23 ஜனவரி 2011

நல்லது நடக்கட்டும்.

ஆசிரியர் மகிழ்ச்சி கழகத்தின் புத்தாண்டு கூட்டத்தில் நான் வாசித்த கவிதை. (2002/2003) :
நல்லது நடக்கட்டும்.
சிந்தை கேட்ட சிலதுகள்
சிதிலமடையட்டும்.
முன்னெது பின்னெது
என அறியாமல்
ஆர்ப்பரிக்கும் அறிவிலிகள்
அழியட்டும்.
குறை கூறி
குறுகிப் போன நாவு
எப்பொழுதாவது வாழ்த்துகள்
கூறி நீலமாகட்டும்.
வாழ்த்துகளுக்காக
வாசற்கதவைத் திறக்கும் செவிகள்
குறை கேட்க
சன்னல்களையாவது திறக்கட்டும்.
புகழுக்காய் ஏங்கும் மனம்
சிலகாலம்
புத்திக்காய் ஏன்கட்டும்.
மந்த புத்தியுள்ள மானுடம்
முதலில்
தன்னை அறியட்டும்
அடுத்தவனை பிறகு
ஆராயட்டும்.
அசிங்கம் அமுங்கி அழியட்டும்.
அழகு பொங்கி வழியட்டும்.

கருத்துகள் இல்லை: