22 ஆகஸ்ட் 2016

குழந்தைகளாவே இருக்கட்டும்.


பெரியவிங்க லாம் குழந்தையா மாறணும்னு ஆசைப்படறப்போ, குழந்தைகளை மட்டும் பெரியவிங்க மாதிரி ரொம்ப டீசென்டா , அப்டியே புரோபோசனலா, இன்னும் எப்டிலாம் குழந்தை இருக்க வேண்டியதில்லையோ அப்டிலாம் இருக்கணும்னு நினைக்கிறது, கொஞ்சம் ஓவர் தான். ஒருமுறை, என்னோட மகனோட ஸ்கூலுக்கு PTM கு போயிருந்தேன். அங்க அவனைப் பத்தி "ரொம்ப ஜென்டில்... ரொம்ப டீசண்ட்"...னுலாம்  சொன்னாங்க. எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு..... கேட்டுட்டேன்...... அவன் கிளாஸ் ல எல்லார்ட்டையும் பேசுறானா, உங்கள்ட லாம் பேசுறானா, ஏதாவது சின்ன சின்ன சேட்டை பன்றானா னுலாம்  கேட்டுட்டேன். இந்த வயசுல எல்லார்ட்டையும் பேசி, சின்ன சின்ன சண்டை போட்டு சந்தோசமா இருக்க வேண்டியதுதானே.... இதை செய்ய  விடலைனா, இல்லைனா நம்ம குழந்தை அப்டி இல்லைனா எங்கையோ தப்பு நடக்குதுன்னு அர்த்தம். கவனிக்கணும்.
    இன்னொரு விஷயம், இதுல இந்த சமுதாயம் ங்கிற 4 பேரு இருக்காய்ங்க பாரு.... அவிங்கள சமாளிக்கணும். இவிங்க எங்கனாலும் இருப்பாய்ங்க.... நம்ம கூடவே இருப்பாய்ங்க..... நம்மள சுத்தி இருப்பாய்ங்க..... இவிங்களோட கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும், பார்வைகளுக்கும் நாம பதில் சொல்லணும்.
    குழந்தைகளை, குழந்தைகளாவே விட்டுர்ரதுதான் எல்லாருக்கும் ரொம்ப நல்லது. 

18 ஆகஸ்ட் 2016

கொடுப்போம்....பெறுவோம்....

 கொடுப்பதிலும் பெறுவதிலும் தான்
நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.













எதைக் கொடுக்கிறோம்.... எதைப் பெறுகிறோம்
என்பதில்தான்
வாழ்வின் ரகசியமும் சுவாரஸ்யமும்
அடங்கி இருக்கிறது.
















உண்மையைக் கொடுப்போம்
உள்ளன்பைப் பெறுவோம்.









அன்பைக் கொடுப்போம்
பேரன்பைப் பெறுவோம்.


















பூக்களைக் கொடுப்போம்
புன்னகைகளைப் பெறுவோம்.

30 ஜூலை 2016

மறக்க விடுவதேயில்லை

மறந்தது போல் நான் சென்றாலும்
நீ என்னை மறக்க விடுவதேயில்லை!!!

30 ஜூன் 2016

தலைக்கவசம

Image result for helmetமறந்து செல்லவில்லை.
                                                                மறந்தது போல் சென்று விடுகிறேன்.


29 ஜூன் 2016

வந்து செல்கிறேன்

இப்பொழுதெல்லாம்
நான் எப்படியும்
எதிர்பார்ப்பதில்லை...
அப்படியே வந்து செல்கிறேன்.

09 மே 2016

கோவில்பட்டி, சத்யபாமா தியேட்டர்

                 இன்று, சூர்யாவின் "24" திரைப்படம் பார்க்க போயிருந்தோம். கோவில்பட்டி, சத்யபாமா தியேட்டர். படம் நல்லா இருந்ததுங்க்ரதையும் தாண்டி, கோவில்பட்டில இந்த மாதிரி தியேட்டர்ல படம் பாக்குறது ஒரு தனி அனுபவம்தான். என்னோட இதே மாதிரியான முந்தைய அனுபவங்கள்  மாதிரியே இந்த அனுபவுமும். குடும்பத்தோட இந்த மாதிரி தியேட்டர்களுக்குப்  படம் பாக்க போறதா விட, வீட்டுல திருட்டு டி வி டி வாங்கி குடும்பமா உக்காந்து பாத்துரலாம். படத்தப் பாக்கவா, இவிங்கள பாக்கவா..........? முடியல....... தியேட்டர்ல, உள்ள உக்காந்து தம் அடிக்கக் கூடாதுன்னு, தம் அடிக்கிறவனுக்குத் தெரியாதா என்ன.....? தெரிஞ்சும் அடிச்சான்னா, அவன் ஒரு முடிவோடதான இருக்கான்னு அர்த்தம். பின்ன அவன்ட போயி நாம "அண்ணே, கொஞ்சம் வெளிய போயி தம் அடிங்கண்ணே" னு  சொன்னா, நம்மள படத்துல வர்ற சூர்யா பாத்து வில்லன்ஸ் லாம்  பயந்து போறமாதிரி பாத்து  "சரிங்க" னா  சொல்லுவான்...? படத்துல வர்ற காமெடியனுக்கு ஏழாவது எட்டாவது ப்ரண்டா வர்ற ஒருத்தன மாதிரி  பாத்து, வேலைய பாத்துட்டு போடா னு  சொல்ல மாட்டான்....?  அதக் கேட்டு கோபம் பொத்துகிட்டு வந்து அவன அடிக்கிறதுக்கு நான் என்ன சூர்யா வா.... இல்ல, விஜய் யா..... இல்ல தனுஷ் ஆ....இல்லைனா வேற ஏதாவது ஹீரோ வா....
               சரி, இவிங்கள  கேக்குறதுக்குதான்  நமக்கு உதறல் எடுக்குது...., தியேட்டர் ஓனர் ட  சொல்லுவோம்னு சொன்னா..... "என்ன சார் பண்றது, நாங்களும் ஸ்லைட் போடத்தான் செய்யுறோம்..... ஆனா இவிங்க நிப்பாட்ட மாட்டறாங்க னு  சொல்லிட்டு, திரும்பவும் ஸ்லைட் போடுறோம் சார்" னு  சொனாங்க..... பாவம் அவிங்களும் நம்மள மாதிரிதான் போல.  
               அடப் போங்கப்பா..... திருட்டு டி வி டி வாங்கவும் மனசு வரல...... ஊருக்குள்ள நல்ல தியேட்டரும் இல்ல.... 120 ரூவா குடுத்து ஒரு பயத்தோடையே  படத்தப்  பாக்க வேண்டியிருக்குது...... என்ன பொழப்புடா சாமி........ ஊருக்குள்ள நிம்மதியா குடுத்த பணத்துக்கு, சந்தோசமா ஒரு படத்தப் பாக்க முடியல...

01 மே 2016

ஆஹா ஓஹோ...

"ஆஹா ஓஹோ..." விசயமோ, "அட்டு" விசயமோ....அது தனிப்பட்ட என்னைப் பொறுத்தோ அல்லது தனிப்பட்ட உன்னைப் பொறுத்தோ அல்லது தனிப்பட்ட வேறு எவரையோ பொறுத்தோதானே இருக்க  முடியும். ஒரு விஷயத்தை பெரிதாக்குவதும், சிரிதாக்குவதும் கூட தனிப்பட்ட ஒருவரின் பார்வையில் தானே இருக்க முடியும். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதும், தள்ளி ஒதுக்குவதும், சில வேலைகளில் அந்த தனிப்பட்டவரின் திறமையிலும், பல நேரங்களில் விசயத்தின் வீரியத்திலும் இருக்க முடியும்.  மேலும், உண்மையை விளம்புவர்கள் மீதும்,  நம் கருத்துக்கு மாற்று கருத்துக் கூறுபவர்கள் மீதும் இயல்பாகவே வஞ்சமும் வன்மமும் வர அதிக வாய்ப்புள்ளது தானே....கண்டிப்பாக, மேதாவித் தனம் நம்மை சில இடங்களில் கோமாளியாகத்தான் ஆக்கிவிடும்.....