12 ஆகஸ்ட் 2010

இது தப்பா...அது தப்பா... (குடும்பக் குத்து விளக்குகள்)

இது தப்பா...அது தப்பா... (குடும்பக் குத்து விளக்குகள்)
நம்ம ஊர்ல, குடும்பக் குத்து விளக்குனா... அது பொண்ணுங்கதானே... அதப் பத்தி, ரெண்டு நாளைக்கு முன்னாடி, எனக்கு ஒரு பார்வர்டட் மெயில் வந்துச்சு. அத அனுப்பினது என்னோட ஒரு நண்பன். அந்த மெயில்ல ஒரு... ஏழு பொண்ணுங்க சேந்து தண்ணி அடிக்கிற மாதிரி போட்டோ இருந்தது. மொத்தம் மூணு போட்டோ இருந்தது. எல்லா போட்டோலயும் எல்லா பொண்ணுங்களும் நல்லா ஜாலி மூட்ல இருந்தது பதிவாகி இருக்குது. முதல் போட்டோல எல்லா பொண்ணுங்களும், ஒரு குவார்டர் பாட்டில கைல பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. (எல்லாத்துக்கும் சேத்தே ஒரு குவார்ட்டர் பாட்டில் தான்). அடுத்த படத்துல குவார்ட்டர் பாட்டிலோட சேந்து சைடு டிஷ்-ஊறுகாயும், மிக்சிங்க்க்கு fanta வும் இருக்குது. கடைசி படத்துல காலியான குவார்ட்டர் பாட்டிலும் ஒரு ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்க.
இந்த மெயில் எங்க குருப் மைலுக்கு பார்வர்ட் ஆகி இருந்தது. அந்த மெயில் வந்த அன்னைக்கே, எங்களோட இன்னொரு நண்பன் அந்த மெயில் க்கு கண்டனம் தெரிவிச்சு ஒரு மெயில் அனுப்பி இருந்தான். அதுல அவன், இந்த மாதிரி மெயில் எல்லாம் இனிமே அனுப்பாதிங்க... ஏன்னா, இந்த மாதிரி விஷயம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி, ஒரு சந்தோசத்துக்காக பொண்ணுங்க பண்ணுறது ; இதெல்லாம் அவுங்க பண்ணலாம். அப்படின்னு எழுதி இருந்தான். அதோட, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இப்படி வந்த ஒரு மெயில் ல கொஞ்சம் காலேஜ் பொண்ணுங்க பார்ட்டில டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்த மாதிரி ஒரு படம் வந்திருந்தது; அரை நிர்வானமாத்தான்; இந்த மெயில் பார்வர்ட் ஆக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல அந்த படத்துல இருந்த ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டான்னு எழுதி இருந்தான். அதுனால இந்த மாதிரி மெயில் எல்லாம் பார்வர்ட் பண்ணாதிங்க. இது பொண்ணுங்க வாழ்க்கைய பாதிக்கும்னு சொல்லி இருந்தான். இன்னைக்கு அது சம்பந்தமா வந்த இன்னொரு மெயில் ல, இத ஆதரிச்சு இன்னொரு நண்பன் எழுதி இருந்தான். அதோட கூட, முதல்ல பார்வர்ட் செய்யப்பட்ட அந்த மெயில், ஒரு பொண்ணோட ஐடி ல இருந்து வந்திருக்குன்னு கூடுதல் தகவல் தந்திருந்தான்.
இந்த விசயத்த எப்படி பாக்குறது....? பொண்ணுங்க இப்படிலாம் பண்ணலாம்; அது சும்மா ஒரு சந்தோசத்துக்காக, அப்படின்னு கேசுவலா விட்டுறலாமா...? இல்லேன்னா, பொண்ணுங்களோட இந்த மாதிரி நடவடிக்கைலாம், ரொம்ப தப்பானது...இது கலாச்சார சீர் கேடுக்கு ரொம்ப பெரிய வழி வகுக்கும்... அப்படின்னு போர்க்கொடி தூக்கலாமா...?
ஒருவேள, நம்ம போர்க்கொடித் தூக்குரோம்னு வைங்க.... நம்மக்கிட்ட இருக்குற பெண்ணியவாதிகள், இப்ப கலாச்சாரம் இதுனால மட்டும் தான் கேட்டு போகுதா.... நீங்க ஏன் சார் எல்லாத்தையும் தப்பாவே பாக்குறிங்க... ஒங்க வீட்டு பொண்ணுங்கல்லாம் சரியாத்தான் இருக்காங்களா.... அப்படி சரியாத்தான் இருக்காங்கன்னு நீங்க சொன்னிங்கன்னா, உங்க கண்காணிப்பு நடவடிக்கைள ஏதோ தப்பு இருக்கு. அவுங்க அவுங்க... அவுங்க வீட்டு விசயத்த மட்டும் பாருங்க... அடுத்த வீட்டு பொண்ணு என்ன செய்யுதுன்னு, ஓட்டை வழியா பாக்காதிங்க ன்னு எதிர் குரல் எழுப்புவாங்க.
என்ன செய்யறதுன்னு தெரியல.
இன்ன ஒரு மாதிரி யோசிச்சோம்னா, ஆம்பள பசங்க இத விட மோசமாவே பண்ணுறாங்க. அதெல்லாம், இந்த மாதிரி "போஸ்டர்" ஆக மாட்டேங்குது. அப்படியே ஆனாலும், அது அவிங்களோட திறமையின் வெளிப்பாடாத்தான் காட்டப்படுது. என்ன சார் நியாயம்..... அவிங்க பண்ணுனா சரி... அதே இத இவிங்க பண்ணுனா தப்பு. என்ன கொடும சார் இது...? ஒருவேள, இது..இது இவிங்க பண்ணுனா சரி... அதே இத அவிங்க பண்ணுனா தப்பு... அப்படின்னு எதுவும் பாராளு மன்றத்துல புதுசா சட்டம் இயற்றிட்டான்களோ...? இருந்தாலும் இருக்கும். யாரு கண்டது.
லஞ்சம் தேசிய மயமாக்கப்பட்ட நாடுகள்ள நம்ம நாடும் ஒண்ணுதானே...?
மொத்ததுல, என்னதான் சொல்ல வர்ரிங்க...? பொண்ணுங்க தண்ணி அடிக்கிறது தப்பா....இல்லைனா, பொண்ணுங்க தண்ணி அடிக்கிற மாதிரி இருக்குற போட்டோவ பார்வர்ட் செய்யறது தப்பா.....?
எது தப்பு.... எது சரி..... ஏதாவது எங்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்களேன்....

09 ஆகஸ்ட் 2010

எங்களுக்கு சரி....அடுத்தவுங்களுக்கு தப்பு....

எங்களுக்கு சரி....அடுத்தவுங்களுக்கு தப்பு....
நாங்க எல்லாரும் எங்க குடும்பத்தோட, மதுரை போத்திஸ்ல துணி எடுக்கிறதுக்காக போய் இருந்தோம். நான், என் பொண்டாட்டி, என் சகலை, என் மதினி, எங்க பிள்ளைகள், என் மச்சினன் எல்லாரும் போயிருந்தோம். அங்க சுடிதார் செக்சன்ல பர்ச்சேஸ் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, எங்க பக்கத்துல ஒரு கொஞ்ச வயசு லேடியும் அதுக்கு தேவையான துணிகள எடுத்துக்கிட்டு இருந்துச்சு. அப்ப எங்க குரூப்ல ஒருத்தரு, அந்த லேடி செலெக்ட் பண்ணி வச்சிருந்த டிரஸ்கள பாத்து... இது பெரிய ஆளுங்களுக்கா இல்ல சின்ன பிள்ளைங்களுக்கான்னு எங்ககிட்ட கேட்டாரு. அதுக்கு நாங்க எங்களுக்குள்ள பேசிச் சிரிச்சிக்கிட்டு, அந்த ஆளுகிட்டே அங்க இருந்த இன்னொரு டிரெஸ்ஸ காமிச்சு "உன்னோட மனைவிக்கு அந்த மாதிரி டிரஸ் வாங்கி குடுன்னு" சொல்லி கமன்ட் அடிச்சிக்கிட்டு இருந்தோம். சிரிச்சுக்கிட்டு இருந்தோம். இத அந்த லேடி தப்பா புரிஞ்சுகிருச்சு போல... பக்கத்துல அந்த லேடியோட அம்மாவும் இருந்தாங்க. அவுங்க கைல ஒரு சின்ன பாப்பாவும் இருந்துச்சு. அந்த பாப்பா, அந்த லேடியோட குழந்தையா இருக்கும்னு நினைக்கிறேன். இந்த கான்வர்சேசன் நடந்து கொஞ்சம் நேரம் கழிச்சு அந்த லேடியோட அம்மா... எங்க ஆளு ஒருத்தரு கொஞ்சம் தள்ளி தனியா வேற ஒரு துணிய பாத்துக்கிட்டு இருக்கும் போது, "என்ன இது... ஆம்பள பசங்க தனியா வந்தாத்தான் இப்படி கேலி பண்ணி விளையாடுவாங்கன்னு பாத்தா... நீங்க குடும்பத்தோட வந்து இப்படி மோசமா பேசுறிங்க..." அப்படின்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. எங்க ஆளுக்கு கொஞ்ச நேரம் ஒன்னும் புரியல. அதுக்கு அப்புறம், கொஞ்சம் நிதானத்துக்கு வந்து, அந்த அம்மா பேசுறது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்களுக்குள்ள நடந்த கான்வேர்சேசனப் பத்தின்னு புரிஞ்சுக்கிட்டாங்க. இவுங்களும், அந்த கான்வேர்சேசன் அந்த லேடிய பத்தி இல்லன்னு புரிய வைக்க ட்ரை பண்ணுனாங்க. அதுக்குள்ள அந்த அம்மா, வருத்தத்தோட கோபமாவும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அந்த லேடியும் சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. எங்க ஆளுக்கும், கோபம் வந்துருச்சு. இவுங்களும் கோபத்துல விரல எல்லாம் சொடுக்கி, நீட்டி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க ஒன்னும் கமன்ட் அடிக்கிற அளவுக்கு இல்லையேன்னு... அந்த லேடியோட அழகைப் பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அவுங்களும் பதிலுக்கு எங்க குடும்பத்த ரவுடி குடும்பம்னும், எங்க சைடு சத்தம் போட்டவர ரவுடின்னும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. நடுவுல வேற ஒருத்தரு வேற வந்து, பொம்பளை ஆளுங்க எடுக்குற டிரெஸ்ஸ பத்தி ஆம்பளை ஆளுங்க எதுக்கு பேசனும்... அப்படின்னு நியாயம் சொல்லிட்டுப் போனாரு. அதுக்குள்ள அந்த லேடி, யாருக்கோ அதோட செல் போன்ல இருந்து கால் பண்ணி, அவர வர சொல்லிருச்சு. அவரும் வந்தாரு. அவருமே, கொஞ்ச வயசு ஆளுதான். அவரு, அவரு பங்குக்கு நியாயத்தக் கோபத்தோடக் கேட்டாரு. அவருகிட்டயும், கொஞ்சம் நிதானமா (பட படப்போடதான்...) விசயத்த விளக்கவும்.... சரி சரின்னுட்டு கொஞ்சமும் திருப்தி இல்லாம, அவுங்க எல்லாத்தையும் அந்த பக்கமா கூட்டிக்கிட்டு போனாரு. நாங்களும் கிளம்பி வந்துட்டோம்.
இதுல பாத்திங்கனா, நாங்க பேசுனது எங்களுக்கு தப்பா படல. ஆனா பக்கத்துல இருந்தவுங்களுக்கு, அவுங்களைப் பத்திதான் பேசுறோம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்கள்ள... ஒருவேளை, இந்த நிகழ்ச்சில, அந்த லேடி இடத்துல நாம இருந்திருந்தோம்னா... நமக்கும் அப்படித்தான இருக்கும். சங்கடமாத்தான இருந்திருக்கும். அதோட... அவுங்க கோபப் பட்டு பேசுனாலும், நாம எதுக்கு கோபப் படனும்...? எதுக்கு விரல நீட்டி, சொடக்கு போட்டு, சத்தமாப் பேசனும்...? அமைதியா, ஒரு சாரி சொல்லிட்டு, அந்த எடத்த விட்டு வந்திருக்கலாமே...? அதுக்கு ஏனோ, நம்ம உடன் பட விருப்பப் படாம இருக்கோம்.
சண்டை போடாம... சண்டைய விட்டு விலகி வர்றதுதானே புத்திசாலித்தனம்...
என்ன சொல்றிங்க...?