢Õó¾Å¡÷¸ÙìÌ “Ê º÷ð” (¬ñ¸ÙìÌ), ÁÉ¢À÷Š (¦Àñ¸ÙìÌ), ¦Àýº¢ø ¼ôÀ¡ì¸û, Äïî ¼ôÀ¡ì¸û (º¢ÚÅ÷ º¢ÚÁ¢¸ÙìÌ) ¦¸¡ÎòÐ «ºò¾¢Å¢ð¼É÷.

¿£í¸û «¨ÉÅÕõ ·§À¡ð§¼¡¸û «¨Éò¨¾Ôõ À¡÷ò¾¢ÕôÀ£÷¸û ±É ¿¢¨É츢§Èý. ¿¡ý ÁüÚõ ºÃŽý ·§À¡ð§¼¡ì¸¨Ç «ô§Ä¡ð ¦ºöÐŢ𧼡õ. áƒý, Á¢É¢ ƒí¸¢ø þÕÅÕõ ·§À¡ð§¼¡ì¸¨Ç «ô§Ä¡ð ¦ºö§ÅñÎõ.

þó¾ ÅÕ¼õ Àí§¸ü§È¡÷ :

1. ¦ƒÂÀ¢Ã¸¡‰ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

2. ¦ºó¾¢ø ÓÕ¸ý, Á½¢¦Á¡Æ¢, ô¡¢ò¾¢¸¡, º÷§Å‰ÅÃý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

3. ¦Ãí¸Ã¡ƒý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

4. À¢Â¡¡¢ À¡Ò (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

5. ¦ºó¾¢ø §ÅÄý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

6. ¸¡÷¾¢§¸Âý, ÍÁÉ¡, º¢ò¾¡÷ò (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

7. À¢Ãº¡óò (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ þÃ×)

8. ¸¡÷ÅÇÅý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

9. ºÃŽý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

10. †À¢ÒøÄ¡ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

11. «Õû ¦ºó¾¢ø (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

12. áƒý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ À¸ø)

13. ·ôáýº¢Š (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ Á¡¨Ä)

14. ÌÕ À¡Š¸÷ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ ¸¡¨Ä)

15. ºí¸÷, ºí¸£¾¡, Ó¸¢Äý, ¦ºó¾¢Õ (ÅÕ¨¸ - þÃñÎ ¿¡û¸û Óýɾ¡¸§Å ÅóÐÅ¢ð¼É÷)

16. Á½¢¸ñ¼ý, ¯Á¡, ¬¾¢ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ þÃ× 2:30 Á½¢ «ÇÅ¢ø ÅóÐ §º÷ó¾É÷ - Á¢¸×õ ¸Š¼ôÀðÎ)

17. ·¦ÀÄ¢ìŠ (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ Á¡¨Ä)

18. ¬÷,±Š.¸¡÷¾¢§¸Âý (ÅÕ¨¸ - 22õ §¾¾¢ þÃ×)

ÁüÚõ ¦¾¡¨Ä àÃò¾¢Ä¢ÕóÐ ¦¾¡¨Ä§Àº¢ ãÄõ Àí§¸ü§È¡÷ (§¾Å¡Éóò, Á†¡Ã¡ƒý, þÇí§¸¡, ÓòÐÌÁ¡÷, ͧÉ, º¢ÅáÁý)

¦ƒÂÀ¢Ã¸¡‰, ¸¡÷ÅÇÅý, †À¢ÒøÄ¡, «Õû ¦ºó¾¢ø, ÌÕ À¡Š¸÷ ¬¸¢§Â¡÷ ÌÎõÀòмý ÅÕÅ¡÷¸û ±É ±¾¢÷À¡÷ì¸ôÀð¼Öõ, þó¾ Ó¨ÈÔõ «øÅ¡ ¦¸¡Îò¾É÷.

ÓòÐÌÁ¡÷, ͧÉ, ƒ¡ý, «õÀ¡ §ƒÀ¢, «Õñ¸ñ½ý §À¡ýÈÅ÷¸Ùõ þõÓ¨È «øÅ¡ ¦¸¡Îò¾É÷. «¾¢Öõ, ÓòÐÌÁ¡÷ ¸¢ñÊ ¦¸¡Îò¾ «øÅ¡ Á¢¸ þÉ¢ôÀ¡¸ þÕó¾Ð. «¾üÌ «Åý ¦º¡ýÉ ¸¡Ã½õ Á¢¸ ¸¢Ù ¸¢ÙôÀ¡¸ ¸Õ¾ôÀð¼Ð - «ÅÛìÌ ±Ã‡ý ôáôÇÁ¡õ - ¸õ¦Àɢ¢ø.

«¾¢¸Á¡É ÌÎõÀò¾¢É÷ ¸ÄóЦ¸¡ñ¼ Ó¾ø Å¢ Å¢ þÐÅ¡¸ þÕó¾¡Öõ, ¿ÁÐ Óó¨¾Â Å¢ Å¢ ì¸Ç¢ø ¿¡õ ¦ºöÅÐ §À¡ýÈ þÃ× ¸ÄóШá¼ø þõÓ¨È Á¢Š…¢í - ¸¡Ã½õ ¡÷ «È¢Å¡§È¡ ...? ¬É¡ø, þÃ× ¬ð¼õ º¢ÈôÀ¡¸ þÕó¾Ð - þó¾ ¬ð¼ò¨¾ º¢ÚÅ÷¸û ¬ÃõÀ¢ì¸, ºÃŽý ±ÎòÐ ¦ºøÄ «¨ÉÅÕõ ´ýÚ ÜÊ ÓÊò¾É÷.

§ÁÖõ, þõÓ¨È ÌÊÔõ ¦¸¡ïºõ ¦¸¡Èîºø¾¡ý. ¬É¡ø, ±ô§À¡Ðõ §À¡Ä «Õû ¦ºó¾¢ø, ºÃŽý ÁüÚõ ÌÕ þõÓ¨ÈÔõ ¦Á¢ý¨¼ý ¦ºö¾É÷.

22õ §¾¾¢ ¸¡¨Ä ´Õ 10 Á½¢ «ÇÅ¢ø Á¢É¢ ƒí¸¢ø ÁüÚõ «Åý ÌÎÁôò¾¢É÷ ±ý¨ÉÔõ ±ý ÌÎõÀò¾¢É¨ÃÔõ «ÅÉ¢ý ¸¡¡¢ø «¨ÆòЦ¸¡ñÎ ÎÄ¢ô ¦Ãº¡÷ðÊüÌ ¦ºýÈÉ÷.

¦ƒÀ¢, «ÅÉÐ ¸¡¡¢ø ƒí¸¢ø ÁüÚõ «Åý ÌÎÁôò¾¢É¨Ã «¨ÆòЦ¸¡ñÎ ¦Ãº¡÷ðÊüÌ Åó¾¡ý.

¦Ãí¸Ã¡ƒý «ÅÉÐ ŠÜðÊ¢ø (ÒÐ ŠÜðÊ) ÌÕÀ¡Š¸¨Ã «¨ÆòЦ¸¡ñÎ ¦Ãº¡÷ðÊüÌ ÅóÐÅ¢ð¼¡ý.

¦ºý¨É¢ø þÕóÐ ¸¡÷ÅÇÅý, ºÃŽý, †À¢ÒøÄ¡, «Õû ¦ºó¾¢ø ÁüÚõ áƒý ¬¸¢§Â¡÷ ¸¡¡¢ø ÅóÐ ÅóÐ ÅóÐ ÅóÐ ÅóÐ .... . . . . . . . . §º÷ó¾É÷.(§Åæ÷ ºÃŽ¡ ÀÅý ÅƢ¡¸)

§ÁüÌÈ¢ôÀ¢ð¼Å÷¸û ÁðΧÁ ¦Ãº¡÷ðÊø 22õ §¾¾¢ Á¾¢Â ¯½× º¡ôÀ¢ð§¼¡õ.

·ôáýº¢Š Å¢Á¡Éò¾¢ø ¦ºý¨É¢ĢÕóÐ ´Õ Á½¢ §¿Ãõ À½õ ¦ºöÐ Àí¸ÖÕ ÅóÐ §º÷óÐ, Àí¸ÖÕ Å¢Á¡É ¿¢ÄÂò¾¢Ä¢ÕóÐ 2 Á½¢ §¿Ãõ À½õ ¦ºöÐ ¦Ãº¡÷ðÊüÌ ÅóÐ §º÷ó¾¡ý.

À¢Š…¢¼õ ÌÕ ÌõÀÁ¡ö Åó¾¢Õô§À¡¨Ãô ÀüÈ¢ ÜÈ, ¯¼§É À¢Š “¿¡Ûõ ÌÎõÀò¨¾ ²üÀ¡Î ¦ºöÐ «¨ÆòÐ ÅÃÅ¡” ±É ÜÈ¢ ÌÕ¨ÅÔõ «¨ÉŨÃÔõ «¾¢Ã ¨Åò¾¡ý. À¢ýÉ÷ ´Õ ÅƢ¡¸ Á¡¨ÄìÌ Óýɾ¡¸§Å ÅóÐ §º÷ó¾¡ý.

«¾ý À¢ýÉ÷ ôú¡óò, ·¦ÀÄ¢ìŠ, ¬÷.±Š.¸¡÷ò¾¢§¸Âý ¬¸¢§Â¡÷ ÅóÐ §º÷ó¾É÷.

22õ §¾¾¢ ¸¡¨Ä 10 Á½¢ÂÇÅ¢ø §¸¡ÂõÀòà¡¢ø þÕóÐ ¸¢ÇÁÀ¢Â Á½¢ ÁüÚõ ÌÎõÀ¾¡÷ 23õ §¾¾¢ «¾¢¸¡¨Ä 2:30 Á½¢ìÌ §ƒôÀ¢, ¬÷.±Š.§¸., ¸¡÷, À¢Š, À¢Ãº¡ó¾¢ý ¦ÀÕ ÓÂüº¢ìÌô À¢ÈÌ ÅóÐ §º÷ó¾É÷. þÅ÷¸¨Ç «¨ÆòÐ Åà ¦ºýÈ À¢Š, «Å¨É ¦Ãº¡÷ðÊø þÕó§¾ þÂ츢 À¢Ãº¡óò þÕÅÕõ Á½¢¨Â ´Õ ÌÆôÒ ÌÆôÀ¢ ´Õ ÅƢ¡¸ «¨ÆòÐ Åó¾É÷. Á½¢ ÅóÐ §º÷ó¾ À¢ýÉ÷, Á½¢, À¢Š, ¸¡÷, §ƒôÀ¢, ¬÷.±Š.§¸. ¬¸¢§Â¡÷ ¸¡·À¢ ÌÊì¸ À¢Š Å£ðÊüÌ ¦ºýȾ¡¸, ÁÚ ¿¡û ¸¡¨Ä¢ø ¦¾¡¢Â Åó¾Ð.

¿¡í¸û «¨ÉÅÕõ ¸¢¡¢ì¦¸ð Å¢¨Ç¡ʧɡõ. þ¾¢ø ôú¡óò, ·¦ÀÄ¢ìŠ, ¬÷.±Š.¸¡÷ò¾¢§¸Âý, À¢Š, ·ôáýº¢Š ¸ÄóЦ¸¡ûÇÅ¢ø¨Ä. «Å÷¸û ÅóÐ §ºÃ§Å þø¨Ä (¬½¢§Â ÒÎí¸Ä...). þó¾ ¯Ä¸ Ò¸ú ¦ÀüÈ, º¡¢ò¾¢Ã Ó츢ÂÐÅõ Å¡öó¾ ¸¢¡¢ì¦¸ð §À¡ðÊ¢ý ţʧ¡ À¾¢× áƒý źõ ¯ûÇÐ. (áƒý ... «¾¨É ¾ÂצºöÐ «¨ÉÅÕìÌõ ´Ç¢ ÀÃôÀ¢ ¸¡ñÀ¢ì¸×õ). Á¡¨Ä¢ø Å¡Ä¢À¡ø Å¢¨Ç¡ÊÉ÷.

¿£îºø ÌÇõ þÕó¾Ð. Ó¸¢Äý, ô¡¢ò¾¢¸¡, º÷§Å‰ÅÃý, ¦ºó¾¢Õ, º¢ò¾¡÷ò ¬¸¢§Â¡÷ ÌиÄÁ¡ö ÌÇ¢òÐ Á¸¢úó¾É÷.

áƒý, ƒí¸¢ø, Á¢É¢ ƒí¸¢ø, †À¢, ¦Ãí¸¡, ÌÕ, ¿¡ý, «Õ:û ¬¸¢§Â¡÷ ̾¢òÐ ÌÇ¢òÐ Á¸¢úó¾É÷. þÅ÷¸û ÌÇ¢òÐ즸¡ñÎ þÕìÌõ §À¡Ð ÌÇò¾¢ø þÕó¾ ¾ñ½£¡¢ý ¦ÅôÀõ ºü§È ¯Â÷󾨾 þí§¸ ÌÈ¢ôÀ¢¼ §ÅñÎõ.

Ó¸¢Äý, ô¡¢ò¾¢¸¡, º÷§Å‰ÅÃý, ¦ºó¾¢Õ, º¢ò¾¡÷ò ¬¸¢§Â¡÷ ¦Ãº¡÷ðÊø þÕó¾ ÁüÈ Å¢¨Ç¡ðÊÖõ ¾í¸û ¬¾¢ì¸ò¨¾ ¸¡ðÊÉ÷. «õÁ¡ì¸û «¨ÉÅÕõ «Å÷¸ÙìÌ ¯¾Å¢É÷.

¦Ãí¸¡, ·¦ÀÄ¢ìŠ, ¬÷.±Š.§¸. ¬¸¢§Â¡÷ þ犦ºýÚÅ¢ð¼É÷. ·ôáýº¢Š ¸¡¨Ä¢ø º£ì¸¢ÃÁ¡¸§Å Å¢Á¡Éò¨¾ô À¢Êì¸ ¦ºýÚÅ¢ð¼¡ý.

Á£¾õ þÕó¾ «¨ÉÅÕõ 11 Á½¢ «ÇÅ¢ø ¸¢ÇõÀ¢ À¢Â¡¡¢ Å£ðÊüÌ ¦ºýÚ Å¢ðÎ «í¸¢ÕóÐ À¢¡¢óÐ ¦ºý§È¡õ. À¢Â¡¡¢ Å£ðÊø «¨ÉÅÕìÌõ Š¿¡ìŠ ÁüÚõ ÌÇ¢÷ À¡Éí¸û ¸¢¨¼ò¾Ð. ÌÆ󨾸ÙìÌ ³Š ¸¢¡¢õ ¸¢¨¼ò¾Ð. À¢Â¡¡¢Ôõ, À¢Â¡¡¢ Á¨ÉÅ¢Ôõ «¨ÉŨÃÔõ º¢ÈôÀ¡¸ ÅçÅüÚ ¯Àº¡¢ò¾É÷.

Óýɾ¡¸, ¦Ãº¡÷𨼠ŢðÎì ¸¢ÇõÒõ Óý, ´Õ º¢Ú ¸ÄóШá¼ø ¿¼ó¾Ð. «¾¢ø, þÉ¢ ÅÕõ ÅÕ¼í¸Ç¢ø ¿¨¼¦ÀÈ þÕìÌõ “Å¢ Å¢” 츨Ç, «Ð ¿¨¼¦ÀÈ þÕìÌõ þ¼ò¨¾ §º÷ó¾ ¿ñÀ÷¸û ŠÀ¡ýº÷ ¦ºöÂÄ¡§Á ±ýÈ ¸ÕòÐ Óý ¨Åì¸ôÀð¼Ð. ¯¾¡Ã½Á¡¸, Å¢ Å¢ 2011 ÌüÈ¡Äõ À̾¢Â¢ø ¿¨¼¦ÀÚõ ±ýÚ ÓʦÅÎò¾¡ø, «ôÀ̾¢Â¢ø ¯ûÇ ¿õ ¿ñÀ÷¸û (ÓòÐÌÁ¡÷, ºí¸÷, «Õû ¦ºó¾¢ø, ¾Á¢ú, ƒ¡ý ...) «¾ü¸¡É ¦ºÄ¨Å ²üÚ¦¸¡ûÇ §ÅñÎõ. þÅ÷¸Ç¡ø ÓبÁ¡¸ ²üÚ¦¸¡ûÇ ÓÊ¡¾ Àîºò¾¢ø, ÁüÈ ¿ñÀ÷¸Ç¢¼Á¢ÕóÐõ ¯¾Å¢¸û ²üÚ¦¸¡ûÇôÀÎõ. þ¾üÌ Á¡üÈ¡¸, Áü¦È¡Õ ¸ÕòÐõ ÜÈôÀð¼Ð. «¾ý ÀÊ, ´Õ ¦À¡ÐÅ¡É Åí¸¢ ¸½ìÌ ÐÅí¸¢, «¾¢ø ´ù¦Å¡Õ Á¡¾Óõ «¨ÉÅÕõ ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ ¦¾¡¨¸¨Â ¦ºÖò¾¢ ÅçÅñÎõ. «ùÅ¡Ú §ºÕõ À½õ, «ùÅÕ¼ Å¢ Å¢ ìÌô ÀÂýÀÎõ. §ÁÖõ «¾¨É ²§¾Ûõ ´Õ º¢Ä ¿øÄ ¸¡¡¢Âí¸ÙìÌô ÀÂý À¼ ²üÀ¡Î ¦ºö §ÅñÎõ ±Éì ÜÈôÀð¼Ð. þÐ ¦¾¡¼÷À¡¸, «¨ÉÅÕõ ¸ÄóÐ §Àº¢ ´Õ ÓʦÅÎò¾¡ø ¿Äõ §ºÕõ.

þùÅÈ¡¸ þó¾ ÅÕ¼ “Å¡í¸¼¡ Å¡í¸” º¢ÈôÀ¡¸ ÓÊó¾Ð.