16 டிசம்பர் 2010

திரை அரங்கில் ஒரு நாள்.....

திரை அரங்கில் ஒரு நாள்.....
ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதுறேன். கடந்த ரெண்டு மாசமா நல்லா அதிகமான வேலை. என் மச்சுனனோட கல்யாணம்... என்னோட அத்தைக்கு இருதய அறுவை சிகிச்சை (ஆப்பரேசன்)..... என்னோட அம்மாக்கு கால் வலி... கல்லூரியில் வேலை... அப்படி இப்படின்னு இந்த பக்கமே வர முடியல...
சரி இப்போ வந்துட்டோம்ல... கடவுள் புண்ணியத்துல ஏதாவது எழுத முடியுமான்னு பாப்போம் (இதுக்கெல்லாம் எதுக்குப்பா கடவுள் புண்ணியம்னு.... நாத்திகமா கேக்காதிங்க. இதுக்கு மட்டும் இல்ல... எல்லாத்துக்கும் கடவுளோட புண்ணியம் வேணும்).
ஒன்னு தெரியுமா, இந்த பக்கம் வர முடியாத அந்த ரெண்டு மாசமும் அப்போ அப்போ ஏதாவது மனசுல எழுதனும்னு தோணிகிட்டே இருக்கும். வார்த்தை உச்சரிப்புகளின் மகிமை பத்தி தோணுச்சு, உறவுகள் பத்தி தோணுச்சு, வீடு பத்தி தோணுச்சு... இன்னும் ஏராளமா... திரும்பவும் தோணும். அப்ப தெளிவா எழுதுறேன்.
இப்ப விஷயம் என்னானா.... என்னோட கடைசி பதிவுல எந்திரன் படம் பத்தி எழுதி இருந்தேன்ல... அத பாதியிலயே விட்டுட்டு போயிட்டேன். இப்போ அத பத்தி எழுதுறது சுத்தமா நல்லா இருக்காது. ஏன்னா அதப் பத்திதான் அளவுக்கு அதிகமா எலாரும் எழுதிட்டாங்களே... (சன் டிவி ல இந்த படத்தப் பத்தி போதுமான அளவுக்கு எல்லாத்தையும் காட்டிட்டாங்க. இன்னமும், "ரஜினியும் ஐஸ்வர்யாவும் படப்பிடிப்புக்கு வந்த காட்சிகள்" அப்படின்னு ஒரு எபிசொட் மட்டும் தான் போடல.). அந்த பதிவுல திரை அரங்குகள் பத்தியும் ரசிகர்கள் பத்தியும் அப்புறமா எழுதுறேன்னு சொல்லி இருந்தேன்ல. அதப்பத்திதான் இந்த பதிவு. (இப்பதாங்க தலைப்புக்குள்ளயே வர்றோம்...)
எங்க ஊர்ல இருக்குற எந்த திரை அரங்கும் வாங்குற காச கொஞ்சம் கூட செலவழிச்சு சுத்தமா பராமரிக்குறது இல்ல. அவ்வளவு சுகாதார குறைவு. இந்திரன் படத்துக்கு நாங்க ஆறு பேறு போயிருந்தோம். மொத்தமா 900 ரூபா அனுமதி சீட்டுக்கு மட்டும் செலவானது. ஒரு ஆளுக்கு, 150 ரூபா. நாங்க அவ்வளவு பணம் குடுத்து, ரொம்ப சொகுசா பஞ்சு மெத்தை இருக்கைல உக்காந்து படம் பாத்தோம்னு நெனைக்காதிங்க. மரக்கட்டை இருக்கைல உக்காந்து தான் படம் முழுசையும் பாத்தோம். ஒரு பயத்தோடவே... வீட்டுக்கு மூட்டை பூச்சி வந்துறுமோ... பக்கத்துல உக்காந்து படம் பாக்குற ரசிக சிங்கங்கள்ல யாரவது நம்ம இருக்காய் மேல கால தூக்கிபோட்டுருவான்களோ... அப்படின்னு ஏகப்பட்ட பயத்தோடவே படம் பாக்க வேண்டியிருக்குது. சரி, இருக்கைகள் தான் இப்படி இருக்குது, அரங்காவது சுத்தமா இருக்குதான்னு பாத்தா... பாசி படர்ந்த ரொம்ப கவனமா நடப்போமே... அந்த மாதிரி தான் நடக்க வேண்டியதா இருந்துச்சு. ஏன்னா தரை எல்லாம் சளியோட சேந்த எச்சி, வெத்திலை எச்சி, பாக்கு எச்சி, இன்னும் பிற... அவுங்க அவுங்களுக்கு வாயில வந்ததெல்லாம் தரைல தெளிச்சிருந்தாங்க. இது போக, படம் போடுறதுக்கு முன்னாடி, படம் ஓடிகிட்டு இருக்கும் பொது, இடைவேளை சமயத்துல, மற்றும் எல்லா நேரத்துலயும், ஒரே புகை மண்டலம். முன்னாடி பின்னாடி பக்கத்துல இருந்து எல்லா பக்கத்துல இருந்தும் புகையின் வீச்சு.... (உண்மையிலயே நான் இத அதிகப்படுத்தி சொல்லலைங்க... உண்மையிலயே இப்படிதான் இருந்ததது.) படம் போடுறதுக்கு முன்னாடியும் இடைவேளை நேரத்துலயும், "புகை பிடிக்கக் கூடாது", "எதிர் சீட்டு மேல கால் வைக்க கூடாது" அப்படின்லாம் அறிவிப்பு செய்திகள திரைல காட்டுறாங்க. எல்லாமே சம்பிரதாயம் தான். இப்படி அறிவிப்பு செய்யிற திரை அரங்க நிர்வாகிகள், அத கடைப்பிடிக்க தேவையான முயர்ச்சிகள செய்யலாம்ல.... அத செய்யல.
அங்க இருந்த கழிப்பறை...... சுகாதாரக் கேட்டின் உச்சகட்டம். அந்த கழிப்பறை, தண்ணிய பாத்து பல வருசமா ஆகிருக்கும் போல. உள்ள தண்ணி இல்ல. மூத்திரக் கோப்பை (யுரினால் பேசின்) இல்ல. மல கோப்பை, மலத்தால அபிசேகம் ஆகிருக்கு. அவ்வளவு அசிங்கம்.
இவுங்க வாங்குற, பணத்துல ஒரு 5% ஆவது இந்த மாதிரியான விசயங்கள சரி பண்ணுறதுக்கு செலவு பண்ணலாம்ல. பண்ண மாட்டுறாங்க...
இதையெல்லாம் பாக்கும் போதுதான், பேசாம, 30 ரூபாக்கு டிவிடி வாங்குனோமா, வீட்ல உக்காந்து, குடும்பத்தோட பார்த்தோமான்னு இருக்கலாம்னு தோணுது. டிவிடி க்கு எதிரா போராட்டம் நடத்துற போராளிகல்லாம் இதையும் கொஞ்சம் கவனத்துல எடுத்துக்கலாம். இது என்னோட தாழ்மையான கருத்து.
செருப்பால அடிக்கனுங்க.... என்னத்தான். என்ன யாருங்க திரை அரங்கத்துக்கு போயி படம் பாக்க சொன்னது....? எனக்கு திமிருதானங்க... பணத் திமிருங்க... பேசாம, பிள்ள குட்டிகளுக்கு துணிமணி எடுத்து குடுத்துட்டு வீட்ல உக்காந்து, பொண்டாட்டி ஆக்கி குடுக்குற கறிசோற சாப்ப்டுட்டு, நிம்மதியா ஒரு தூக்கம் போட்டுருக்கலாம்.
திரை அரங்கத்துக்குப் போயி படம் பாக்குரதுங்க்றது திமிரு தனத்தின் உச்சகட்டம்ங்க.... நல்லா யோசிங்க.