23 ஜனவரி 2011

நிஜம்

இது கலசலிங்கம் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் போது வகுப்பறையில் அமர்ந்து எழுதியது (இதில் முதலில் வருவது என் வார்த்தைகளின் தொகுப்பு. அடுத்து வருவது ரமணனின் வார்த்தைகள். கடைசியில் வருவது மீண்டும் நான் கூறியது) :

காதலைத் தேடி

அலைந்தேன்.

கண்டேன்.

கன்னியவள் மனதில்

கைதியாக.

காதல் காலியாக

நான்

சிறை மீட்க.

கன்னியின்

நீதிமன்றத்தில் வழக்கு.

வாய்தாக்களில் வாழ்க்கை

முடிந்துவிடுமோ...?

நல்லா வேலை

கஜினியின் என்னில்

காதலுக்கு விடுதலை.

இருவரும் கலந்தோம்.

காதலில் கரைந்தோம்.

இப்பொழுது நாங்களில்லை.

எங்கள்

காதல் மட்டும்

சரித்திரப் புத்தகத்தில்.

- சங்கரின் பேனா மூலம் வரல்லாற்றுக் காதலர்கள்-

கனவுகளுக்கு கடிவாளமிட்டு

நிஜங்களில் நீந்தக் கற்றுக்கொள்.

- ரமணன்-

என் கனவில் மட்டுமே

என் காதலி என் முன்.

பின் எப்படி

கனவுகளுக்குக் கடிவாளம்...?

- சங்கர்-

4 கருத்துகள்:

Rengaprabhu Natarajan சொன்னது…

intha kavidaya padichathum kannadasan paatuthaan nyabagathukku varuthu.

Avan kanavil aval varuval avanai paarthu siripaal.aval kanavil yaar varuvaar yaarai paarthu nagaipaal. :)

theerppavan சொன்னது…

நானும் கண்ணதாசன் மாதிரியே யோசிக்கிரேனோ...?

Kar சொன்னது…

Thoda, Thaadi vacha Vaali, from Pannaipuram.

Meendum Kar சொன்னது…

Bhai Wah, Wah Taj Boliye.