08 மார்ச் 2012

அம்மா வாழ்க! கழகம் வளர்க! - 2

நேத்து நைட்டு 10 மணிக்கு மேல கரண்ட்டு கட் ஆகல. ரொம்ப சந்தோசம். காலைலயும் 6 மணிக்கு கரண்ட்டு கட் ஆகல.ரொம்ப ரொம்ப சந்தோசம். ஆனா பயமும் கூட சேந்துகிருச்சு. மொத்தமா ரெண்டு நாளைக்கு கரண்ட் இல்லாம செஞ்சுட்டாங்கனா.... அம்மா புண்ணியத்துல ஏதோ கொஞ்சம் நஞ்சம் கெடைக்குது..... அப்புறந்தான் தெரிஞ்சது, இன்னைக்கு +2 பரீட்சை ஆரம்பிக்குதாம். அம்மாதான் கல்விக்கு முக்கியத்துவம் குடுக்குற கடவுளோட மற்றொரு அவதாரம்ல (சூ சூ......அண்ணா நூற்றாண்டு நூலகத்த மாத்துனத, சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவிச்சதெல்லாம் அப்போ, இது இப்போ.) அதுனால, பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாதுங்குறதுக்காக கரண்ட்ட கட் பண்ணல. வருஷம் 365 நாளும் +2 பரிட்ச்சை நடந்தா எப்படி இருக்கும்....? அம்மா வாழ்க! கழகம் வளர்க!

கருத்துகள் இல்லை: