16 நவம்பர் 2013

டண்டணக்கா.......ஹே.......டணக்குணக்கா.............

மூத்தோர்களை/வயதானவர்களை/வயோதிகர்களை எடுத்தெறிந்து பேசும்/ மரியாதை குறைவாக நடத்தும் எந்த சமூகமும்/சமுதாயமும்/யாரும் வாழ்வில் முன்னேற்றத்தை காண்பது அரிதே.... அவர்களின்  சந்தோசத்தில், அப்படி என்ன நமக்கு கவலை?  அவர்கள் சந்தோசமாய் இருந்தால் நாம் எதற்கு கவலை கொள்ள வேண்டும்? உடனே, நமக்கு மற்றுமொரு கேள்வி எழலாம்: நம்மை கவலையில் ஆழ்த்தும் அளவுக்கு அவர்களின் சந்தோச நடவடிக்கைகள் இருந்தால், நாம் என்னதான் செய்வது....? அப்படி ஒருவர் நடந்து கொண்டால், அவரை வயதானவராகவோ, முதியவராகவோ, வயோதிகராகவோ கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள், மனிதனாக மட்டும் கருதுங்கள். மனிதனை மதியுங்கள்.
          சக மனிதனின் / மனுசியின் உணர்வுகளை புரிந்து கொள்ள, குறைந்த பட்சம் முயற்சியாவது எடுப்போமே.
            நண்பர்களே, நண்பிகளே, தோழர்களே, தோழிகளே, உறவுகளே... முன் எப்போதோ முகநூலில் படித்த ஒரு பதிவுதான்  ஞாபகத்திற்கு வருகிறது.
                   "மனதில் பட்டதையெல்லாம் பேசி (செய்து) விடாதிர்கள். சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள்." அவ்வாறு பிரிந்து செல்பவர்கள், நம் அன்புக்கு உரியவர்களாய் இருந்தால்......?
                      தோழர்களே, தோழிகளே, உறவுகளே ஆணவம் அகற்றி, அகங்காரம் அழித்து, வெறியை தணித்து அன்பு செய்ய கற்றுக் கொள்வோம்.
         ரொம்ப சிம்பிளா சொன்னா......... "இன்னைக்கு செத்தா, இன்னைக்கே பாலு...." அப்பால எதுக்குப்பா இந்த ஆணவம், அகங்காரம், அகந்தையெல்லாம்.......என்னமோ போங்கப்பா.... பூமாதேவி சிரிக்கபோரா எல்லாரும் உள்ள போக போறோம்..........டண்டணக்கா.......ஹே.......டணக்குணக்கா.............




கருத்துகள் இல்லை: