10 ஆகஸ்ட் 2015

நீ இருப்பதால் நானும் இருக்கிறேன்!!!

உன் புன்னகையில்
நான் பூக்கிறேன்.
உன் உறக்கத்தில்
நான் உயிர் பிரிகிறேன்.
உன் கொட்டாவியில்
நான் இமை பிரிக்கிறேன்.
உன் பார்வையில்
நான் களவாடப் படுகிறேன்.
உன் பிடிவாதத்தில்
நான் தளர்ந்துவிடுகிறேன்.
உன் வேலைகளில்
நான் இயங்குகிறேன்.
உன் நடையில்
நான் நிலைகுலைகிறேன்.
உன் பாடலில்
நான் பாடுகிறேன்.
உன் "போங்க" க்களில்
நான் இருந்தே விடுகிறேன்.

அட என்னமோ போமா.........

நீ இருப்பதால்
நானும் இருக்கிறேன்.

# செல்லம்மா!!!





கருத்துகள் இல்லை: