24 நவம்பர் 2013

நுரை படுத்தும் பாடு

 
"நுரை" ங்கற  ஒரு விசயம், எப்படிலாம் சந்தோஷ படுத்துது பாருங்களேன். கொஞ்சம் ஆழமா யோசிச்சு பாத்தோம்னா, நுரை, நம்மள சின்ன வயசுல இருந்தே குதூகலப் படுத்திக்கிட்டே தான் இருக்குது. திருவிழாவுக்கு போகும்  போது கூட, நுரையாய் இருக்கும் சோப்பு தண்ணிய வாங்கி முட்டை விடுறதுல நமக்கு ஒரு ஆர்வம் இருக்கத்தானே செஞ்சுச்சு. பால் பொங்கி நுரையா வரும் போது  ஒரு சந்தோசம்..... நல்லா ஆத்துன மோர் ல மேல நுரை இருக்கும்... அதை குடிக்கும் பொது ஒரு மகிழ்ச்சி..... சின்ன குழந்தைகளுக்கு, பால், காபி. டீ இல்லேன்னா வேற ஏதாவது பானங்கள் குடுக்கும் போது நுரையோட குடுதோம்னா ஒரு குதூகலத்தோட அத குடுச்சுட்டு அதுனால ஓதட்டு மேல வர்ற மீசைய நம்மகிட்ட காட்டி பயமுருத்துவாங்கள்ள......அது ஒரு ஆனந்தம். மகிழ்ச்சியான எல்லா நேரங்கள்ளையும் நுரை ஒரு அங்கமாவே இருக்கு பாருங்களேன். பிறந்த நாள் விழாக்கல்ல இப்போ நுரை அடிச்சு விளையாட ஆரம்பிச்சுட்டோம்ல?  குளிர்பானங்கள் நுரையோடு திறக்கபடுவதைத் தானே நாம் எதிர்பார்க்கிறோம். வெற்றியையும், சந்தோசத்தையும் பகிர்ந்துகொள்ளும் எல்லா தருணங்களிலும் நுரை பொங்கும் பீர் பாட்டில் களுக்குதானே போட்டா போட்டி நடக்குது.

     
             சோப்பு போடும் போது நுரை வரலைன்னு வச்சுகோங்க, குளிச்ச திருப்தியே வராதுல. தலைல ஷாம்பூ போடும் போது நுரை வரலைன்னு வச்சுகோங்க, ஒரு நிம்மதியே வராதுல. முகச் சவரம் செய்யும் போதும் நுரை தேவப் படுதுல. பல்லு வெலக்கும்போது வாயில நுரை வரணும்ல (இது அந்த நுரை இல்லைங்க. பேஸ்ட்டு  நுரை.).
             ஆக, நுரை ங்கற  ஒரு விசயம் நம்ம வாழ்க்கையில மகிழ்ச்சிக்கான ஒரு தூண்டுகோலாவே ஆகிருச்சு பாருங்களேன். 
              இந்த ஒரு விசயத்ததாங்க, எல்லா தயாரிப்பாளர்களும் (சோப்பு, ஷாம்பூ  கிரீம், பானங்கள் மற்றும் இதர பொருள்கள் தயாரிக்கும்) பயன்படுத்திகிட்டாங்க. ரசாயனப் பொருள்கள பயன்படுத்தி தயாரிக்கிற எல்லாத்தையும் நம்ம கிட்ட பயன்படுத்த சொல்லி விளம்பரப்  படுத்துறாங்க. நாமளும், தலைக்கு சிகைக்காயயையும் , உடம்புக்கு மூலிகைப் பொடியையும், பல்லுக்கு சூரனத்தையும் விட்டுட்டு, சோப்பையும், ஷாம்பூவையும், டூத் பேஸ்ட்டையும் தூக்கிகிட்டு ஆரோக்கியத்த அம்போன்னு விட்டுட்டு அலையுறோம். நமக்கு என்னமோ நம்ம கவுரவம், நம்ம பெருமை தான முக்கியம்......
             ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருதுங்க : பெருமைக்கு, ஒருத்தன் என்னமோ பண்ணுனானாம்.....
                   .இதெல்லாம் அழிவுக்குத்தான்.

16 நவம்பர் 2013

டண்டணக்கா.......ஹே.......டணக்குணக்கா.............

மூத்தோர்களை/வயதானவர்களை/வயோதிகர்களை எடுத்தெறிந்து பேசும்/ மரியாதை குறைவாக நடத்தும் எந்த சமூகமும்/சமுதாயமும்/யாரும் வாழ்வில் முன்னேற்றத்தை காண்பது அரிதே.... அவர்களின்  சந்தோசத்தில், அப்படி என்ன நமக்கு கவலை?  அவர்கள் சந்தோசமாய் இருந்தால் நாம் எதற்கு கவலை கொள்ள வேண்டும்? உடனே, நமக்கு மற்றுமொரு கேள்வி எழலாம்: நம்மை கவலையில் ஆழ்த்தும் அளவுக்கு அவர்களின் சந்தோச நடவடிக்கைகள் இருந்தால், நாம் என்னதான் செய்வது....? அப்படி ஒருவர் நடந்து கொண்டால், அவரை வயதானவராகவோ, முதியவராகவோ, வயோதிகராகவோ கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள், மனிதனாக மட்டும் கருதுங்கள். மனிதனை மதியுங்கள்.
          சக மனிதனின் / மனுசியின் உணர்வுகளை புரிந்து கொள்ள, குறைந்த பட்சம் முயற்சியாவது எடுப்போமே.
            நண்பர்களே, நண்பிகளே, தோழர்களே, தோழிகளே, உறவுகளே... முன் எப்போதோ முகநூலில் படித்த ஒரு பதிவுதான்  ஞாபகத்திற்கு வருகிறது.
                   "மனதில் பட்டதையெல்லாம் பேசி (செய்து) விடாதிர்கள். சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள்." அவ்வாறு பிரிந்து செல்பவர்கள், நம் அன்புக்கு உரியவர்களாய் இருந்தால்......?
                      தோழர்களே, தோழிகளே, உறவுகளே ஆணவம் அகற்றி, அகங்காரம் அழித்து, வெறியை தணித்து அன்பு செய்ய கற்றுக் கொள்வோம்.
         ரொம்ப சிம்பிளா சொன்னா......... "இன்னைக்கு செத்தா, இன்னைக்கே பாலு...." அப்பால எதுக்குப்பா இந்த ஆணவம், அகங்காரம், அகந்தையெல்லாம்.......என்னமோ போங்கப்பா.... பூமாதேவி சிரிக்கபோரா எல்லாரும் உள்ள போக போறோம்..........டண்டணக்கா.......ஹே.......டணக்குணக்கா.............