22 மார்ச் 2012

அம்மா வாழ்க! கழகம் வளர்க! - 3

சங்கரன் கோவில் இடைத் தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து, நேற்று காலை வரை எங்க ஏரியால (கோவில்பட்டி - சாலைபுதூர் - இ பி காலனி) கரண்ட்டு கட்டே இல்ல (தேர்தல் முடிவு அறிவிச்ச உடனே எங்களுக்கும்வச்சாங்க ஆப்பு ). நாங்கல்லாம் என்ன நெனச்சோம்னா, +2 பரீச்சை ஆரம்பிசுருச்சுல அதுனால கரண்ட்ட கட் பண்ணலன்னு. ஆனா, அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, கோவில்பட்டி ஊருக்குள்ள எப்பவும் போல பவர் கட் இருக்குதுன்னு. பெறகு, என்ன ஏதுன்னு விசாரிச்சு பாத்தா, எங்க ஏரியால தான் நம் தமிழகத்தின் மாண்புமிகு அமைச்சர்கள்ள பாதி பேரு தங்கி இருக்காங்கன்னு தெரிஞ்சது. இப்படி இருந்தா பெறகு ஏன் எங்க ஏரியால கரண்ட் கட் ஆகுது? கரண்ட கட் பண்ணா அந்த ஏரியா இ.பி. ஆபிசர எங்க அமைச்சர் .......அடிச்சுர மாட்டாரு...?
இப்பதான், நமக்கு ஒரு யோசனை தோணுது, இடைதேர்தல் நடந்தா அந்த தொகுதிக்கு உட்பட்ட ஏரியாக்கள்ல கரண்ட் கட் இல்லாம பாத்துகுராங்கல்ல, அப்பன்னா, எல்லா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தா எல்லா தொகுதிக்கும் உட்பட்ட பகுதிகள்ல மின்சாரம் தடை இல்லாம கிடைக்கும்ல - நம்ம மாநிலத்தின் எல்லா அமைச்சர்களும் அந்த தொகுதிகள்ல இருப்பாங்கல்ல.
ஒருவேளை, இப்படி பண்ணுனா அமைச்சர்களுக்கு துறை சார்ந்த வேலைகள கவனிக்க முடியாம போயிருமேன்னு, ஒரு கவலை புதுசா தோணுச்சுனா.... நாம இடைத் தேர்தல் துறைன்னு ஒரு துறைய புதுசா உருவாக்கி, அந்த துறைக்கு ஒரு 30 பேர அமைச்சர்களா ஆக்கிட்டோம்னா, அவுங்க பாட்டுக்கு இடைத் தேர்தல் சம்பந்தமான எல்லா வேலைகளையும் கவனிச்சுகிருவாங்க. நம்ம அம்மாதான்எப்பவுமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் . அம்மா வாழ்க! கழகம் வளர்க!

கருத்துகள் இல்லை: