23 ஜனவரி 2011

நிஜம்

இது கலசலிங்கம் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் போது வகுப்பறையில் அமர்ந்து எழுதியது (இதில் முதலில் வருவது என் வார்த்தைகளின் தொகுப்பு. அடுத்து வருவது ரமணனின் வார்த்தைகள். கடைசியில் வருவது மீண்டும் நான் கூறியது) :

காதலைத் தேடி

அலைந்தேன்.

கண்டேன்.

கன்னியவள் மனதில்

கைதியாக.

காதல் காலியாக

நான்

சிறை மீட்க.

கன்னியின்

நீதிமன்றத்தில் வழக்கு.

வாய்தாக்களில் வாழ்க்கை

முடிந்துவிடுமோ...?

நல்லா வேலை

கஜினியின் என்னில்

காதலுக்கு விடுதலை.

இருவரும் கலந்தோம்.

காதலில் கரைந்தோம்.

இப்பொழுது நாங்களில்லை.

எங்கள்

காதல் மட்டும்

சரித்திரப் புத்தகத்தில்.

- சங்கரின் பேனா மூலம் வரல்லாற்றுக் காதலர்கள்-

கனவுகளுக்கு கடிவாளமிட்டு

நிஜங்களில் நீந்தக் கற்றுக்கொள்.

- ரமணன்-

என் கனவில் மட்டுமே

என் காதலி என் முன்.

பின் எப்படி

கனவுகளுக்குக் கடிவாளம்...?

- சங்கர்-

நல்லது நடக்கட்டும்.

ஆசிரியர் மகிழ்ச்சி கழகத்தின் புத்தாண்டு கூட்டத்தில் நான் வாசித்த கவிதை. (2002/2003) :
நல்லது நடக்கட்டும்.
சிந்தை கேட்ட சிலதுகள்
சிதிலமடையட்டும்.
முன்னெது பின்னெது
என அறியாமல்
ஆர்ப்பரிக்கும் அறிவிலிகள்
அழியட்டும்.
குறை கூறி
குறுகிப் போன நாவு
எப்பொழுதாவது வாழ்த்துகள்
கூறி நீலமாகட்டும்.
வாழ்த்துகளுக்காக
வாசற்கதவைத் திறக்கும் செவிகள்
குறை கேட்க
சன்னல்களையாவது திறக்கட்டும்.
புகழுக்காய் ஏங்கும் மனம்
சிலகாலம்
புத்திக்காய் ஏன்கட்டும்.
மந்த புத்தியுள்ள மானுடம்
முதலில்
தன்னை அறியட்டும்
அடுத்தவனை பிறகு
ஆராயட்டும்.
அசிங்கம் அமுங்கி அழியட்டும்.
அழகு பொங்கி வழியட்டும்.

உன்னால்...

உன்னால்...
சிலரால்
சிலரது சிலுவைகள்
சிறகுகளாகும்.
எனக்கு உன்னால்.

நீயும்தான்...

நீயும்தான்...

சிக்கல் நிறைந்த

சில சந்தர்ப்பங்கள்

என்னை

சிந்திக்கத் தூண்டும்.

சில சந்தர்ப்பங்களில்

நீயும்தான்.

வார்த்தைகள் வங்கிகளில்

இருவருக்கிடையிலான வாய் வார்த்தை சண்டையின் வெளிப்பாடு :

வார்த்தைகள் வங்கிகளில்

தெரிந்துகொள்

என் சிநேகிதியே!

உன்

வார்த்தைகள்

வங்கிகளில் சேமிக்கப்படுகின்றன.

வட்டியும்

முதலுமாய்த்

திருப்பியளிக்கப்படும்.

ம (களிர்) றுப்பு தினம்.

2000 மாவது வருடங்களின் தொடக்கத்தில் வந்த ஒரு மகளிர் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது.

ம (களிர்) றுப்பு தினம்.

கருவறையில்

உன் துள்ளலும் துடிப்பும்

உன் தாயின்

கட்டளைபடியா...?

கருவறைக்கும்

உனக்கிருந்த

உன் இயல்பு

இன்று

உன்னிடத்தில் வெற்றிடமே!

ஜீன்சும் டீசர்டும்

சுடிதாரும் குட்டைபாவாடையும்

உன் உரிமைகளை

பறைசாற்றப் போவதில்லை.

உன் கோட்டைக்குள்ளேயே

உன் கொடி

அரைக் கம்பத்தில்தான் பறக்கிறது.

குற்றவாளிகளுக்கு

ஒரு நாள் தண்டனை

ஒரு நாள் விடுதலை.

நீ

தினமும் காலையில்

விடுதலையாகி

மாலையில் சிறைபடுகிறாய்.

எந்தக் கிளி

கூண்டை நாடும்...?

நீ நாடுகிறாய்....?

சுதந்திரப் பறவை

சிரகருபட தலைப்படுமோ...?

உன் உரிமைகளை

தினமும்

கசாப்புக் கடையின்

கத்திகள் கற்பழிக்கும்.

நீயோ

உரிமைகளை இழந்து

உயிரற்ற பிண்டமாய்

வர்டமொருமுறை

ஆனந்தக் கூத்தாடுவாய்.

உந்தன் உரிமைகளுக்கு

கருவறையே

கல்லறையானதோ...?

வார்த்தை கவிதை

இதழ்

முத்தம்

சங்கமம்

இரத்தம்

ஜனனம்

சொந்தம்

மொத்தம்

இல்லை

பித்தம்

குத்தம்

வருத்தம்

நித்தம்

அனைத்தும்

சுத்தம்.

19 ஜனவரி 2011

இதயத்தை இடம் மாற்றுவாயா...?

கவனிப்பாரற்று கிடந்த
என் இதயம்
சட்டென்று ஒரு நாள்
சற்றும் யோசியாமல்
சரேலென்று வெளியேறியது.
இடப்பாக வெற்றிடத்துடன்
இதயம் தேடி அலைந்தேன்.
என் இதயத்தின்
இருப்பிடம் பற்றி
இம்மியளவும் தகவலில்லை.
இதயம் மறந்து
இலக்கியம் தேடி புறப்பட்டேன்.
இலக்கியம் கண்டேன்.
கவனிப்பாரற்று கிடந்த
என்னிதயம்
இலக்கியத்தில்
இறுமாப்பாய் அமர்ந்திருக்கிறது.
என்
இதயத்தை
எனக்கு
இடம் மாற்றுவாயா...?
ப்ளீஸ்...?