மறந்தது போல் சென்று விடுகிறேன்.
30 ஜூன் 2016
29 ஜூன் 2016
09 மே 2016
கோவில்பட்டி, சத்யபாமா தியேட்டர்
இன்று, சூர்யாவின் "24" திரைப்படம் பார்க்க போயிருந்தோம். கோவில்பட்டி, சத்யபாமா தியேட்டர். படம் நல்லா இருந்ததுங்க்ரதையும் தாண்டி, கோவில்பட்டில இந்த மாதிரி தியேட்டர்ல படம் பாக்குறது ஒரு தனி அனுபவம்தான். என்னோட இதே மாதிரியான முந்தைய அனுபவங்கள் மாதிரியே இந்த அனுபவுமும். குடும்பத்தோட இந்த மாதிரி தியேட்டர்களுக்குப் படம் பாக்க போறதா விட, வீட்டுல திருட்டு டி வி டி வாங்கி குடும்பமா உக்காந்து பாத்துரலாம். படத்தப் பாக்கவா, இவிங்கள பாக்கவா..........? முடியல....... தியேட்டர்ல, உள்ள உக்காந்து தம் அடிக்கக் கூடாதுன்னு, தம் அடிக்கிறவனுக்குத் தெரியாதா என்ன.....? தெரிஞ்சும் அடிச்சான்னா, அவன் ஒரு முடிவோடதான இருக்கான்னு அர்த்தம். பின்ன அவன்ட போயி நாம "அண்ணே, கொஞ்சம் வெளிய போயி தம் அடிங்கண்ணே" னு சொன்னா, நம்மள படத்துல வர்ற சூர்யா பாத்து வில்லன்ஸ் லாம் பயந்து போறமாதிரி பாத்து "சரிங்க" னா சொல்லுவான்...? படத்துல வர்ற காமெடியனுக்கு ஏழாவது எட்டாவது ப்ரண்டா வர்ற ஒருத்தன மாதிரி பாத்து, வேலைய பாத்துட்டு போடா னு சொல்ல மாட்டான்....? அதக் கேட்டு கோபம் பொத்துகிட்டு வந்து அவன அடிக்கிறதுக்கு நான் என்ன சூர்யா வா.... இல்ல, விஜய் யா..... இல்ல தனுஷ் ஆ....இல்லைனா வேற ஏதாவது ஹீரோ வா....
சரி, இவிங்கள கேக்குறதுக்குதான் நமக்கு உதறல் எடுக்குது...., தியேட்டர் ஓனர் ட சொல்லுவோம்னு சொன்னா..... "என்ன சார் பண்றது, நாங்களும் ஸ்லைட் போடத்தான் செய்யுறோம்..... ஆனா இவிங்க நிப்பாட்ட மாட்டறாங்க னு சொல்லிட்டு, திரும்பவும் ஸ்லைட் போடுறோம் சார்" னு சொனாங்க..... பாவம் அவிங்களும் நம்மள மாதிரிதான் போல.
அடப் போங்கப்பா..... திருட்டு டி வி டி வாங்கவும் மனசு வரல...... ஊருக்குள்ள நல்ல தியேட்டரும் இல்ல.... 120 ரூவா குடுத்து ஒரு பயத்தோடையே படத்தப் பாக்க வேண்டியிருக்குது...... என்ன பொழப்புடா சாமி........ ஊருக்குள்ள நிம்மதியா குடுத்த பணத்துக்கு, சந்தோசமா ஒரு படத்தப் பாக்க முடியல...
சரி, இவிங்கள கேக்குறதுக்குதான் நமக்கு உதறல் எடுக்குது...., தியேட்டர் ஓனர் ட சொல்லுவோம்னு சொன்னா..... "என்ன சார் பண்றது, நாங்களும் ஸ்லைட் போடத்தான் செய்யுறோம்..... ஆனா இவிங்க நிப்பாட்ட மாட்டறாங்க னு சொல்லிட்டு, திரும்பவும் ஸ்லைட் போடுறோம் சார்" னு சொனாங்க..... பாவம் அவிங்களும் நம்மள மாதிரிதான் போல.
அடப் போங்கப்பா..... திருட்டு டி வி டி வாங்கவும் மனசு வரல...... ஊருக்குள்ள நல்ல தியேட்டரும் இல்ல.... 120 ரூவா குடுத்து ஒரு பயத்தோடையே படத்தப் பாக்க வேண்டியிருக்குது...... என்ன பொழப்புடா சாமி........ ஊருக்குள்ள நிம்மதியா குடுத்த பணத்துக்கு, சந்தோசமா ஒரு படத்தப் பாக்க முடியல...
01 மே 2016
ஆஹா ஓஹோ...
"ஆஹா ஓஹோ..." விசயமோ, "அட்டு" விசயமோ....அது தனிப்பட்ட என்னைப் பொறுத்தோ அல்லது தனிப்பட்ட உன்னைப் பொறுத்தோ அல்லது தனிப்பட்ட வேறு எவரையோ பொறுத்தோதானே இருக்க முடியும். ஒரு விஷயத்தை பெரிதாக்குவதும், சிரிதாக்குவதும் கூட தனிப்பட்ட ஒருவரின் பார்வையில் தானே இருக்க முடியும். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதும், தள்ளி ஒதுக்குவதும், சில வேலைகளில் அந்த தனிப்பட்டவரின் திறமையிலும், பல நேரங்களில் விசயத்தின் வீரியத்திலும் இருக்க முடியும். மேலும், உண்மையை விளம்புவர்கள் மீதும், நம் கருத்துக்கு மாற்று கருத்துக் கூறுபவர்கள் மீதும் இயல்பாகவே வஞ்சமும் வன்மமும் வர அதிக வாய்ப்புள்ளது தானே....கண்டிப்பாக, மேதாவித் தனம் நம்மை சில இடங்களில் கோமாளியாகத்தான் ஆக்கிவிடும்.....
23 ஏப்ரல் 2016
செல்லம்மா
இறுதியில், உன் இதழ் பதியுமானால்.... நான் எத்தனை முறை வேண்டுமானாலும் என் கன்னத்தை உன் கரங்களுக்குத் தருவேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




