14 ஜூன் 2011

மார்கங்கள் (மதங்கள்) - ஒரு பார்வை.

மார்கங்கள் (மதங்கள்) - ஒரு பார்வை.

ராமர் இருந்தாரா இல்லையா ங்கறது விசயமே இல்ல. ராமரா உருவகப் படுத்தப்பட்ட ஒன்னு ஏதோ ஒரு விசயத்த சொல்லிட்டு போயிருக்குல... அந்த நல்ல விசயத்த நாம எடுத்துகிரதுல என்ன தப்பு இருக்கு....? ரொம்ப நல்லா ஆழமா எல்லா வேதத்தையும் வாசிச்சுப் பாத்தோம்னா, ஒன்னு புரியும், "எந்த நோக்கத்தோட வேதத்த வாசிக்கிறோமோ அதுவாவே நாம மாறுவோம்". இஸ்லாத்துல உதாரணம்: தீவிரவாதம் பண்ணி அழிஞ்சு போன ஒசாமா பின் லேடனும், இன்னமும் நமக்குப் பக்கத்துல யாரோ ஒரு சிலருக்கு அவுங்களால முடிஞ்சா உதவிய அமைதியா செஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்குற ஒரு இஸ்லாமிய நண்பனும். இந்துயிசத்துல உதாரணம்: கடவுள் பெயரால் மக்களை ஏமாத்திகிட்டு இருக்குற நம்ம ஊரு போலி சாமியார்களும், இன்னமும் நமக்குப் பக்கத்துல யாரோ ஒரு சிலருக்கு அவுங்களால முடிஞ்சா உதவிய அமைதியா செஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்குற ஒரு இந்துயிசத்த பின்பற்றிகொண்டு மற்றவர்களைப் பற்றி குறை சொல்லாத நம்ம நண்பனும். இந்த மாதிரி, இருக்குற இந்த உலகத்துல இருக்குற இன்னும் பல பல இசங்களில் இருந்து உதாரணம் சொல்லலாம். சுருக்கமா சொன்னோம்னா, எந்த இசமும் மக்களை நாசமா போங்கனு சொல்லல; நாமவேனா அப்படி புரிஞ்சு நடந்துக்கலாம். எல்லா இசங்களும் மக்களுக்கு நல்ல விசயங்கள்தான் சொல்லியிருக்கு.

எந்த மார்கங்களும், அப்பன் ஆத்தாளுக்கு சோறு போடாதேன்னு சொல்லியிருக்கா...? கஷ்டப்படுரவன்கிட்ட இருந்து திருடி நீ சந்தோசமா இருன்னு சொல்லியிருக்கா...?

எல்லா மார்க்க விசயங்களையும், நம்ம மண்ணோட, கலாச்சாரத்தோட, பண்பாடோட, சூழ்நிலையோட பொருத்தி பாத்து புரிஞ்சு நடந்துக்கிரனும். அரேபியாவுல, இருக்குற மாதிரியே இங்கயும் இருக்க வேண்டிய அவசியம் இல்ல. ராமஜென்ம பூமியில, ராமர் பிறந்தப்போ இருந்த மாதிரியே இப்பவும் தமிழ்நாட்டுல இருக்குற கரிச்சாம்பட்டியிளையும் இருக்கணும்னு அவசியம் இல்ல. புத்த கையா ல புத்தருக்கு ஞானம் பிறந்தப்போ எப்படி எல்லாரும் இருந்தாங்களோ அப்படியே இப்பவும் இருக்கணும்னு தேவை இல்ல.

அப்படித்தான் இருக்க உங்களுக்குப் பிடிக்கும்னா அப்படியே இருந்துக்கோங்க. அதனால வர்ற விளைவுகளையும் பயன்களையும் நீங்களே அனுபவிங்க.

உங்களுக்கு எந்த மார்கங்கள் மேலையும் நம்பிக்கை வரலையா, அதுமேல நம்பிக்கை இருக்குறவங்கள கேவலப் படுத்தாதிங்க. நீங்க திருக்குறளைப் படிச்சு அதன் படி வாழ முயற்சி பண்ணுங்க. திருக்குறள்ள சொல்லியிருக்குரதுக்கும், வேதங்கள்ள சொல்லி இருக்கிறதுக்கும் வித்தியாசம் இல்லை. அதுலயும் நல்லா வாழுங்கன்னுதான் சொல்லி இருக்கு. இதுலயும் நல்லா வாழுங்கன்னு தான் சொல்லியிருக்கு. அடுத்தவங்கள கெடுக்காதீங்க னுதான் சொல்லியிருக்கு.

13 ஜூன் 2011

கோவில்பட்டி புதிய பேருந்து (நிலையம்) நிறுத்தம்.

கோவில்பட்டி புதிய பேருந்து (நிலையம்) நிறுத்தம்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில், இதற்கு முந்தைய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் செல்வி. ஜெயலலிதா அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய பேருந்து நிலையம் தற்போது பொது மக்களுக்கு சற்றும் பயன் படாத வகையில் பெரும் சிரமத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் சாலையோரப் பேருந்து நிறுத்தமாகவே உள்ளது.


இங்க நாம சொல்லுறது வெறும் விளையாட்டான விஷயம் இல்லைங்க. உண்மையிலயே இந்த பேருந்து நிலையத்துக்குள்ள இப்போ ஒரு பேருந்தும் வர்றதில்ல. எல்லா பேருந்துகளும் நிலையத்துக்கு வெளியவே நின்னு பயணிகளை ஏத்திகிட்டு இறக்கி விட்டுட்டு போயிகிட்டு இருக்கு. இதுல ரொம்ப ஆபத்தான காரியம் என்ன நடந்துகிட்டு இருக்குதுனா, பேரு வாரியான பேருந்துகள் நிலையத்துக்கு பக்கத்துல இருக்குற "அணுகு சாலையில" (சர்விஸ் ரோடு) வர்றது இல்ல. மெயின் ரோட்ல தான் வருது. இதுலதான் பேராபத்தே இருக்குது. எப்படினா, திருநெல்வேலி பக்கம் பயணம் போகப் போற ஒருத்தரு, அணுகு சாலையில இருந்து ஒரு பிரதான சாலைய(திருநெல்வேலி-மதுரை) கடந்து மேலும் அடுத்த பிரதான சாலைக்கு போயி பஸ் ஏறனும். இந்த சமயத்துல, முதல் பிரதான சாலைய கடக்கும் போது, விபத்து நடக்குரதுக்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம். நிறைய விபத்துகள் நடந்துகிட்டு இருக்குது. இந்த பேருந்து நிலையத்துக்கு தென் வடப் புறங்கள்ள மேம்பாலங்கள் இருக்கின்றன. ஆக ரெண்டு பக்கம் இருந்து வர்ற பேருந்துகளும் இதர வாகனங்களும் அதிக வேகத்துலதான் வருதுங்க. அணுகு சாலையில இருந்து பிரதான சாலைக்கு வர்றவுங்க ரெண்டு புறமும் கவனிக்காம (மேல இருக்குற படத்தப் பாருங்க) வந்தாங்கனா விபத்து நிச்சயம். பிரதான சாலையில வர்ற பேருந்த, எங்க நாம தவற விட்ட்ருவோமோ ன்ற பதட்டத்துல பெரும்பான்மையான நேரங்கள்ல ரெண்டு புறமும் கவனிக்கத் தவறீர்றாங்க. விபத்துல சிக்கிர்றாங்க. உயிர் சேதம் நடக்குற அளவுக்கு கூட விபத்து நடந்துருக்கு.


இப்ப சொல்லுங்கங்க, இப்படி மோசமான நெலமையில இருக்குர பொது மக்களுக்கு ஆபத்த ஏற்படுத்துற இந்த மாதிரி ஒரு பேருந்து நிலயத்த எப்படிங்க பேருந்து நிலையம்னு சொல்ல முடியும்? இத பேருந்து நிருத்தம்னுதானே சொல்லணும்?


இந்த பேருந்து நிலயத்த முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாததுக்கு பல காரணங்கள் சொல்லப் பட்டாலும், (இடையில கொஞ்ச காலம் இந்தப் பேருந்து நிலையமும் முழுப் பயன்பாட்டுல இருந்துச்சு) காரணமா இருந்தாலும், அத எல்லாத்தையும் நிவர்த்தி செஞ்சுட்டு, இந்த நிலயத்த முழுப் பயன்பாட்டுக்கு கொண்டுவரணும்.


என்னதான், மக்கள் அரசாங்கத்தின் அடிமையா இருந்தாலும், அவிங்களோட உசுரும் முக்கியம் தானே...? உங்க உசுர மட்டும் ஒசரத்துல வச்சு பாக்கும் போது, அவிங்க உசுர மட்டும் மசுரு மாதிரி நெனைக்கிறது கொஞ்சமும் நல்லா இல்லையில...?


நாங்க கேக்குறது எல்லாம் ஒன்னுதாங்க, ஒன்னு, அந்தப் பேருந்து நிலயத்த முழுப் பயன்பாட்டுக்கு (பழையப் பேருந்து நிலயத்த கிழக்க மற்றும் வடகிழக்கு பக்கம் போகுற பேருந்துகளுக்கான தாவும், புதிய பேருந்து நிலயத்த தெற்கு மற்றும் வடக்குப் பக்கம் போகுற பேருந்துகளுக்கான நிருத்தமாவும் வைக்கலாம்) கொண்டு வாங்க, இல்லையினா அத மொத்தமா இடிச்சுப் போட்டுருங்க. எங்கள ஏமாத்திக்கிட்டே மட்டும் இருக்காதிங்க. நாங்களும் பாவந்தான...?


12 ஜூன் 2011

அரசுப் பேருந்துகளைப் புறக்கணித்தால் என்ன...?

அரசுப் பேருந்துகளைப் புறக்கணித்தால் என்ன...?



போன வாரத்துல ஒருநாள், கோவில்பட்டில இருந்து திருநெல்வேலிக்கு அரசு விரைவு பேருந்துல பயணம் செய்ய வேண்டிய ஒரு மோசமான் சூழ்நிலை எனக்கு வந்தது. கோவில்பட்டி புது பஸ் ஸ்டாப்ல (அத புது பஸ் ஸ்டாண்ட் னு சொல்ல முடியாது. ஏன்னா, அந்த பஸ் ஸ்டாண்டுக்குள்ள எந்த பஸ்சும் வராது. வெளியிலயே எல்லா வேலையையும் முடிச்சுட்டு
அப்படியே போயிரும்.) இருந்து அரசு விரைவு பேருந்துல ஏறி உக்காந்தோம். கோவில்பட்டி-திருநெல்வேலி அந்த பேருந்துல 35 ரூபா கட்டணம். சுமார் காலை 9.15 மணிக்கு கோவில்பட்டில பஸ் ஏறினோம். திருநெல்வேலிக்கு காலை 10.36 மணிக்கு போயி சேந்தோம். ஏறக்குறைய 80 நிமிஷம் ஆகிருக்கு, 60 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க.
இதே அறுபது கிலோ மீட்டர் தூரத்த "பை பாஸ் ரைடர்" பஸ்ல 25 ரூபா குடுத்துக் கடக்க 55 நிமிஷம் மட்டும் தான் ஆகுது("பை பாஸ் ரைடர்" கோவில்பட்டில நின்னு ஆள் ஏத்திக்கிட்டு போகும். ஆனா, திருநெல்வேலில இருந்து கோவில்பட்டிக்கு ஆல் ஏத்திக்கிட்டு வர மாட்டாங்க.). சாதாரண "சூப்பர் பாஸ்ட் சர்விஸ் " பஸ்ல 21 ரூபா குடுத்துக் கடக்க 60 நிமிசம்தான் ஆகுது.
ஆனா, அரசு விரைவு பேருந்துல இதே அறுபது கிலோ மீட்டர் தூரத்த முப்பத்தஞ்சு ரூபா குடுத்துக் கடக்க எவ்வளவு நேரம் ஆகுதுன்னு கவனிச்சிங்களா? அன்னைக்கு, எங்களோட நெலம கூடப் பரவா இல்ல. நாங்க கோவில்பட்டில இருந்து திருநெல்வேலிக்கு தான் அந்த பஸ்ல பயணம் செஞ்சோம். அதே பஸ்ல, சென்னைல இருந்து பிரயாணம் செஞ்சுகிட்டு வந்தவங்களும் இருந்தாங்க. ரொம்ப பாவமா இருந்துச்சு. அவங்கெல்லாம், முந்துன நாள் நைட்டு 7 மணிக்கு பஸ் ஏறி இருக்காங்க. ஏறக்குறைய 15 மணி நேரம் பயணம் செஞ்சு திருநெல்வேலிக்கு வந்தாங்க. உண்மையிலயே, 12 மணி நேரத்துக்குள்ள சென்னைல இருந்து திருநெல்வேலிக்கு வந்துரலாம்.
சரி, பயண நேரத்த விடுங்க. ரொம்ப பாதுகாப்பா நம்மள கொண்டு வந்து விடுராங்கன்னு வச்சுக்கிறலாம்(இதுதானா ஒங்க பாதுகாப்பு....). மத்த வசதிகள்... கிழிஞ்சு நாறிக்கிட்டு இருக்குற இருக்கைகள், அந்து தொங்கிகிட்டு இருக்குற லைட்டுகள், அழுக்காகி தொங்கிகிட்டு இருக்குற ஜன்னல் திரைத் துண்டுகள்... இப்படி இன்னும் ஏராளமான முறையான பராமரிப்பு இல்லாத ஏகப்பட்ட வசதிகள். இதை எல்லாத்தையும் அனுபவிக்க நாம வழக்கத்த விட அதிகமான கட்டனத்தக் குடுத்து இந்த பஸ்ல பயணம் செய்யணும். என்ன கொடும சார் இது....?
இந்த விசயத்தக் கொஞ்சம் ஆழமா கவனிச்சுப் பாத்தீங்கனா, அதிகார வர்க்கத்தோட ஒரு சூழ்ச்சியப் புரிஞ்சுக்கலாம். அது என்னானா, கொஞ்சம் வசதி உள்ள மேல்தட்டு மக்களும், உயர் நடுத்தர வகுப்பினரும், இன்னும் அதிகமான பணம் கொடுத்து தனியார் ஆம்னி பஸ்ல போயிர்றாங்க; பல வசதிகளோட. அந்த மாதிரி பஸ்லாம் நல்லா சுத்தமாவே இருக்கு.



ஆனா, வசதி குறைவான, ஏழைகள் மற்றும் கீழ் நடுத்தர மக்களும் (அரசுப் பேருந்துல பயணம் செஞ்சா என்னானுக் கேக்குற நாங்களும்தான்...) 99% அரசாங்கப் பேருந்தைத் தான் பயன்படுத்துறாங்க. இவுங்களுக்கு, அரசாங்கம் என்ன வசதிகள செஞ்சு குடுத்துருக்கு. அரசாங்கத்துக்கு வருமானம் வர்றதுக்கு ஏற்பாடு செஞ்சு தர்ற இந்த மாதிரி மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான, வசதியான பயணம் ஒரு கேள்விக்குறியாத்தான் இன்னமும் இருக்கு. பணம் குடுக்குற அவங்கள, (எங்களையும் தான்) எந்த வசதியும் செஞ்சு குடுக்காம அல்லது, அந்த வசதிகள முறையா, ஏமாத்தத் தானே செய்யுறாங்க...?



ஏழைக்கு ஒரு நியாயம் பணக்காரனுக்கு ஒரு நியாயமா...? இது கொஞ்சமும் சரி இல்லாத ஒரு செயல் தான...? அரசுப் பேருந்த முறையாப் பயன்படுத்தாததுக்கு என்ன காரணமா இருக்கலாம்...? என்னையக் கேட்டா, இதுக்கு சோம்பேறித் தனமும், எனக்கென்ன வந்துச்சு அப்படிங்கற விட்டேத்தியான மன நிலையம் தான் காரணம்னு சொல்லுவேன்.



இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு சொல்லுறது? ஒருமுறை, இந்தக் கட்டுரையின் தலைப்பை படியுங்க. அதுபடியே முயற்சி செஞ்சு பாத்தாதான் என்ன?. இது கஷ்டமான விஷயம் தான். ஆனாலும் அடிக்க அடிக்க அம்மியும் நகரும்தானே...?


செய்யனுங்க. செஞ்சு பாக்கணும். அப்பத்தான், இவிங்களுக்கும் அறிவு வரும்.

04 ஜூன் 2011

அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் / நடத்துனர்களின் அலட்சியம்.












அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் / நடத்துனர்களின் அலட்சியம்.






கொஞ்ச நாளைக்கு முன்னாடி, காலைல எங்க ஏரியால வாக்கிங் போயிகிட்டு இருந்தப்போ, ரோட்டுல இந்த போர்டு கெடந்தது. எடுத்துட்டு வந்துட்டேன். இன்னமும் வீட்ல தான் இருக்கு. திரும்பவும் அத டெப்போல கொண்டு போய் கொடுக்கணும்னு வச்சுருக்கேன். இதக் கொண்டு போயி அங்க குடுத்தா இந்த மாதிரி இனிமே நடக்காதான்னு கேட்டா, அதுக்கு "தெரியாதுன்னு" தான் பதில் சொல்லணும். ஏதாவது செஞ்சு இதெல்லாம் சீக்கிரமே சரி செய்யணும்.

17 மே 2011

நீ அவன் நான் மற்றும் அந்தக் கயிறு

நீ அவன் நான் மற்றும் அந்தக் கயிறு
நடுவே கனமானக் கயிறு
அந்தப் பக்கம் நீ
இந்தப் பக்கம் அவன்.
கயிறு மட்டத்திற்கு மேல்
ஒரு ஓரத்தில்
உங்களிருவரையும்
பார்க்கும் விதத்தில்
நடுவராகவும் பார்வையாளனாகவும்
நான்.
நீங்களிருவரும் அவ்வப்போது
ஒவ்வொருமாதிரி மாறிக் கொள்கிறீர்கள்
ஆனால்
எப்பொழுதும் அந்தக் கயிறு மட்டும்
உங்கள் நடுவே.
சில நேரம் நீங்களிருவரும்
கையிறை விட்டு விலகி
தனித் தனியே தூரமாய்
சென்றுவிடுகிறீர்கள்.
சில நேரம் நெருங்கி வருகிறீர்கள்.
புன்னகைகிரீர்கள்
சத்தமாய் சிரிக்கிறீர்கள்.
கனமான அந்தக் கயிறு
மெல்லிய நூலாகிறது.
இச் சந்தர்பத்தை
நீங்களிருவரும் மிகச் சரியாக
பயன்படுத்துகிறீர்கள்
தொட்டுக் கொள்கிறீர்கள்
தடவிக் கொள்கிறீர்கள்
மெய் மறக்கிறீர்கள்
திடீரென்று
ஏதோவொன்று உங்களைக்
கலவரப் படுத்துகிறது.
இருவரும்
முறைத்துக் கொள்கிறீர்கள்
உங்கள் பார்வை
பயமுறுத்துகிறது
கோபத்தோடு முனங்கத் தொடங்குகிறீர்கள்.
ஒருவரை ஒருவர் திட்டிக்கொல்கிரீர்கள்.
முகத்துக்கு நேரே விரல் நீட்டி
வெறுப்பை வார்த்தைகளாய்
கொட்டி தீர்க்கிறீர்கள்.
உங்கள் இருவர் மீதான
கோபம் ஒருவருக்கொருவர்
அதிகரிக்க அதிகரிக்க
கயிறு கல்லாய் மாறுகிறது.
கல் பாரையாகிறது
பெரிய கல் திரை
இப்போது உங்கள் நடுவில்.
இருவரும் ஒருவாறாய்
இருவரிடமிருந்தும் பாதுகாக்கப்படுகிரீர்கள்.
மீண்டும் தூரமாய் செல்கிறீர்கள்.
நான்
பார்த்து ரசிக்கிறேன்.
நடுவராய் சிந்திக்கிறேன்.
கல்திரை உங்களிருவரையும்
காத்து விட்டது.
நேரம் கடந்து செல்கிறது.
நெருங்குகிறீர்கள்
கல் திரையைத் தட்டுகிறீர்கள்.
இருபுறமும்
கல் திரை கரைகிறது.
கல் கரைந்து
திரையாகிறது.
அந்தக் கயிற்றைப்
போல் திரை
ஒருவரைஒருவர்
தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை.
நீங்கள் நிழல்களைப் பார்த்துக் கொள்கிறீர்கள்.
உன் மனதின் ஈரம்
கண்களிலும்.
அவன் மனதி பாசம்
கண்களிலும்.
திரையின் உயரம்
குறைகிறது.
திரை கயிராகிறது.
புன்னகைக்கிறீர்கள்
சத்தமாய் சிரிக்கிறீர்கள்.
நீங்களிருவரும் அவ்வப்போது
ஒவ்வொரு மாதிரி மாறிக் கொள்கிறீர்கள்.
ஆனால் எப்போதும்
கயிறு மட்டும் உங்கள் நடுவே.
சில நேரம் கயிறாய்
சில நேரம் மெல்லிய நூலை
சில நேரம் கல்லாய், கல் திரையை
சில நேரம் திரையாய்.
நான்
நீங்கள் புன்னகைக்கும் போது
பார்க்கிறேன்
சத்தமாய் சிரிக்கும் போது
கவனமாய் புன்னகைக்கிறேன்.
இருவரின்
கோபப் பார்வைகள் சந்திக்கும் போது
சற்றே நிதானிக்கிறேன்.
வெறுப்பு
வார்த்தைகளாகும் போது
பயத்துடன் குழம்பிப் போகிறேன்.
இருவரின்
அனைத்து அசைவுகளுக்கும்
நானும் அசைகிரேன்.
உன் அமைதி
அவனை சில நேரம்
அழுது புரண்டு ஆர்ப்பாட்டம்
செய்ய வைக்கிறது.
அப்படியே அவனுடையது
உன்னையும்.
புன்னகைக்கிறீர்கள்
சிரிக்கிறீர்கள்
அழுதுவிடுகிரீர்கள்
கோபப் பார்வை
பார்த்துக் கொள்கிறீர்கள்.
திட்டிக் கொள்கிறீர்கள்
தூரப் போகிறீர்கள்
திரும்ப வருகிறீர்கள்.
எது எப்படி நிகழ்ந்தாலும்,
நீ அவன் நான் மற்றும் அந்தக் கயிறு.



29 ஏப்ரல் 2011

சுதந்திர அடிமைகள்!

சுதந்திர அடிமைகள்!
அடிமைகள்.
நாங்கள் அடிமைகள்!
அச்சுறுத்தும் ஆழிப்பேரலைகள்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்
மகா சமுத்திரத்தின்
நடுவில் இருக்கும்
கரடு முரடான
மலையின் உச்சியில்
தங்கக் கூண்டில்
நாங்கள் சுதந்திரமாய்
உலாவிக் கொண்டிருக்கிறோம்.
எங்கள்
கரங்களும் கால்களும்
கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
திறந்து விடப்பட்டிருக்கும்
எங்கள் கூண்டின்
கதவுகளில்
கட்டுவிரியன் பாம்புகளும்
கூறியப் பற்களோடு ஓநாய்களும்
காவலுக்கு நிற்கின்றன.
நாங்கள் அடிமைகள்.
சுதந்திரமாய் சுற்றித் திரிய
அனுமதிக்கப் பட்டிருக்கும்
சிறந்த அடிமைகள்.

19 ஏப்ரல் 2011

என்னான்னு சொல்ல....?

மனைவி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது அந்த வேலையில் உதவ தோன்றுகிறது. அம்மா வேலை செய்து கொண்டிருக்கும்போது வேடிக்கைப் பார்க்கத் தோன்றுகிறது. எங்கே கற்றுக் கொண்டேன் இதனை....? அனைத்து ஆண்களுக்கும் இது பொருந்துமோ....? பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை பெரும்பான்மையானவர்கள் மீசையில் மண் ஒட்டாமல் பார்த்துகொள்பவர்களாக இருக்கலாம். இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்தானே...!!!!