08 பிப்ரவரி 2011

அம்மா!

அம்மா!
நான் உயிர் வாழ
தன் உதிரம் கொடுத்தவள்.
என்னை உதிர்க்காமல்
உலகம் காணச் செய்தவள்.
பல இரவுகள் எனக்காக
உறக்கம் உதிர்த்தவள்.
உணவை தன் குருதி
தந்தவள்.
என் தந்தையை எனக்கு
அறிமுகம் செய்தவள்.
என் அழுகையின்
பொருளை உணர்ந்தவள்.
என் சிரிப்பில்
சிலாகித்தவள்
தன் மடியை
எனக்கு மெத்தை ஆக்கியவள்.
எனக்கு இயற்கையை
அறிமுகம் செய்தவள்.
இயற்கையோடு என்னை
ஒப்பீடு செய்தவள்.
வெண் மதியை
எனக்காய்
பூக்காரி ஆக்கியவள்.
என் வெள்ளை சிரிப்பில்
தன் உள்ளம் குளிர்ந்தவள்.
என் வளர்ச்சியை
ஆவலாய் உற்று நோக்கியவள்.
என் பாதையை
செம்மையாக்கியவள்.
என் நோயில்
அவள் உடல் சிறுத்தவள்.
உள்ளம் அழுதவள்.
எனக்காய் அனைத்தையும்
இழந்தவள்.
அம்மா!

3 கருத்துகள்:

santhi சொன்னது…

excellent

theerppavan சொன்னது…

நன்றி!

Velmurugan சொன்னது…

Super :)