23 ஜூலை 2010

தண்ணீர்.......தண்ணீர்..........

தண்ணீர்.......தண்ணீர்..........
இந்த முறை, தேர்வு விடைத்தாள் திருத்துவதற்காக திருநெல்வேலி சென்றிருந்தேன். அங்கு, அரசு பொறியியல் கல்லூரியில் பணி நடைபெற்றது. நாங்கள் அங்கு சென்ற நாள் முதல் ஒரு விஷயத்தை கவனித்துக் கொண்டு வந்தேன்; நாங்கள் திருத்திகொண்டிருந்த துறை கட்டிடத்தின் ஒரு கழிப்பறையில் உள்ள ஒரு தண்ணீர் குழாயில் தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருந்தது. அதை யாருமே சரி செய்ய முன்வரவில்லை; அதனை அத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் யாருமே முன்வரவில்லை; இது அத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்ததா எனவும் தெரியவில்லை. நான் உட்பட அதனை யாருக்கும் தெரியபடுத்தவில்லை.
ஒழுகிக்கொண்டிருந்த தண்ணீரை நான் அளந்து பார்த்தேன். ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 1.33 லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு 1915 லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. எல்லா நேரமும் இதே அளவில் தண்ணீர் வீணாகாது என்று எடுத்துக் கொண்டாலும், தோராயமாக 1500 லிட்டர் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. இதனை, ஒரு குடும்பத்திற்கான ஒரு நாள் தண்ணீர் தேவை தோராயமாக 10 லிட்டர் என கொண்டால் 15 குடும்பத்திற்கான தண்ணீர் விரயமாகிக் கொண்டிருந்தது.
என்னால் முடிந்த அளவிற்கு, இதனை எனது நண்பர்களிடம் மட்டும் தெரியபடுத்தினேன். அவர்களும் வருத்தப்பட்டார்கள். இது சம்பந்தமாக வேறு ஏதாவது செய்திருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது. தண்ணீரின் அவசியம் இன்னும் எனக்கு (நமக்கு) சரியாக புரியவில்லையோ என தோன்றுகிறது. அதனால்தான் இந்த அலட்சியம்.
ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு முதலில் தைரியம் வேண்டும்!

06 ஜூலை 2010

நியுமராலஜி

ஒருவரைக் குறிப்பிட்டு அழைக்கப் பயன்படும் பெயரில் என்ன இருக்கிறது? பெயரின் பொருள் பலனளிக்குமா அல்லது பெயரை உருவாக்கும் எழுத்துகள் பலனளிக்குமா?
இன்று, மிகப்பிரமாண்டமான தொலை தொடர்பு சாதனமான தொலைகாட்சியில் கூட பெயருக்கான பலனை ஆராய்ந்து, ஏற்கனவே இருக்கும் பெயரை மாற்றி அமைத்து நமது வாழ்வை வளமாக்க, ஏகப்பட்ட வல்லுனர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால் அங்கு, அவர்கள் வாழ்க்கை மட்டுமே வளமாகிறது. நமது நேரம் வீணாகிறது. அனைத்துப் புத்தகக் கடைகளிலும் நியுமராலஜி சம்பத்தப்பட்ட புத்தகங்கள் ஒன்றாயினும் கிடைக்கும் நிலை இன்று உள்ளது.
நியுமராலஜி. இந்த வார்த்தையில் இருப்பது என்ன? என்னைப் பொறுத்த வரை இதற்கு ஏமாற்று வேலை என்றே பொருள் கொள்ளலாம்.
காரணங்கள்:
(1) ஒருவரின் நடத்தையாலும் நற்செயல்களாலும் அவரின் பெயருக்கு பெருமையா அல்லது அவரின் பெயரால் அவருக்குப் பெருமையா?
(2) பிறந்தவுடன் ஒருவருக்கு பெயர் பலன், ராசி பலன் பார்த்து அவரைக் கேட்ட சவகாசங்களுடன் வளர்த்தோமானால், அவரை, அவருக்கு இட்டப் பெயர் உயர்த்துமா?
(3) மேலும், நியுமராலஜி என்பது ஆங்கில எழுத்துகள் 26க்கு மட்டுமே, 1,2... என்று எண் மதிப்புகளை இட்டு அவற்றை கூட்டி பலன் சொல்லும்.
இதில், நமது அழகிய தமிழ் பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கு பலன் காண வேண்டும். என் இந்த நிலை? ஆங்கிலத்தில் 26 எழுத்துகளுக்கு எண் மதிப்புகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது சுலபம். அதே சமயத்தில், தமிழின் 247 எழுத்துகளுக்கும் எண் மதிப்புகளை ஞாபகத்தில் வைப்பது என்பது சற்றே கடினமான செயல். எனாவேதான், தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதற்காக நியுமராலஜிச்டுகள் அடுத்தவரின் பெயரில் விளையாடுகின்றனர்.
எனவே, நமது பெயர், நமக்கு அழகு சேர்க்கும், பெருமை சேர்க்கும் என்பதை மறந்து நமது நடத்தையால் நமது நற்செயல்களால் நமது அழகுப் பெயருக்குப் பெருமை சேர்க்கலாம் என்பதை நினைவில் கொள்வோம்.