23 ஜனவரி 2011

ம (களிர்) றுப்பு தினம்.

2000 மாவது வருடங்களின் தொடக்கத்தில் வந்த ஒரு மகளிர் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது.

ம (களிர்) றுப்பு தினம்.

கருவறையில்

உன் துள்ளலும் துடிப்பும்

உன் தாயின்

கட்டளைபடியா...?

கருவறைக்கும்

உனக்கிருந்த

உன் இயல்பு

இன்று

உன்னிடத்தில் வெற்றிடமே!

ஜீன்சும் டீசர்டும்

சுடிதாரும் குட்டைபாவாடையும்

உன் உரிமைகளை

பறைசாற்றப் போவதில்லை.

உன் கோட்டைக்குள்ளேயே

உன் கொடி

அரைக் கம்பத்தில்தான் பறக்கிறது.

குற்றவாளிகளுக்கு

ஒரு நாள் தண்டனை

ஒரு நாள் விடுதலை.

நீ

தினமும் காலையில்

விடுதலையாகி

மாலையில் சிறைபடுகிறாய்.

எந்தக் கிளி

கூண்டை நாடும்...?

நீ நாடுகிறாய்....?

சுதந்திரப் பறவை

சிரகருபட தலைப்படுமோ...?

உன் உரிமைகளை

தினமும்

கசாப்புக் கடையின்

கத்திகள் கற்பழிக்கும்.

நீயோ

உரிமைகளை இழந்து

உயிரற்ற பிண்டமாய்

வர்டமொருமுறை

ஆனந்தக் கூத்தாடுவாய்.

உந்தன் உரிமைகளுக்கு

கருவறையே

கல்லறையானதோ...?

கருத்துகள் இல்லை: